Monday, March 19, 2018

•இப்ப என்ன ம- - -க்கு அமிர்தலிங்கம் சிலை?.

•இப்ப என்ன ம- - -க்கு அமிர்தலிங்கம் சிலை?.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றுகூறிய சம்பந்தர் அய்யா தனக்கு பதவியும் சொகுசு பங்களாவும் பெற்றுக்கொண்டார்.
சம்பந்தர் அய்யா தீர்வோடு வருவார் என்று தமிழ் மக்கள் காத்திருக்க அவரோ அமிர்தலிங்கம் சிலையோடு வந்திருக்கிறார்.
காணாமல் போனவர்களின் உறவுகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வருகிறார்கள்.
கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை கோரி ஒரு வருடமாக வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்கள்.
சிறையில் உள்ளவர்கள் விடுதலையின்றி செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இனப்பிரச்சனைக்கு தீர்வுதான் பெறவில்லை. ஆகக்குறைந்தது சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காவது குரல் கொடுத்திருக்கலாம்.
தந்தை சிறையில். தாய் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகள் பெற்றார் இன்றி அனாதையாக நிற்கின்றனர்.
முழுத் தமிழ் இனமே இந்த குழந்தைகளின் அவல நிலைக்காக வருந்தி கண்ணீர் வடிக்கின்றனர்.
ஆனால் நமது தலைவர் சம்பந்தர் அய்யா இந்த குழந்தைகளின் தந்தையின் விடுதலைக்கு குரல் கொடுக்காதது மட்டுமன்றி அவர்களுக்கு ஆதரவாக நாலு வார்த்தை கூறவும் விரும்பவில்லை.
தமிழ் மக்கள் கேட்டது தீர்வு. அமிர்தலிங்கத்தின் சிலை அல்ல என்பதை தயவு செய்து யாராவது இந்த சம்பந்தர் அய்யாவுக்கு கூறுங்கள்.

No comments:

Post a Comment