Saturday, March 31, 2018

தமிழனுக்கும் பெப்பே தமிழ்நாட்டிற்கும் பெப்பெப்பே

•தமிழனுக்கும் பெப்பே
தமிழ்நாட்டிற்கும் பெப்பெப்பே
மோடி ஆண்டாலும் சரி சோனியா காந்தி ஆண்டாலும் சரி
தமிழனுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதுவும் தர மாட்டார்கள்.
உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் இந்த
உச்சிக் குடுமிகள் உள்ளவரை தமிழனுக்கு பெப்பேதான்.
சிந்து நதி, பாகிஸ்தானுக்கு தடையில்லாமல் வருகிறது!
பிரம்மபுத்திரா நதி, தடையில்லாமல் வங்கதேசம் வருகிறது!
ஆனால் காவிரி மட்டும் தமிழ்நாட்டிற்கு வர மறுக்கிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்திருந்தால்
காவிரியும் தடையில்லாமல் வந்திருக்கும் அல்லவா?
தமிழன் அடிமையாக இருப்பது கேவலம் இல்லை- மாறாக
தான் அடிமை என்பதை உணராமல் இருப்பதே கேவலம்.
ஜல்லிக்கட்டிற்கு போராட்டம்
நீட்டிற்கு போராட்டம்
ஸ்ரெலைட்டுக்கு போராட்டம்
காவிரிக்கு போராட்டம்
இப்படி ஒவ்வொன்றுக்கும் போராடுவதைவிட
ஒட்டுமொத்தமாக தனிநாட்டிற்கு போராடுவது மேல் அல்லவா!
தண்ணியை விடு அல்லது எம்மை தனியா விடு என
ஒருமுறை உரக்க கூறிப்பார் தமிழா!
அப்புறம் தமிழ் இனம் தலை நிமிர்வதைக் காணலாம்!

No comments:

Post a Comment