Friday, July 31, 2015

விஷால் அவர்களே!

விஷால் அவர்களே!
நாய்களுக்காக நீங்கள் வீதியில் இறங்கி போராடுவது கண்டு உங்கள் கருணை உணர்வு மிக்க நடிப்பு எமக்கு மெய் சிலிர்க்க வைக்கிறது.
அண்மையில் ஆந்திராவில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் ஏன் கருணை நடிப்பு காட்டவில்லை? அந்த தமிழர்கள் நாய்களை விடக் கேவலமானவர்களா? என்று நாம் கேட்கப் போவதில்லை.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே. அவர்களுக்காக நீங்கள் ஏன் கவலை நடிப்பு காட்டவில்லை? அவர்களும் நாய்களை விடக் கேவலமானவர்களா? என்று நாம் கேட்கப் போவதில்லை.
நாய்க்காக , மாட்டுக்காக எல்லாம் தாராளமாக நீங்கள் நன்றாக போராடுங்கள். ஆனால் மனிதர்களுக்காக எப்போது போராடப் போகிறீர்கள்? என்றும் நாம் கேட்கப் போவதில்லை.
ஆனால் உங்களிடம் ஒன்றேயொன்றுதான் நாம் தாழ்மையாக கேட்க விரும்புகிறோம். அது என்னவெனில்,
"ஈழத் தமிழனுக்கு தமிழீழம் வாங்கிக் கொடுக்காமல் ஓயமாட்டேன் என்று மட்டும் தயவு செய்து அறிக்கை விட்டுவிடாதீர்கள்".
ஏனெனில் இந்த நடிப்பை தாங்கும் சக்தி எமக்கு இல்லை. எம்மை விட்டுவிடுங்கள்.
இப்படிக்கு
அப்பாவி ஈழத்தமிழர்கள்.

No comments:

Post a Comment