Monday, March 19, 2018

இவர் தமிழ்நாட்டை ஆளப் போகிறாராம்.

இவர் தமிழ்நாட்டை ஆளப் போகிறாராம்.
இவர் மனைவியின் வாடகைப்பாக்கியையே இவரால் கட்ட முடியவில்லை
ஆனால் இவர் சிஸ்டத்தை மாத்தப் போகிறாராம்.
குரங்கனி தீ விபத்தில் இறந்த 10 தமிழர் குறித்து இவருக்கு அக்கறை இல்லை
ஆனால் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறாராம்.
காவிரியில் தண்ணீர் விட கர்நாடக அரசு மறுக்கிறது. ஆனால் இவர் அதுபற்றி பேச மாட்டார்.
பெண்கள் கொலை பற்றி கேட்டால் “ஆன்மீக பயணம் செல்வதால் அரசியல் பேச விரும்பவில்லை” என்றார்.
ஆனால் அங்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து அரசியல் “டீல்” பேசுகிறார்.
கர்நாகாவில் கடைகளில் வேலை செய்யக்கூட தமிழர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் கன்னட நடிகர் தமிழர்களை ஆள நினைக்கிறார்.
பெரும் சாபக்கேடு!

No comments:

Post a Comment