Monday, March 19, 2018

தமிழ்நாட்டில் குரல் அற்றவர்கள்

•தமிழ்நாட்டில் குரல் அற்றவர்கள்
பிணமாகத்தான் விடுதலை பெற முடியுமா?
பொதுவாக ஆயள்தண்டனை பெறுபவர்கள் பத்து அல்லது பன்னிரண்டு வருடத்தில் தமிழக சிறைகளில் இருந்து விடுதலை பெற்று வருகிறார்கள்.
ஆனால்; ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 25 வருடமாகியும் விடுதலை பெறவில்லை என்பது அனைவரும் அறிந்தவிடயம்.
ஆனால் பலரும் அறியாத ஒருவிடயம், 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய தமிழர்களும் இவ்வாறு விடுதலை பெறாமல் இருப்பது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்காக குரல் கொடுக்கவாவது பலர் இருக்கிறார்கள்.
ஆனால் எந்தவித ஒரு குரலும் அற்றவர்களாக இந்த பரிதாபத்திற்குரிய இஸ்லாமிய சிறைவாசிகள் இருக்கிறார்கள்.
அவர்களது மரணம்தான் அவர்களுக்குரிய விடுதலையை கொடுக்கிறது.
இவ்வாறு 20 வருடங்களாக சிறையில் இருந்த ரிஸ்வான் என்பவர் மரணமடைந்து விடுதலை பெற்றுள்ளார்.
இஸ்லாமிய சிறைவாசிகள் என்பதால் அவர்களுக்குரிய விடுதலையை மறுப்பதுடன் சிறையில் மருத்து வசதியும் மறுக்கிறது அரசு.
ரம்ழானுக்கு கஞ்சி குடிக்கும் நம் தலைவர்கள் இனியாவது இந்த இஸ்லாமியர்களின் விடுதலைக்கு குரல் கொடுப்பார்களா?

No comments:

Post a Comment