Sunday, May 18, 2014

• இந்திய அரசே! பேராசிரியர் சாய்பாபாவை உடனே விடுதலை செய்!

• இந்திய அரசே!
பேராசிரியர் சாய்பாபாவை உடனே விடுதலை செய்!

புரட்சிகர ஜனநாயக செயற்பாட்டாளராகிய,
டில்லி பல்கலைகழக பேராசிரியர் சாய்பாபா
மகாராஷ்ரா பொலிசாரினால் கடத்தப்பட்டுள்ளார்.
அவர் பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டு
கொலை செய்யப்படலாம் என அஞ்சப்படுகிறது.

மாவோயிஸ்டுகள் என்று சொல்லி
அப்பாவிகளை கடத்திக் கொல்வது
பெண்களை கற்பழித்து கொலை செய்வது என்று
சட்டத்தைக் கையில் எடுத்து பொலிஸ் செய்யும்
அராஜகம் அளவில்லாமல் செல்கிறது.

காஸ்மீர் தீவிரவாதி சுட்டு இறந்த ராணுவத்திற்கு
வீரவணக்கம் செலுத்தும் தலைவர்கள,
சென்னை ரயிலில் குண்டு வெடித்தமைக்கு
தாமதமின்றி அறிக்கை விட்ட தலைவர்கள்,
தொடரும் இந்த பொலிஸ் அராஜகம் குறித்து
வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருவது ஏன்?

அரச பயங்கரவாதம் குறித்து கண்டிக்காதவர்கள்
தனி நபர் பயங்கரவாதம் குறித்து கண்டிப்பதற்கு
எந்த வித தகுதியும் அற்றவர்களாவர்.

பொலிஸ் அராஜகத்தை கண்டிப்போம்!
சாய்பாபா விடுதலைக்கு குரல் கொடுப்போம்!

No comments:

Post a Comment