Saturday, March 31, 2018

இந்த படத்தைப் பார்த்த பிறகு

இந்த படத்தைப் பார்த்த பிறகு
கற்றவருக்கு சென்ற இடமெல்லம் சிறப்பு
என்று சொல்லத் தோன்றுமா?

•எச்ச ராஜாக்களுக்கு எச்சரிக்கை

•எச்ச ராஜாக்களுக்கு எச்சரிக்கை
நீங்க எத்தனை சிலைகளை உடைத்தாலும்
நாங்க அத்தனை சிலைகளையும் மீண்டும் வைப்போம்
பெரியார் தந்த தடி மட்டுமல்ல
தமிழரசன் தந்த வெடி குண்டும் இருக்கு
நாங்க திருப்பியடிக்க ஆரம்பித்தால்
உங்களையும் உங்கள் சிலைகளையும்
எந்த அரசாலும் காப்பாத்த முடியாது.

சபா அவர்கள் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
லண்டனில் இருக்கும் சபா அவர்கள் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சபா அவர்கள் 1991ம் ஆண்டு முதல் 1995வரை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் பின்பு சில மாதங்கள் துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார்.
7 வருட சிறைவாழ்க்கையின் பின் அவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் அவர் சில காலம் கம்போடியா என்னும் நாட்டில் இருந்தார்.
இந்தியாவில் இருந்து 8 வருட சிறை வாழ்க்கையின் பின் நான் வெளியேற்றப்பட்டபோது சில மாதங்கள் கம்போடியாவில் தங்க நேரிட்டது. அப்போது சபா அவர்கள் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார். ( அப்போது எடுக்கப்பட்ட போட்டோவே கீழே பகிரப்பட்டுள்ளது.)
எனது நூல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சபா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
பாலன் முதல் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூலைப் படித்திருக்கிறேன்.
அதில் குறிப்பிட்டுள்ள துறையூர் சிறப்புமுகாம் மற்றும் வேலூர் சிறப்பு முகாம்களில் நானும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன்.
என் போன்ற அகதிகள் அனுபவித்த கொடுமையை அந்த நூலில் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.
நான் திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்தவேளை தென்தமிழன் போன்றவர்களை கண்டிருக்கிறேன்.
துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தவேளை பாலன் மூலம் தமிழ்நாடு விடுதலை படை பற்றி ஓரளவு அறிந்துகொண்டேன்.
ஆனால் அவர் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலைப் படித்தபின்பே முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது.
தமிழரசன், கலியபெருமாள், சுந்தரம், லெனின் போன்றவர்களை இந் நூல் மூலம் சிறந்த முறையில் ஈழத் தமிழர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஈழத் தமிழர்களும் படிக்க வேண்டிய நூல் இதுவாகும். இதுபோல் பயன் உள்ள நூல்களை அவர் தொடர்ந்து தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

இவர் சாமியாரா? ஆசாமியாரா?

இவர் சாமியாரா? ஆசாமியாரா?
அமெரிக்க பெண் ஒருவர் நித்தியானந்த சுவாமி தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக வழக்கு தொடுத்திருந்தார்.
அப்போது சுவாமி நித்தியானந்தா தான் ஆண்மையற்றவர் என்றும் தன்னால் எந்த பெண்ணுடனும் உடலுறவு கொள்ள முடியாது என்று விளக்கம் அளித்தார்.
நீதிமன்றம் இவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரால் உடலுறவு கொள்ள முடியும் என ரிப்போர்ட் வந்துள்ளது.
அதன்பின்பு நித்தியானந்தாவின் வழக்கறிஞர் “நடந்தது பாலியல் வல்லுறவு இல்லை. அது அந்த பெண்ணின் சம்மதத்துடன் நடந்த உடலுறவு” என தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா தான் முற்றும் துறந்த முனிவர் என்றார். இப்ப பெண்ணின் சம்மதத்துடன் நடந்த உடலுறவு என்கிறார்.
இப்படித்தான் நடிகை ரஞ்சிதாவுடன் நடந்த உடலுறவு டிவிடியாக ரிவியில் வந்தவுடன் அது தன் புகழைக் கெடுக்க நடந்த போட்டோசொப் வேலை என்றார்.
ஆனால் அது உண்மையான ஒளிப்பதிவு என்றும் அதில் எந்த போட்டோசொப் வேலையும் இல்லை என பரிசோதனை ரிப்போhட் வந்துள்ளது.
இங்கு வேதனையாக விடயம் என்னவென்றால் இத்தனை ஆதாரம் இருந்தும் இன்னும் நித்தியானந்தா கைது செய்யப்டவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
ஒருவேளை யாரும் ஒரு பெண் சீடர் நித்தியானந்தாவினால் கொலை செய்யப்பட்ட பின்பு நடவடிக்கை எடுக்கலாம் என அரசு பொறுமை காக்குதோ தெரியவில்லை.
அண்மையில் தேனியில் ஒரு பெற்றோர் தம் மகனை நித்தியானந்தா கஞ்சா கொடுத்து போதைக்கு அடிமையாக்கி வைத்திருப்பதாகவும் மீட்டு தருமாறு நீதிமன்ற வாசலில் அழுதார்கள்.
ஆனாலும் எச்சை.ராஜா போன்ற அரசியல்வாதிகளின் செல்வாக்கு மூலம் சுவாமி நித்தியானந்தா தொடர்ந்தும் தனது லீலைகளை செய்து வருகிறார்.
இதில் வேடிக்கை என்னவெனில் லண்டன் கனடா நாடுகளில் இருக்கும் சில ஈழத் தமிழர்கள் இரவு 2 மணிக்கு காத்திருந்து சுவாமி நித்தியானந்தாவின் உரையை ஸ்கைப் மூலம் கேட்கிறார்களாம்.
என்னே அவலம் இது?

தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல

தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல
தோழர் தமிழரசனையும் நினைவு கூர்வோம்.
“பகத் சிங்கும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும். பகத் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சுதந்திரம் அடைந்தோம்” என்று முன்னாள் குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் குறிப்பிட்டார். (ஆதாரம்- 24.03.1994 தினமணி)
வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர்.
நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம்.
இன்று பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் வெள்ளைக்கார அரசால் தூக்கில் இட்டுக் கொல்லப்பட்டநாள் மட்டுமன்று. தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் கொள்ளைக்கார இந்திய அரசால் கொல்லப்பட்ட நாளும் ஆகும்.
தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் இன்று ஆகும்.
தியாகி பகத்சிங்கை கொன்றதன் மூலம் இந்தியா சுதந்திரம் பெறுவதை வெள்ளைக்கார அரசால் தடுக்க முடியவில்லை.
அதேபோல் தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி.
தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோர் தமிழக மக்களுக்காக மட்டும் போராடவில்லை. ஈழத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள். அதனால்தான் அவர்கள் இந்திய அரசால் கொல்லப்பட்டார்கள்.
பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோரையும் தமிழக மக்களும் ஈழத் தமிழர்களும் என்று நினைவில் போற்றுவார்கள்.

•இது துரோகிகள் தியாகிகளாகும் காலம்!

•இது துரோகிகள் தியாகிகளாகும் காலம்!
முதலில் துரையப்பாவுக்கு சிலை வைத்தார்கள்.
அடுத்து அமிர்தலிங்கத்திற்கு சிலை வைத்துள்ளார்கள்.
இனி லக்ஸ்மன் கதிர்காமருக்கும் சிலை வைப்பார்கள்
இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில்
இது, துரோகிகள் தியாகிகளாகவும்
தியாகிகள் துரோகிகளாகவும் ஆகும் காலம்!
திரிபுராவில் லெனின் சிலை தகர்த்ததுபோல் நாளை
உரும்பராயில் சிவகுமாரின் சிலை தகர்க்கப்படலாம்
அல்லது நல்லூரில் திலீபன் நினைவிடம் அகற்றப்படலாம்.
ஏனெனில் இது துரோகிகள் தியாகிகளாகவும்
தியாகிகள் துரோகிகளாகவும் ஆகும் காலம்!

•செல்வா பாண்டியன் இறப்பு

•செல்வா பாண்டியன் இறப்பு
ஈழத் தமிழர்களுக்கும் இழப்புதான்.
உறுதியான தமிழ் இன உணர்வாளர், சிறந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர் செல்வ பாண்டியன் இறப்பு தமிழக தமிழர்களுக்கு மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் இழப்பாகும்.
செல்வா பாண்டியன் தமிழக விடுதலையை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டவர். தமிழர் நடுவம் அமைப்பின் தலைவராக இருந்தவர்.
வரும் மே மாதம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழ்தேசிய சக்திகளையும் ஜக்கியப்படுத்தி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தவர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்ததுடன் முள்ளிவாய்க்காலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி வல்வெட்டித்துறைக்கு சென்று புலிகளின் தலைவர் பிரபாகரன் வீட்டு மண்ணையும் நினைவாக அள்ளிச் சென்றுள்ளார்.
இத்தகைய உணர்வுள்ள ஒரு நல்ல ஆதரவாளரை ஈழத் தமிழர்கள் இழந்துள்ளார்கள்.
செல்வ பாண்டியனை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
அவருடைய குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தேவாரத்திற்கு

•ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி தேவாரத்திற்கு
எதற்காக 7 காவலர்களை அரசு வழங்கி வருகிறது?
ஓய்வு பெற்ற ஒருவர் ஒரு அரசு பணியாளரைப் பயன்படுத்துவதே குற்றம். ஆனால் ஓய்வு பெற்ற தேவாரம் 7 அரச பணியாளர்களை பயன்படுத்தி வருகிறார்.
பொலிஸ் கமிஷனராக இருந்த வால்டர் தேவாரம் கடந்த 31.07.1997 யன்று ஊய்வு பெற்றார். ஓய்வுபெற்ற பின்பு கடந்த 21 வருடமாக அவர் அரச பணியாளர்களை பயன்படுத்தி வருகிறார்.
இவரிடம் இருக்கும் 3 வாகனங்களை ஓட்டுவதற்கு 3 காவலர்கள், இதர பணிகளுக்கு 3 காவலர்கள், மற்றும் உதவியாளர் ஒருவர் என மொத்தம் 7 காவலர்கள் இவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் பற்றாக்குறையாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு மறுபுறத்தில் ஓய்வுபெற்ற அதிகாரிக்கு எதற்காக 7 காவலர்களை வழங்க வேண்டும்?
ஒருபுறத்தில் அரசியல்வாதிகளின் குடும்பங்களின் வேலைகளை கவனிக்க பொலிசார் நியமிக்கப்படுகிறார்கள். மறுபுறத்தில் அதிகாரிகளின் குடும்ப வேலைகளைக் கவனிக்க பொலிசார் நியமிக்கப்படுகிறார்கள்.
மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வழங்கப்படும் பொலிசார் மக்களுக்கு சேவை செய்யாமல் அதிகாரிகளுக்கு எதற்காக வேலை செய்ய வேண்டும்?
இதுகுறித்து நீதிமன்றங்களும் கண்டு கொள்ளமாட்டாது. ஏனெனில் நீதிபதிகளின் குடும்ப வேலைகளைக்கூட கவனிப்பதற்கும் பொலிசார் நியமிக்கப்படுகிறார்கள்.
வால்டர் தேவாரம் பதவியில் இருக்கும்போது தர்மபுரியில் நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் 40க்கு மேற்பட்ட இளைஞர்களை சுட்டுக் கொன்றார்.
அதன்பின்பு வேலுர் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருந்து ஈழத்து அகதி இளைஞர் இருவரை சுட்டுக் கொன்றார்.
அதன்பின்னர் வேதாரணியத்தில் கோடியாக்கரை சண்முகம் என்பவரை அடித்துக் கொன்றுவிட்டு தற்கொலை என பொய் கூறினார்.
இவர் பதவியில் இருக்கும்போது இன்னொரு அதிகாரியின் மனைவியோடு கள்ள உறவு கொண்டார். இதனால் பொலிஸ்துறையே இரண்டாக பிரிந்து அடித்துக் கொண்ட செய்தி ஜீனியர் விகடனில் பிரசுரமாகியது.
இத்தகைய மோசமான அதிகாரியை கொல்ல வேண்டும் என்று தோழர் தமிழரசன் பல தடவை முயன்றார்.
இத்தகைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு மக்கள் பணத்தில் 7 காவலர்களை அரசு எதற்காக வழங்கி வருகிறது?
இந்த அநியாயத்தை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்களா?

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை!

•விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை!
தோழர் தமிழரசனைக் கொன்றால் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை அடக்கிவிட முடியும் என அரசும் அதன் உளவுப்படைகளும் நினைத்தன.
ஆனால் தோழர் தமிழரசன் இறந்துவிட்ட போதும் அவர் விதைத்தவைகள்; வீண் போய்விடவில்லை.
தமிழரசனின் தலைவர் என கருதப்படும் புலவர் கலியபெருமாள் அவர்களின் இளைய புதல்வர் தோழர் நம்பி அவர்கள் எனது “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி “நாம் தமிழர்” சீமான் அவர்களுக்கும் நூல் வழங்கியுள்ளார்.
நூல் வழங்கிய நம்பி அவர்களுக்கும் நூலைப் பெற்றுக்கொண்ட சீமான் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தோழர் தமிழரசன் கருத்துகள் பரவட்டும்

•தோழர் தமிழரசன் கருத்துகள் பரவட்டும்
தமிழ்நாடு விடுதலை விரைவில் நிகழட்டும் !!
திரைப்பட இயக்குநர் நிரோஜன் அவர்கள் எனது “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
நிரோஜன் அவர்கள் இயக்கி நடித்த திரைப்படம் “கூட்டாளிகள்”. இப் படம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த தமிழின உணர்வாளரான நிரோஜன் அவர்கள் எனது நூலை “நாம் தமிழர்” கட்சி தலைவர் சீமான் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதோடு அது குறித்து தனது கருத்துக்களை எனக்கு அறியத் தந்துள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள நிரோஜன் அவர்களுக்கும் அவருக்கு நூலை வழங்கிய சீமான் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
ஈழத்து படைப்புகளாக இருந்தாலும் சரி. நூல்களாக இருந்தாலும் சரி. விரும்பி படிப்பேன்.
அந்த வகையில் தோழர் பாலன் அண்ணா எழுதிய ‘ஒரு ஈழத்து போராளியின் பார்வையில்’ “தோழர் தமிழரசன்” என்ற நூலை அண்ணன் சீமானிடமிருந்து பெற்று படிக்க நேர்ந்தது.
உண்மைக்கு மிக நெருக்கமாகவும், பல வரலாற்று தகவல்களை இலகுவாக தெரிந்துகொள்ளவும், எல்லோரும் இலகுவாக நூலைப் படிக்கும் வண்ணம் எழுத்துருவாக்கம் அமைந்துள்ளது.
இந்த நூலை முடிந்தவரை வாங்கிப் படியுங்கள். நூலின் ஆசிரியர் தோழர் பாலன் அண்ணா அவர்களுக்கு தம்பியின் வாழ்த்துகளும் நன்றிகளும்..
- தமிழ் வாழ்க!

மோடி வந்தால் ஈழத் தமிழருக்கு உதவுவார் என்றார்களே

மோடி வந்தால் ஈழத் தமிழருக்கு உதவுவார் என்றார்களே.
அவர் ஈழத் தமிழருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை இலங்கை அரசுக்கு அல்லவா தொடர்ந்து உதவுகிறார்.
காங்கிரஸ் அரசானாலும் சரி பாஜக அரசானாலும் சரி எல்லா இந்திய அரசும் தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்குத்தானே உதவுகிறார்கள்.
போர் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனால் இந்திய அரசு இப்பவும் இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசு கடந்த வருடம் ஒரு போர்க் கப்பலை அன்பளிப்பாக இலங்கை அரசுக்கு வழங்கியது.
இந்திய அரசு கடந்த வாரம் இரண்டாவது போர்க்கப்பலை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
600 தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படைக்கு இரண்டு போர்க்கப்பல்களை இந்திய அரசு வழங்கியுள்ளது.
இதன் அர்த்தம் என்ன? தனது தமிழக மீனவனைக் கொன்றமைக்கு பரிசாக கப்பல்களை வழங்குகிறதா? அல்லது,
இன்னும் தமிழக மீனவனைக் கொன்று குவிக்கும்படி போர்க்கப்பல்களை வழங்குகிறதா?
தமிழக மக்களின் வரிப்பணத்தில் கப்பல்களைக்கட்டி தமிழக மக்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கும் இந்திய அரசை என்னவென்று அழைப்பது?
தமிழக மக்களுக்கு புயல் நிவாரண நிதி வழங்க மறுக்கும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு வாரி வழங்கிறது.
இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க முதுகெலும்புள்ள ஒரு அரசியல்வாதிகூட தமிழகத்தில் இல்லையா?
அம்பாந்தோட்டையில் சீனா வந்துவிட்டது. எனவே இனி இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று ஆரசியல் ஆய்வு செய்தவர்கள் எல்லாம் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
குறிப்பாக இந்துத் தமிழீழம் கேட்டால் மோடி உதவுவார் என்று கூறும் காசி ஆனந்தன் அய்யா என்ன கூறப் போகிறார்?
இந்திய அரசு ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல தமிழக தமிழருக்கும்கூட உதவப் போவதில்லை என்பதை இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள்.

•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் 24ம் ஆண்டு நினவு நாள் 29.03.2018 ஆகும்.
19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார்.
தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின்.
தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார்.
தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார்.
தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார்.
தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும்.
தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
குறிப்பு- தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது
.
இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.

தமிழனுக்கும் பெப்பே தமிழ்நாட்டிற்கும் பெப்பெப்பே

•தமிழனுக்கும் பெப்பே
தமிழ்நாட்டிற்கும் பெப்பெப்பே
மோடி ஆண்டாலும் சரி சோனியா காந்தி ஆண்டாலும் சரி
தமிழனுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதுவும் தர மாட்டார்கள்.
உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் இந்த
உச்சிக் குடுமிகள் உள்ளவரை தமிழனுக்கு பெப்பேதான்.
சிந்து நதி, பாகிஸ்தானுக்கு தடையில்லாமல் வருகிறது!
பிரம்மபுத்திரா நதி, தடையில்லாமல் வங்கதேசம் வருகிறது!
ஆனால் காவிரி மட்டும் தமிழ்நாட்டிற்கு வர மறுக்கிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்திருந்தால்
காவிரியும் தடையில்லாமல் வந்திருக்கும் அல்லவா?
தமிழன் அடிமையாக இருப்பது கேவலம் இல்லை- மாறாக
தான் அடிமை என்பதை உணராமல் இருப்பதே கேவலம்.
ஜல்லிக்கட்டிற்கு போராட்டம்
நீட்டிற்கு போராட்டம்
ஸ்ரெலைட்டுக்கு போராட்டம்
காவிரிக்கு போராட்டம்
இப்படி ஒவ்வொன்றுக்கும் போராடுவதைவிட
ஒட்டுமொத்தமாக தனிநாட்டிற்கு போராடுவது மேல் அல்லவா!
தண்ணியை விடு அல்லது எம்மை தனியா விடு என
ஒருமுறை உரக்க கூறிப்பார் தமிழா!
அப்புறம் தமிழ் இனம் தலை நிமிர்வதைக் காணலாம்!

காலில் விழுந்து வணங்குவது

காலில் விழுந்து வணங்குவது
கேவலம் என்று சொல்லிதர
எமக்கு ஒரு நல்ல தலைவன் இல்லையே
என்ன செய்வது?
எமக்கு வாய்ச்ச தலைவர்
தனக்கு மட்டுமல்ல
எதிரி காலில் விழும்போதும்
மௌனமாக மரமாகத்தானே இருக்கின்றார்.
இந்நிலையில்,
கனடாவில் ஒரு ஈழத் தமிழ்பெண்
இளையராசா காலில் விழுந்துவிட்டார் என்று
புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கு?

இன்னுமா இவரை “சாமியார்” என்று நம்புகிறார்கள்?

•இன்னுமா இவரை “சாமியார்” என்று நம்புகிறார்கள்?
எங்கெல்லாம் பிராடுதனம் இருக்கிறதோ அங்கெல்லாம் எச்ச ராஜா இருப்பார்.
எங்கெல்லாம் எச்ச ராஜா இருக்கிறாரோ அங்கெல்லாம் பிராடுதனம் இருக்கும்.
எனவே பிராடு எச்ச ராஜாவும் பிராடு சாமியார் நித்தியும் ஒன்றாக சேர்ந்துள்ளமை எந்த ஆச்சரியும் இல்லை.
அவர்கள் ஒன்றாக சேரவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
நக்கீரன் அசிரியர் கோபால் தகுந்த ஆதாரங்களுடன் சாமியார் நித்தியை அம்பலப்படுத்தியுள்ளார்.
அதனை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
குறிப்பு-
போலிச் சாமியார் நித்தியை இன்னும் ஏன் கைது செய்யவில்லை?
அவர் பிடியில் இருக்கும் பெண்களை தமிழக அரசு உடன் காப்பாற்ற வேண்டும்.