Monday, March 19, 2018

பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம்

பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம்
ஒரு சிறு பொறியில்தானே உருவாகியது.
உலகைக் குலுக்கிய இயக்கமெல்லாம்
ஏதோவொரு புள்ளியில்தானே தோன்றியிருக்கும்
பனியிலும் மழையிலும் பெருங் குளிரிலும்
இவர்கள் தொடர்ந்து செய்யும் போராட்டம்
மீண்டும் தமிழ் இனம் நிமிர்ந்து நிற்க வழி செய்யும்.
செல்லும் வழியெல்லாம் இவர்கள் செய்யும் பிரச்சாரம்
மக்கள் மனங்களை வென்று செல்லும்.
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை.
புலம்பெயர்ந்த தமிழர் போராட்டம்
வெற்றியடையும்வரை ஓயப்போவதில்லை.

No comments:

Post a Comment