Friday, July 31, 2015

நாங்கள் என்ன வெங்காயங்களா?

 நாங்கள் என்ன வெங்காயங்களா?
மகிந்த ராஜபக்சவுடன் கனிமொழி கைகுலுக்கிய போது துரோகம் என்றார்கள்.
மகிந்த ராஜபக்சவுடன் திருமாவளவன் கைகுலுக்கிய போது துரோகி என்றார்கள்.
மகிந்த ராஜபக்சவுடன் சுப்பிரமணியசுவாமி கை குலுக்கியபோது துரோகி என்றார்கள்
ஆனால் மகிந்தவுடன் அப்துல் கலாம் கை குலுக்கியது ஏன் என்று கேட்டால் "தாம் தமிழா,வீர வணக்கம் செலுத்துவோம் "என்கிறார்கள்.
அப்படியென்றால் நாம் என்ன வெங்காயங்களா?
பாடகி சித்திரா பாடுவதற்கு கொழும்பு செல்லக்கூடாது என்றார்கள்
நடிகை அசின் நடிக்க கொழும்பு செல்லக்கூடாது என்றார்கள்.
விஜய் டிவி பாடகர்கள் கொழும்பு செல்லக்கூடாது என்றார்கள்.
அப்படியென்றால் கலாம் மட்டும் எப்படி கொழும்பு செல்லலாம் என்று கேட்டால்
அவர் அரசியல்வாதி இல்லை. எனவே போகலாம் என்கிறார்கள்.
அப்ப சித்திராவும் அசினும் அரசியல்வாதிகளா என்று கேட்டால்
எங்களை மனிதாபிமானம் அற்றவர்கள் என்கிறார்கள்.
என்னங்கடா நீங்களும் உங்கட நியாயமும்?

No comments:

Post a Comment