Saturday, March 31, 2018

இவர் சாமியாரா? ஆசாமியாரா?

இவர் சாமியாரா? ஆசாமியாரா?
அமெரிக்க பெண் ஒருவர் நித்தியானந்த சுவாமி தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக வழக்கு தொடுத்திருந்தார்.
அப்போது சுவாமி நித்தியானந்தா தான் ஆண்மையற்றவர் என்றும் தன்னால் எந்த பெண்ணுடனும் உடலுறவு கொள்ள முடியாது என்று விளக்கம் அளித்தார்.
நீதிமன்றம் இவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரால் உடலுறவு கொள்ள முடியும் என ரிப்போர்ட் வந்துள்ளது.
அதன்பின்பு நித்தியானந்தாவின் வழக்கறிஞர் “நடந்தது பாலியல் வல்லுறவு இல்லை. அது அந்த பெண்ணின் சம்மதத்துடன் நடந்த உடலுறவு” என தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா தான் முற்றும் துறந்த முனிவர் என்றார். இப்ப பெண்ணின் சம்மதத்துடன் நடந்த உடலுறவு என்கிறார்.
இப்படித்தான் நடிகை ரஞ்சிதாவுடன் நடந்த உடலுறவு டிவிடியாக ரிவியில் வந்தவுடன் அது தன் புகழைக் கெடுக்க நடந்த போட்டோசொப் வேலை என்றார்.
ஆனால் அது உண்மையான ஒளிப்பதிவு என்றும் அதில் எந்த போட்டோசொப் வேலையும் இல்லை என பரிசோதனை ரிப்போhட் வந்துள்ளது.
இங்கு வேதனையாக விடயம் என்னவென்றால் இத்தனை ஆதாரம் இருந்தும் இன்னும் நித்தியானந்தா கைது செய்யப்டவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
ஒருவேளை யாரும் ஒரு பெண் சீடர் நித்தியானந்தாவினால் கொலை செய்யப்பட்ட பின்பு நடவடிக்கை எடுக்கலாம் என அரசு பொறுமை காக்குதோ தெரியவில்லை.
அண்மையில் தேனியில் ஒரு பெற்றோர் தம் மகனை நித்தியானந்தா கஞ்சா கொடுத்து போதைக்கு அடிமையாக்கி வைத்திருப்பதாகவும் மீட்டு தருமாறு நீதிமன்ற வாசலில் அழுதார்கள்.
ஆனாலும் எச்சை.ராஜா போன்ற அரசியல்வாதிகளின் செல்வாக்கு மூலம் சுவாமி நித்தியானந்தா தொடர்ந்தும் தனது லீலைகளை செய்து வருகிறார்.
இதில் வேடிக்கை என்னவெனில் லண்டன் கனடா நாடுகளில் இருக்கும் சில ஈழத் தமிழர்கள் இரவு 2 மணிக்கு காத்திருந்து சுவாமி நித்தியானந்தாவின் உரையை ஸ்கைப் மூலம் கேட்கிறார்களாம்.
என்னே அவலம் இது?

1 comment: