Monday, March 19, 2018

கம்யுனிஸ்டுகள் மக்களை திட்டக்கூடாது

•கம்யுனிஸ்டுகள் மக்களை திட்டக்கூடாது
கம்யுனிஸ்டுகள் மக்களை நேசிக்கனும்!
ஒரு உண்மையான கம்யுனிஸ்டு மக்களை நேசிப்பானேயொழிய ஒருபோதும் மக்களை திட்ட மாட்டான்.
தங்களை தேர்தெடுக்கவில்லை என்பதற்காக மக்களை திட்டுபவன் உண்மையான கம்யுனிஸ்டாக இருக்க முடியாது.
நான்கு முறை தங்களை தேர்ந்தெடுத்த திரிபுரா மாநில மக்கள் இம்முறை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று சிந்திக்கவேண்டுமேயொழிய அந்த மக்களை சபிக்கக்கூடாது.
நான்குமுறை ஆட்சியில் இருந்தும் ஏன் அந்த மக்களின் குறைகளை போக்க முடியவில்லை என்பதை சிந்திக்க வேண்டும்.
கம்யுனிஸ்டுகளின் லட்சியம் புரட்சி. அந்த புரட்சியை தேர்தல் பாதை மூலம் இந்தியாவில் நிறைவேற்ற முடியுமா என்பதை இனியாவது கம்யுனிஸ்ட் கட்சி பரிசீலனை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment