Friday, July 31, 2015

என்னது தந்தை செல்வா இறந்துவிட்டாரா?

என்னது தந்தை செல்வா இறந்துவிட்டாரா?
யாழ் மருத்துவமனையில் கடந்த 45 வருடங்களாக கோமாவில் இருந்த நோயாளி நேற்றைய தினம் நினைவு திரும்பினார்.
மருத்துவமனை வாசல் எங்கும் காணப்பட்ட தமிழரசுக்கட்சி போஸ்டர்களை கண்டதும் "தந்தை செல்வா நலமாக இருக்கிறாரா? " என வினாவினர்.
தந்தை செல்வா இறந்துவிட்டார் என அருகில் இருந்த டாக்டர் துயரத்துடன் கூறினார்.
"என்னது தந்தை செல்வா இறந்துவிட்டாரா? " என ஆச்சரியத்துடன் கேட்ட அவ் நோயாளி "அப்ப இப்போது யார் தமிழ் மக்களுக்கு வழிகாட்டுவது? " என அக்கறையுடன் வினாவினார்.
"நாங்கள் தமிழர்விடுதலைக் கூட்டணி அமைத்து தமிழீழம் கேட்டோம். பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைத்து போராடினோம். இப்ப மீண்டும் தமிழரசுக்கட்சியில் சமஸ்டி கேட்கிறோம். விரைவில் எமது தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தவுள்ளோம்" என்று பதில் அளித்தார் அந்த டாக்டர்.
"என்னது மீண்டும் முதலில் இருந்தா? அது சரி, மாவை சேனாதிராசா என்பவர் யாh? "; என்று நோயாளி அப்பாவியாக கேட்டார்.
இதைக் கேட்டதும் டாக்டர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இப்பொது டாக்டர் கோமாவில் இருப்பதாக உதயன் பெப்பர் செய்தி போட்டுள்ளது.
யாவும் கற்பனை அல்ல.
இது சிறுகதையோ அல்லது சிரிப்பு கதையோ அல்ல. 
கொஞசம் சிந்திக்கதூண்டும் முயற்சி. அவ்வளவே!

No comments:

Post a Comment