Friday, July 31, 2015

ஸ்டாலினால் அடிவாங்கிய இளைஞனுக்காக நியாயம் கேட்ட ஜெயா அம்மையார் ஸ்டாலினால் கொல்லப்பட்ட அகதி சிறுவனுக்காக நீதி கிடைக்க செய்வாரா?

 ஸ்டாலினால் அடிவாங்கிய இளைஞனுக்காக நியாயம் கேட்ட ஜெயா அம்மையார் ஸ்டாலினால் கொல்லப்பட்ட அகதி சிறுவனுக்காக நீதி கிடைக்க செய்வாரா?
• அடிவாங்கிய இளைஞன் ஸ்டாலின் அங்கிள் தன்னை அடிக்கவில்லை என்று கூறியபின்பும் ஸ்டாலினை ஜெயா அம்மையார் கண்டித்திருப்பது அகதி சிறுவனுக்கும் இதே பொல் நியாயம் கிடைக்க செய்வாரா என்ற கேள்வியை தோற்றுவித்தளளது.
பெறுனர்: செல்வி ஜெயலலிதா
முதலமைச்சர்
தமிழ்நாடு 
இந்தியா
மதிப்புக்குரிய முதலமைச்சர் ஜெயா அம்மையார் அவர்களுக்கு!
1983ம் ஆண்டளவில் தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்த ஈழத்து தமிழ் சிறுவன் ஒருவனை கலைஞர் கருணாநிதி அவர்கள் தத்தெடுத்து வளர்த்தார். அச் சிறுவனுக்கு மணி என்று பெயரும் சூட்டியிருந்தார்.
தற்போது அந்த சிறுவன் எங்கேயென்று தெரியவில்லை. சொத்தில் பங்கு கொடுக்க வேண்டிவரும் என்று எண்ணி அந்த சிறுவன் ஸ்டாலின் குடும்பத்தவர்களால் விரட்டப்பட்டதாக முன்னர் அறிந்தோம். ஆனால் அவ் அப்பாவி அகதி சிறுவன் விரட்டப்படவில்லை மாறாக கொல்லப்பட்டுவிட்டதாக தற்போது அறியவருகிறது.
ஸ்டாலினுடன் நீண்டகாலம் ஒன்றாக இருந்த பரிதி இளம்வருதி அவர்களும் தி.மு.க வை விட்டு வெளியேறிய சமயம் இந்த அகதி சிறுவன் எங்கே எனக் கேட்டிருந்தார். அவருடைய பேட்டி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தன. பரிதி அவர்கள் இப்போது உங்கள் கட்சியில் இருக்கின்றார்.
எனவே தயவு செய்து இந்த அப்பாவி அகதி சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதை விசாரித்து அறியத்தருமாறு ஈழத் தமிழர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தோழர் பாலன்
ஈழ தமிழ் அகதி
லண்டன்
03.07.2015
பி.கு- இப் பிரதி முறையே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி , டில்லி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி , மனித உரிமைக் கமிசன் தலைமை நீதிபதி அகியோருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment