Friday, July 31, 2015

விஜயகலாவுக்கு அளிக்கும் வாக்கு,

 தேர்தலில் யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கலாம். ஆனால் யாருக்கு போடக்கூடாது என்பதில் தமிழ் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.
தமிழ்மக்கள் ஜ..தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு ஒருபோதும் வாக்கு போடக்கூடாது.
மாறி மாறி ஆட்சி புரிந்த இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்காது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வந்துள்ளன.
யாழ் மாவட்டத்தில் இம்முறை ஜ.தே.க கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கக் கூடாது. ஆம், தமிழ் மக்கள் ஜ.தே.க சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்கு போடக்கூடாது.
விஜயகலாவுக்கு அளிக்கும் வாக்கு,
(1)ஜ.தே.க யாழ் நூலகத்தை எரித்தமையை சரி என்று ஏற்றுக் கொள்வதற்கு ஒப்பாகும்
(2)ஜ.தே.க 1983ல் ஏற்படுத்திய இனக் கலவரத்தை சரி என்று ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும்.
(3)தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தமை சரி என்று பொருள் ஆகும்
(4) சிறையில் 53 தமிழர்களை கொன்றமை சரி என்று பொருள் ஆகும்.
(5) ஜ.தே.க மேற்கொண்டு வரும் தமிழ் இன அழிப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும்.
கடந்த 100 நாள் ஆட்சியில்,
• கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
• காணாமல் போனோர் பிரச்சனை தீhக்கப்படவில்லை
• அகதிகள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
இந் நிலையில் எந்த முகத்துடன் ஜ.தே. க சார்பில் விஜயகலா மகேஸ்வரன் தமிழ்மக்களிடம் வாக்கு கேட்கிறார்?
கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கவும,; சம்பாதித்த பணத்தை கட்டிக் காக்கவுமே விஜயகலா மகேஜ்வரன் போட்டீ போடுகிறார். தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்கிறார்.
எனவே தமிழ் மக்கள் இம் முறை விஜயகலா மகேஸ்வரனுக்கும் அவரது ஜ.தே. க கட்சிக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

No comments:

Post a Comment