Sunday, May 18, 2014

நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்பட்டமைக்கு கண்ணீர் வடிக்கும் அமெரிக்க ஓநாய்!

• நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்பட்டமைக்கு
கண்ணீர் வடிக்கும் அமெரிக்க ஓநாய்!

நைஜீரியா நாட்டில் பல மாணவிகளை முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் ஒன்று கடத்தியுள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனத்தை மனிதாபிமான உணர்வுள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும்.

ஆனால் இந்த அக்கிரமத்தை கண்டிக்க அமெரிக்க அரசுக்கு எந்த அருகதையும் கிடையாது. ஏனெனில் உலகெங்கும் பல இடங்களில் மாணவிகளை அமெரிக்க அரசு கொன்று வருகிறது.

ஒருபுறம் அப்கானிஸ்தானில் ஆள் இல்லா விமானம் மூலம் சிறுவர்கள் மற்றும் அப்பாவி மக்களை கொல்லும் அமெரிக்க அரசு மறுபுறம் நைஜீரிய மாணவிகள் கடத்தலுக்கு போலிக் கண்ணீர் வடிக்கிறது.

நைஜீரியாவில் மாணவிகளைக் கடத்திய முஸ்லிம் அடிப்படைவாத இயக்கத்தைக் கண்டிப்பதாக கூறும் அமெரிக்க அரசு, மத அடிப்படைவாத சவூதிஅரோபிய அரசை கட்டிக்காத்து வருகிறது. அந்த அரசுக்கு தொடர்ந்தும் இராணுவ உதவி செய்து வருகிறது.

நைஜீரியாவில் மாணவிகளைக் கடத்திய அமைப்பைக் கண்டிக்கும் உலக நாடுகள், இலங்கையில் சிறுமி விபூசிகாவைக் கடத்திய இலங்கை அரசைக் கண்டிக்கவில்லை. அது ஏன்? நைஜீரியாவில் எண்ணெய் வளம் உண்டு, வன்னியில் கொள்ளையடிக்க ஒரு வளமும் இல்லை. அதுதான் காரணமா?

ஓசாமா பின்லேடனை உருவாக்கியதும் அமெரிக்க அரசுதான். புpன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அவனைக் கொன்றொழித்ததும் அதே அமெரிக்காதான்.

இன்னும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவின் இந்த போக்கிரித்தனத்தை அனுமதிக்கப் போகிறோம்?

No comments:

Post a Comment