Sunday, May 18, 2014

மே தின வாழ்த்துகள்!

மே தின வாழ்த்துகள்!

“உழைக்கும் மக்கள் இழப்பதற்கு
உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை.- ஆனால்
அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது” - கால் மாக்ஸ்

மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனை வழிகாட்டலில்
உழைக்கும் மக்களின் ஜக்கியத்தின் மூலம்
புதிய ஜனநாயகப் புரட்சியை மேற்கொள்வோம்!

உழைக்கும் மக்கள் அனைவருக்கும்
எமது புரட்சிகர மேதின வாழ்த்துகள்.

கலைஞர் அவர்களே!

கலைஞர் அவர்களே!

• கடலிலே தூக்கியெறிந்தாலும் கட்டுமரமாகி தமிழர்களுக்கு பயன்படுவேன் என்றீர்கள். ஆனால் தேர்தலில் உங்கள் வெற்றிக்காக 7 பேர் விடுதலைக்கு எதிராகக் குரல் கொடுத்தீர்கள்.

• சிதறு தேங்காயாக உடைத்தாலும் தமிழ் மக்களுக்கு உண்ண பயன்படுவேன் என்றீர்கள். ஆனால் உங்களின் சுய நல அரசியலுக்காக ரயில் குண்டு வெடிப்பை முஸ்லிம் மக்கள் மீது சுமத்துகிறீர்கள்.

• தமிழ் மக்களுக்காக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தேன் என்றீர்கள். ஆனால் முள்ளிவாயக்காலில் 40ஆயிரம் தமிழர்கள் அழிக்கப்ட்டபோது துரோக காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்றி நாடகம் ஆடினீர்கள்.

• பல்லிகும் கொடும் தேளுக்கும் மத்தியில் பாளை கொடும் சிறையில் தமிழ் மக்களுக்காக வாடியதாக கதை எழுதினீர்கள். ஆனால் பதவிக்காகவும், குடும்பத்திற்காகவும் நீங்கள் தமிழ் மக்களை கைவிட்டதைக் கண்டோம்.

சென்னை ரயில் குண்டு வெடிப்பை
ஆண்டவர் நீங்கள் கண்டித்தீர்கள்.
ஆள்பவர் அம்மையார் கண்டிக்கிறார்.
வாய்திறக்காத மன்மோகன்சிங்கும் கண்டிக்கிறார்.
ஆயிரக் கணக்கில் முஸ்லிம்களைக் கொன்ற மோடியும் கண்டிக்கிறார்.

குண்டு வைத்தவன் மனநோயாளி இல்லை என்றால்
உங்களிடம் நாம் கெட்க ஒரு கேள்வி உண்டு.
இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளின் அராஜகம்தானே
சாதாரண மனிதனையும் மிருகமாக மாற்றுகிறது.
குண்டு வைக்க தூண்டுகிறது.
இதை உங்களால் மறுக்க முடியுமா?

குண்டு வைத்தது யார் என்று இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
விசாரணையே முறையாக இன்னும் ஆரம்பிக்காத நிலையில்
அவசரப்பட்டு ஏன் முஸ்லிம் மக்கள் மீது பழியை போடுகிறீர்கள்?

பி.ஜே.பி ஆட்சி வரப் போகின்றதற்காக
அந்த ஆட்சியில் உங்கள் குடும்ப நலத்திற்காக இடம் பெறும் பொருட்டு
உங்களை நம்பிய முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்ய எப்படி மனம் வந்தது?

• காஸ்மீரில் தினமும் அப்பாவி மக்களை கொல்லும் இந்திய ராணவத்தை

• சதீஸ்கரில் ஆதிவாசிகளை நக்சலைட்டுகள் என கொல்லும் இந்திய ராணுவத்தை

• மணிப்பூரில் அப்பாவி பெண்களை கற்பழிக்கும் இந்திய ராணுவத்தை

இதுவரை கண்டிகக்காத உங்களுக்கு
ரயில் குண்டு வெடிப்பை கண்டிக்க
என்ன தகுதி இருக்கு?

நீங்கள் உலகத் தமிழினத் தலைவர் அல்ல
நீங்கள் உலக மகா கேவலம்.
சீ.. வெட்கம்.

• வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தமிழ் அகதிகளை மட்டும் சிறையில் அடைக்கும்.

• வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
தமிழ் அகதிகளை மட்டும் சிறையில் அடைக்கும்.

கடந்த வாரம் 10 தமிழ் அகதிகள் தஞ்சம்கோரி தமிழ்நாட்டுக்கு சென்றனர். அவர்களை இந்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இத்தனைக்கும் அதில் 5 பேர் குழந்தைகள்.

இதில் கொடுமை என்னவென்றால் இரு குழந்தைகளை பொறுப்பேற்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெற்றோர் தனியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இது என்ன சட்டம்? என்ன நியாயம்?
இந்த அகதிகள் முகாமில் தங்க ஏன் அனுமதிக்கப்படவில்லை? இவர்களால் பாதுகாப்பிற்கு என்ன குந்தகம் வந்துவிடப் போகிறது? எதற்காக இவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்?

திபேத் அகதிகள் முழு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ் அகதிகள் மட்டும் சிறையிலும், சிறப்புமுகாமிலும் அடைக்கப்படுகிறார்கள். தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?

இலை வென்றால் ஈழம் மலரும் என்றார்கள். ஆனால் அந்த ஈழத் தாயின்(?) ஆட்சியில் அகதியாக வந்தவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனரே? சிறையில் அடைக்கும் கொடுமையை செய்பவர்கள் ஈழம் பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது?

ஏழுபேர் விடுதலைக்கு முந்திக் கொண்டு அறிக்கை விடுத்தவர் கலைஞர். சென்னை ரயில் குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு அறிக்கை விட்டவர் கலைஞர். இந்த அகதிகள் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பாக இதுவரை அறிக்கைகூட விடவில்லையே! இத்தனைக்கும் இவர் உலகத் தமிழினத் தலைவராம்?

இலங்கை அரசின் பயங்கரவாத பட்டியல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என லண்டன,கனடா அமெரிக்க நாடுகள் தெரிவித்துவிட்டன. ஆனால் இந்திய அரசு அதனை ஏற்று லண்டனில் இருந்து வந்த ஒரு தமிழரை திருப்பி அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அகதிகளாக உள்ள 42 பேரை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைக்க முனைகிறது.

இத்தனைக்கும் பிறகும்கூட இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்யும் என சொல்லும் சில நம்மவர்களின் அறியாமையை என்னவென்று அழைப்பது?

• என்ன கொடுமை இது?

• என்ன கொடுமை இது?

சிறுவர்களை படையில் சேர்ப்பது குற்றம் என்று கூறும் ஜ.நா மன்றம்
சிறுவர்களை துறவறத்தில் சேர்ப்பது குற்றம் என ஏன் சொல்வதில்லை?

விளையாட்டில் ஈடுபட வேண்டிய குழந்தைகளை 
கடவுள் , மத விபரம் அறியாத சிறு வயதில்
அவர்களைப் பெற்றார் துறவறத்தில் ஈடுபடுத்துவது
மன்னிக்கப்பட முடியாத குற்றம் ஆகும்!

ஒரு புறத்தில் யுத்தம் குழந்தைகளை தின்கிறது.
இன்னொரு புறத்தில் மதம் அவர்களை தின்கிறது.
எல்லா பக்கத்திலும் வறுமை அவர்களை துரத்துகிறது.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவலத்தை
கண்டும் காணாமல் மௌனமாக
சகித்துக் கொண்டு இருக்கப் போகிறோம்?

என்ன கொடுமையான சமூகம் இது?

• இந்திய அரசே! பேராசிரியர் சாய்பாபாவை உடனே விடுதலை செய்!

• இந்திய அரசே!
பேராசிரியர் சாய்பாபாவை உடனே விடுதலை செய்!

புரட்சிகர ஜனநாயக செயற்பாட்டாளராகிய,
டில்லி பல்கலைகழக பேராசிரியர் சாய்பாபா
மகாராஷ்ரா பொலிசாரினால் கடத்தப்பட்டுள்ளார்.
அவர் பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டு
கொலை செய்யப்படலாம் என அஞ்சப்படுகிறது.

மாவோயிஸ்டுகள் என்று சொல்லி
அப்பாவிகளை கடத்திக் கொல்வது
பெண்களை கற்பழித்து கொலை செய்வது என்று
சட்டத்தைக் கையில் எடுத்து பொலிஸ் செய்யும்
அராஜகம் அளவில்லாமல் செல்கிறது.

காஸ்மீர் தீவிரவாதி சுட்டு இறந்த ராணுவத்திற்கு
வீரவணக்கம் செலுத்தும் தலைவர்கள,
சென்னை ரயிலில் குண்டு வெடித்தமைக்கு
தாமதமின்றி அறிக்கை விட்ட தலைவர்கள்,
தொடரும் இந்த பொலிஸ் அராஜகம் குறித்து
வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருவது ஏன்?

அரச பயங்கரவாதம் குறித்து கண்டிக்காதவர்கள்
தனி நபர் பயங்கரவாதம் குறித்து கண்டிப்பதற்கு
எந்த வித தகுதியும் அற்றவர்களாவர்.

பொலிஸ் அராஜகத்தை கண்டிப்போம்!
சாய்பாபா விடுதலைக்கு குரல் கொடுப்போம்!

உயிர் வலி - ( சக்கியடிக்கும் சத்தம்)

உயிர் வலி - ( சக்கியடிக்கும் சத்தம்)

இந்திய நீதித்துறையின் மனட்சாட்சியை உறையவைக்கும் ஆவணப்படம்.

நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என ஆவலுடன் இருந்தேன்.
மும்பையில் இருக்கும் நண்பர்கள் இதன் பிரதி அனுப்பி உதவினார்கள்.
எனது ஆவலை பூர்த்தி செய்த அவர்களுக்கு முதலில் எனது நன்றிகள்.

மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படம் என குறிப்பிட்டிருந்தாலும் இது பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிருபிக்கின்றது. அந்த விதத்தில் இந்த ஆவணப்படம் தனது குறிக்கோளை நிறைவேற்றியுள்ளது எனலாம்.

இந்த ஆவணப்படத்தை தயாரித்து மக்களை மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்க வைத்த தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் வரலாற்றில்; ஒரு சிறந்த பங்களிப்பை நல்கியுள்ளனர் என்பதில் சந்தேகமே இல்லை.

பேரறிவாளன் தமிழை நேசித்தார். அவர் ஈழத் தமிழர்களுக்கு உறுதியான ஆதரவாளராக இருந்தார். இதைவிட அவர் வேறு எந்த தவறும் செய்யவில்லை.

இத்தனை கொடும் சிறைவாசத்திற்கு பின்னரும்,
ஏன் அவர் தூக்கு கயிற்றின் கீழ் நின்றபோதும்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்தது தவறு என்று ஒருபோதும் கூறவில்லை.
அல்லது அந்த ஆதரவை நிறுத்தி மன்னிப்பு கோரவும் இல்லை.
இந்தளவு தூரம் தங்களுக்கு ஆதரவான ஒரு உறவை
ஈழத் தமிழர்கள் ஒருபோதும் மறக்கவே கூடாது.

இந்த ஆவணப்படத்தை தவறாது பார்ப்பதும்
பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுப்பதும்
ஒவ்வொரு ஈழத் தமிழன் கடமையாகும்!

சிறீயண்ணா உயிருடன் இருந்திருந்தால் இந்தியா உதவியிருக்குமா?

 சிறீயண்ணா உயிருடன் இருந்திருந்தால்
இந்தியா உதவியிருக்குமா?

• சகோதரப் படுகொலைகள் நடந்திருக்காவிடின்
தமிழீழம் கிடைத்திருக்குமா?

பல வருடங்களுக்கு பின்னர் கடந்தவாரம் “டெலொ” தலைவர் சிறீயண்ணா அவர்களுக்கு சிலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதில் அவர்கள் “சிறீயண்ணா உயிருடன் இருந்திருந்தால் இந்தியா உதவியிருக்கும் என்றும் அவர் கொல்லப்பட்டிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும ” என்றும் கூறியிருக்கின்றனர்.

சிறீயண்ணாவுக்கு அஞ்சலி என்னும் பெயரில் சில இந்திய விசுவாசிகள் மீண்டும் 1983ம் ஆண்டு நிலைக்கு தமிழ் மக்களை கொண்டு செல்ல கனவு காண்கின்றனர். ஆனால் அவர்கள் எப்படித்தான் கனவு கண்டாலும் அல்லது தலை கீழாக நின்றாலும் இனி இந்தியாவை ஈழத் தமிழர்கள் நம்பப் போவதில்லை. அந்தளவு தூரத்திற்கு இந்திய அரசு எமது நண்பன் அல்ல அது எம்மை அழிக்கும் எதிரி என்பதை தமிழ் மக்கள் இனம் கண்டு விட்டார்கள்.

1984ல் பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இயக்கம் யாழ்ப்பாணத்தில் இரு வெள்ளையினத்தவர்களை கடத்தினார்கள். சிறையில் இருக்கும் தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா கைதிகளை விடுதலை செய்து அந்த வெள்ளைக்காரர்களை காப்பாற்ற முன்வந்தார்.

ஆனால் அப்போதைய இந்திய பிரதமரான இந்திராகாந்தி உடனே சென்னையில் இருந்த பத்மநாபா மற்றும் முன்னனி தலைவர்களை இரகசியமாக கைது செய்து ஒரு ஓட்டலில் வைத்து உதைத்து அந்த வெள்ளைக்காரர்களை விடுதலை செய்ய வைத்தார். இது அப்போது அனைவரும் அறிந்த செய்தி.

இந்கு எனது கேள்வி என்னவெனில் யாரே இரு வெள்ளைக்காரர்களுக்காக நடவடிக்கை எடுத்த இந்திய அரசு தனது விசுவாசியான சிறீயண்ணாவை ஏன் காப்பாற்ற முயலவில்லை? அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில்தானே இருந்தார். அவரை கைது செய்து மிரட்டியிருந்தால் சிறீயண்ணாவையும் அவரது போராளிகளையும் காப்பாற்றியிருக்கலாம்தானே?

அதுமட்டுமல்ல, டெலோ இயக்கத்திற்கு பின்பு புலிகள் இந்திய விசுவாச இயக்கங்களான ஈபிஅர்எல்எவ் மற்றும் ஈரோஸ் இயக்கங்களை தடை செய்தபோதும் இந்திய அரசு மௌனமாகத்தானே இருந்தது? ஏன் அதை தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல சம்பிரதாயத்திற்காகக்கூட ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே?

உண்மையில் இந்திய அரசு தனது உளவுப்படை மூலம் இயக்கங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கியது. இயக்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி அழிய வேண்டும் என்று விரும்பியது. அதற்கான வேலைகளையே அது செய்தது.

எனவே சிறீயண்ணா இருந்திருந்தால் இந்திய அரசு உதவியிருக்கும் என்பதும் அவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் தமிழீழம் கிடைக்க இந்திய அரசு உதவியிருக்கும் என்பதும் தற்போது இந்திய அரசைக் காப்பாற்ற முயலும் சில விசுவாசிகளின் தவறான கதைகள் ஆகும்.

புழு கூட மிதிபடும்போது துடித்து எழும். ஆனால் இத்தனை அழிவுக்கும் பிறகும் இந்த அழிவுகளுக்கு காரணமான இந்திய அரசை நியாயப்புடுத்த முயலும் இந்திய விசுவாசிகள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.

இந்திய அரசு எமது நண்பன் அல்ல. அது எம்மை அழிக்கும் எதிரி.
இந்திய அரசையும் அதன் ஏவல் நாய்களையும் தூக்கியெறிவோம்.

• புத்தரின் போதனைகளை இதைவிட கேவலப்படுத்த முடியுமா?

• புத்தரின் போதனைகளை இதைவிட கேவலப்படுத்த முடியுமா?

உலக மக்கள் தொகை 700 கோடி. ஆனால் 1200 கோடி மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது.

உணவு இன்றி எந்த மனிதனும் பட்டினி இருக்கவில்லை. மாறாக உணவை வாங்க பணம் இன்றியே மக்கள் பட்டினியால்வாடுகின்றனர்.

இலங்கையிலும் தேவையான அளவு உணவு இருந்தும் அதை வாங்க பணம் இன்மையினாலே , வறுமையினாலே மக்கள் வாடுகின்றனர்.

“தமிழ் மக்களின் நன்மைக்காக புலிப் பயங்கர வாதிகளை அழித்ததாக” மகிந்த ராஜபக்ச கூறுகிறார். ஆனால் இந்த புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் யாரும் பட்டினியாக இறந்தாக செய்திகள் வரவில்லை. யாரும் வறுமையினால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை.

ஆனால் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் கழிந்தவிட்ட பின்பு தமிழ் மக்களின் நிலை என்ன?

வன்னியில் வறுமை காரணமாக தனது 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த பெண் பற்றி செய்தி வருகிறது.

இன்னொரு புறத்தில் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக இரண்டு சிறுவர் திருடியதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக அறிகிறோம்.

யுhழ்ப்பாணத்தில் விபச்சாரம் செய்த பெண்கள் கைது என்று தினமும் செய்திகள் வருகின்றன.

இதுதான் இலங்கை அரசின் சாதனையா?
இதற்காகத்தான் யுத்தம் செய்யப்பட்டதா?

தமிழ் பகுதிகளில் மட்டுமல்ல சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலும் இதே நிலைதானே காணப்படுகிறது.

சிறுவர் பாலியலில் இலங்கை உலகில் முதலிடம் வகிக்கிறது. யுத்த காலத்தில் கூட இந்த நிலை இருக்கவில்லையே? யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பின்பு ஏன் இந்த நிலை?

குடி தண்ணீரில் கம்பனி ரசாயணக் கழிவு கலக்கிறது என்று கூறிய நீர்கொழும்பு மக்கள் மீது ராணுவம் துப்பாக்p சூடு நடத்துகிறது.

ஆனால் மகிந்த அரசுவோ எந்தவித கவலையும் இன்றி மக்கள் மீது எந்த அக்கறையும் இன்றி போர் வெற்றிவிழா நடத்துகிறது.

தனது நாட்டு மக்கள மீது யுத்தம் செய்து அதனை வெற்றிவிழாவாக கொண்டாடும் நாடு உலகில் இலங்கை மட்டுமே இருக்க முடியும்.

இங்கு நான் கேட்க விரும்புவது என்னவெனில் 2500 வருட புத்த பாரம்பரியம் மிக்க நாடு இலங்கை என்று கூறிக்கொண்டு யுத்த வெற்றிவிழா எப்படி கொண்டாட முடிகிறது?

புத்தரின் போதனைகளை இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியுமா?

“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.

• “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.

தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் நினைவு தினம் இன்று ஆகும்.(16.05.2007)

“தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர் புலவர் கலியபெருமாள் அவர்கள்.

1983 க்கு முன்னர் பெரும்பாலும் அனைத்து இயக்கங்களும் இந்திய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தனர். பின்னர் இந்திய அரசுக்கு அஞ்சி தொடர்புகளை துண்டித்துவிட்டனர் அல்லது வெளிப்படையாக தொடர்பு கொள்வதை தவிர்த்தனர்.

தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசனனின் தலைவர் என கருதப்பட்ட புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில் எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில் எழுதிய வரிகள் வருமாறு,

சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல் தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார். ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினேன். அடுத்து உங்கள் கட்சி ஆதரிக்கின்றதா என்று இராகவன் கேட்டார். எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்று சொன்னேன். வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் நல்ல உறவு இருக்கிறது. மாவோ எழுதிய ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்.

நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். அதன் பின் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது பற்றி பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள் அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும் மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர். பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசும்போது நான் பார்த்த தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள் தொண்டர் அவர் என வாயாரப் புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தோழர் தமிழரசன் புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து இயக்க தலைவர்களையும் சந்தித்து உதவி பெற முயன்றார். ஆனால் எந்த இயக்க தலைவர்களும் உதவி செய்ய மட்டுமல்ல அவரை சந்திப்பதற்கே மறுத்துவிட்டார்கள்.

புலிகள் இயக்கம் இறுதிக் காலங்களில் 303 ரைபிள, ரிப்பிட்டர் போன்ற அந்த கால ஆயுதங்களை பாவிக்காமல் புதைத்ததாக அறிகிறோம். ஆகக்குறைந்தது அந்த மண்ணில் புதைத்த ஆயுதங்களையாவது தோழர் தமிழரசனிடம் கொடுத்திருக்கலாம். அவர்கள் தாங்களும் கொடுக்கவில்லை. எங்களையும் கொடுக்கவிவில்லை.

ஒரு வேளை தமிழரசன் விரும்பிவாறு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தவிர்த்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது!

நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்பட்டமைக்கு கண்ணீர் வடிக்கும் அமெரிக்க ஓநாய்!

• நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்பட்டமைக்கு
கண்ணீர் வடிக்கும் அமெரிக்க ஓநாய்!

நைஜீரியா நாட்டில் பல மாணவிகளை முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் ஒன்று கடத்தியுள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனத்தை மனிதாபிமான உணர்வுள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும்.

ஆனால் இந்த அக்கிரமத்தை கண்டிக்க அமெரிக்க அரசுக்கு எந்த அருகதையும் கிடையாது. ஏனெனில் உலகெங்கும் பல இடங்களில் மாணவிகளை அமெரிக்க அரசு கொன்று வருகிறது.

ஒருபுறம் அப்கானிஸ்தானில் ஆள் இல்லா விமானம் மூலம் சிறுவர்கள் மற்றும் அப்பாவி மக்களை கொல்லும் அமெரிக்க அரசு மறுபுறம் நைஜீரிய மாணவிகள் கடத்தலுக்கு போலிக் கண்ணீர் வடிக்கிறது.

நைஜீரியாவில் மாணவிகளைக் கடத்திய முஸ்லிம் அடிப்படைவாத இயக்கத்தைக் கண்டிப்பதாக கூறும் அமெரிக்க அரசு, மத அடிப்படைவாத சவூதிஅரோபிய அரசை கட்டிக்காத்து வருகிறது. அந்த அரசுக்கு தொடர்ந்தும் இராணுவ உதவி செய்து வருகிறது.

நைஜீரியாவில் மாணவிகளைக் கடத்திய அமைப்பைக் கண்டிக்கும் உலக நாடுகள், இலங்கையில் சிறுமி விபூசிகாவைக் கடத்திய இலங்கை அரசைக் கண்டிக்கவில்லை. அது ஏன்? நைஜீரியாவில் எண்ணெய் வளம் உண்டு, வன்னியில் கொள்ளையடிக்க ஒரு வளமும் இல்லை. அதுதான் காரணமா?

ஓசாமா பின்லேடனை உருவாக்கியதும் அமெரிக்க அரசுதான். புpன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அவனைக் கொன்றொழித்ததும் அதே அமெரிக்காதான்.

இன்னும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவின் இந்த போக்கிரித்தனத்தை அனுமதிக்கப் போகிறோம்?

இறுதி வெற்றி உறுதி எமக்கு!

• இறுதி வெற்றி உறுதி எமக்கு!

முதலில் நாம் உரிமைகளை இழந்தோம்
பின்னர் நாம் உடமைகளை இழந்தோம்
இறுதியில் நாம் உயிர்களை இழந்தோம் - ஆனால்
இன்னமும் நாம் உணர்வுகளை இழக்கவில்லை.

இழப்பின்றி எந்தப் புரட்சியும் உலகில் வென்றதில்லை.
எந்த விடுதலையும் போராட்டம் இன்றிக் கிடைப்பதில்லை.

தீயில் கருகும் விட்டில் ப+ச்சி கூட இறுதிவரை போராடுகிறது.
காலில் மிதிபடும் புழு கூட துடித்து எழுகிறது.
ஆனால் தமிழ் இனம் மட்டும் அடிமையாக இருந்துவிடுமா என்ன?

இலங்கை சிறிய தீவுதான். ஆனால் போராட்டம் நிறைந்த வரலாறு கொண்டது.
போத்துக்கேயருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
ஓல்லாந்தருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
ஏன் அதன் பின்னர் கூட எந்த ஒரு கட்சியும் இலங்கையில்
தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை.

1972ல் ஜே.வி.பி ஆயுதப் போராட்டம் நடத்தியது. 4000 பேர் இந்திய அரசின் உதவியுடன் கொல்லப்பட்டனர். இருந்தும் அவர்கள் மீண்டும் 1989ல் போராட்டம் நடத்தினர். அப்போது 60000பேர் கொல்லப்பட்டனர். இருந்தும் அவர்கள் துவண்டுவிட வில்லை. ஒப்பாரி வைக்கவுமில்லை. மீண்டும் எழுந்தார்கள்.

60ஆயிரம் சிங்கள இளைஞர்களைக் கொன்று ஆற்றில் வீசிய ஜனாதிபதி பிரேமதாசா இறுதியில் ஆமர்வீதியில் உடல் சிதறி இறந்தார்.

6 வருட ஆட்சியில் 6 கோடி மக்களைக் கொன்ற பாசிட் கிட்லர் இறுதியில் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்டான்.

எனவே இலங்கை வரலாறும் உலக வரலாறும் எப்போதும் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதாகவும், மக்களை அடக்கியாளும் பாசிட்டுகள் அழிக்கப்பட்டதாகவுமே இருக்கின்றன.

தமிழ்இன அழிவுக்கு துணைபோன சோனியா அரசு இந்தியாவில் தூக்கியெறியப்பட்டுள்ளது.
துற்போது உலகெங்கும் வாழும் தமிழ் இனம் மட்டுமல்ல மனிதாபிமான உணர்வுள்ள மக்கள் அனைவரும் ஆதரவுக் குரல் தருகின்றனர். அத்துடன் என்றுமில்லாதவாறு தமிழகம் துணை நிற்கின்றது.

எனவே மனம் தளராது நம்பிக்கை கொள்வோம்.
இறுதி வெற்றி பெறும்வரை உறுதியுடன் போராடுவோம்.