Friday, July 31, 2015

சம்பந்தர் அய்யாவின் சந்தர்ப்பவாதம்!

 சம்பந்தர் அய்யாவின் சந்தர்ப்பவாதம்!
செய்தி- ஒரு வருடத்திற்குள் தீர்வு பெறப்படும்- சம்பந்தர் அய்யா வாக்குறுதி.
தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வு பெறப்படும் என சம்பந்தர் அய்யா கூறியுள்ளார்.
தேர்தல் காலங்களில் மட்டுமே தொகுதிக்கு விஜயம் செய்யும் சம்பந்தர் அய்யா இம் முறையும் தமிழ் மக்களை ஒருமித்து தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார்.
வழக்கம்போல் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறுவோம் என இம்முறையும் கூறியிருக்கும் சம்பந்தர் அய்யா, ஆனால் இந்தமுறை ஒரு வருடத்திற்குள் பெறப்படும் என கால எல்லையுடன் உறுதியளித்துள்ளார்.
இங்கு நமது கேள்வி என்னவெனில்,
• கடந்த தேர்தல்களிலும் இதையே கூறி வென்றீர்கள். ஆனால் ஏன் உங்களால் தீர்வு பெறப்படவில்லை?
• இதுவரை எந்த தீர்வையும் பெற முடியாத உங்களால் இம் முறை எப்படி பெறுவீர்கள் என்பதை மக்களுக்கு தெளிவாக கூறமுடியுமா?
• குறிப்பிட்டபடி ஒரு வருடத்திற்குள் தீர்வை பெற முடியாது போனால் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்வீர்களா?
சம்பந்தர் அய்யா அவர்களே!
புலிகள் பயங்கரவாதிகள் என்கிறீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறீர்கள். அப்படியென்றால் அவர்கள் ஏற்படுத்திய தமிழ்தேசிய கூட்டமைப்பை எப்படி பயன்படுத்துகிறீர்கள்?
மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. மக்கள் உங்களை நன்கு இனம் கண்டு கொண்டுள்ளார்கள்.
உங்களுக்கு வாக்களிபதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதுபோல் உங்களுக்கு வாக்களிக்காது போவதால் எந்த நட்டமும் தமிழ் மக்களுக்கு மேலதிகமாக எற்படப்போவதில்லை.
இந்த உண்மையை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துவிட்டார்கள் என்பதை தேர்தல் முடிவு வெளிவரும்போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

No comments:

Post a Comment