Monday, March 19, 2018

எரிவது முஸ்லிம்களின் வீடுகள் மட்டுமல்ல

•எரிவது முஸ்லிம்களின் வீடுகள் மட்டுமல்ல
அரசு முன்வைக்கும் “ஏக்கிய ராஜ்க்கிய”வும்தான்
சிறிய கோட்டை மறைக்கனும் என்றால் அருகில் பெரிய கோட்டை கீற வேண்டும்.
அதுபோல் ஒரு பிரச்சனையை மக்கள் மறக்க வேண்டும் என்றால் இன்னொரு பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று இலங்கை அரசு கருதுகிறது.
அளுத்கம பிரச்னையை மறைக்க அம்பாறை பிரச்சனை உருவாக்கப்பட்டது. அம்பாறை பிரச்னையை மறைக்க கண்டி பிரச்சனை உரவாக்கப்பட்டுள்ளது.
இனி அடுத்து கண்டிப் பிரச்னையை மறைக்க வேறு எங்கேயாவது ஓரிடத்தில் பிரச்சனை உருவாக்கப்படும்.
இவ்வாறான இனவாத பிரச்சனைகளுக்கு மகிந்த ராஜபக்ச மட்டும் காரணம் அல்ல.
மைத்திரி மற்றும் ரணில் போன்றவர்களும் இத்தகைய பிரச்சனைகளை விரும்புகிறார்கள்.
இவ் அரசியல்வாதிகள் தங்களின் பதவி நலன்களுக்காக அப்பாவி மக்களை மோதவிட்டு பலியாக்குகிறார்கள்.
ஒருபுறம் “ஏக்கிய ராஜ்ச்கிய” என்று கூறிக்கொண்டு மறுபுறம் சிறுபான்மை இனத்தவர்களை தாக்குகிறார்கள்.
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே இவ் அபாயத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு ஒரே வழியாகும்.

No comments:

Post a Comment