Monday, March 19, 2018

•யாரை யார் மன்னிப்பது?

•யாரை யார் மன்னிப்பது?
அவர்கள் அமைதிப்படை என்று வருவார்களாம்
அவர்கள் தமிழர்களை கொன்று குவிப்பார்களாம்
அவர்கள் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வார்களாம்
அவர்கள் மருத்துவமனையை பீரங்கியால் தகர்த்து அப்பாவி நோயாளிகளையும் மருத்துவர்களையும் கொல்வார்களாம்
அவர்கள் குண்டு போட்டு தமிழர்களின் கோடிக்கணக்கான சொத்தை நாசமாக்குவார்களாம்
இப்படியாக எல்லாவற்றையும் செய்தவர்கள் அப்புறமாக எங்களை மன்னித்துவிட்டதாக அவர்களே அறிக்கை விடுவார்களாம்.
உடனே “ஆகா என்னே இரக்க குணம்” என்று அவர்களை நம்மவர் சிலர் பாராட்டுவார்களாம்.
நீங்கதான்டா செய்த அக்கிரமங்களுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருவர்கூட அவர்களைப் பார்த்துசொல்லமாட்டார்கள்
என்னே கேவலம் இது?
உலகத்தில் தமிழ் இனத்தில் மட்டும்தான்டா இப்படி நடக்கும்.
வேறு எந்த இனத்திலாவது இப்படி நடந்திருந்தால் இந்நேரம் சொன்னவன் முகத்தில் காறி உமிழ்ந்திருப்பாங்கடா
குறிப்பு-
2009ல் பிரபாகரன் உடலைப் பார்த்ததும் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறுகிறார்.
ஆனால் 25 வருடங்களுக்கு மேலாகியும் அவர்கள் விடுதலை செய்யப்படாதது மட்டுமன்றி நளினி, முருகனைப் பார்ப்பதற்கு அவருடைய மகளுக்கு விசாவும் மறுக்கப்பட்டு வருகிறது.
இது ஏன் என்று இந்த யோக்கியன் கூறுவாரா?

No comments:

Post a Comment