Friday, July 31, 2015

தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
ஒரு வருடத்திற்குள் தமிழ்களுக்கு தீர்வு என்கிறார் சம்பந்தர் அய்யா.
மாற்றத்திற்காக தமக்கு வாக்களிக்குமாறு கோருகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
.
அதிக ஆசனங்கள் தந்தால் அரசுடன் பேரம் பேசுவோம் என்கிறார் முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா.
ஆனால் இவர்கள் எல்லோராலும் இத்தனை வருடமும் எந்த தீர்வும் பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல இனியும் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாது என்பதே உண்மை.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இன மக்கள் பாராளுமன்ற பாதை மூலம் ஒருபோதும் தீர்வு பெற்றுவிட முடியாது.;
கம்யுனிஸ்ட் கட்சி தலைவா காலம் சென்ற தோழர் சண்முகதாசன் அவர்கள் தேர்தல் பாதை குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
“இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும். அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது”
பாராளுமன்ற பாதை மூலம் எந்த தீர்வையும் பெற்றுவிட முடியாது. இதுவே வரiலாறு எமக்கு கற்று தரும் பாடமாகும்.
தேர்தல் பாதையை நிராகரிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

No comments:

Post a Comment