Saturday, March 31, 2018

•செல்வா பாண்டியன் இறப்பு

•செல்வா பாண்டியன் இறப்பு
ஈழத் தமிழர்களுக்கும் இழப்புதான்.
உறுதியான தமிழ் இன உணர்வாளர், சிறந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர் செல்வ பாண்டியன் இறப்பு தமிழக தமிழர்களுக்கு மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் இழப்பாகும்.
செல்வா பாண்டியன் தமிழக விடுதலையை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டவர். தமிழர் நடுவம் அமைப்பின் தலைவராக இருந்தவர்.
வரும் மே மாதம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழ்தேசிய சக்திகளையும் ஜக்கியப்படுத்தி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தவர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்ததுடன் முள்ளிவாய்க்காலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி வல்வெட்டித்துறைக்கு சென்று புலிகளின் தலைவர் பிரபாகரன் வீட்டு மண்ணையும் நினைவாக அள்ளிச் சென்றுள்ளார்.
இத்தகைய உணர்வுள்ள ஒரு நல்ல ஆதரவாளரை ஈழத் தமிழர்கள் இழந்துள்ளார்கள்.
செல்வ பாண்டியனை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
அவருடைய குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment