Saturday, November 30, 2013

• பேரறிவாளனின் மரண தண்டனையும் காஞ்சி சங்கராச்சாரிகளின் விடுதலையும்

• பேரறிவாளனின் மரண தண்டனையும்
காஞ்சி சங்கராச்சாரிகளின் விடுதலையும்

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் ஓரேவிதமான குற்றத்திற்கு இரண்டுவிதமான தீர்ப்பை இந்திய நீதிமன்றம் வழக்கம்போல் வழங்கியுள்ளது. சட்டம் ஆதிக்க சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் என்பதும் சட்டத்தின் நீதி சாமான்ய மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை ஜயம் திரிபுற நிரூபிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் என்ற தனிநபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 36 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. அந்த வழக்கில் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் சங்கரராமன் என்ற தனிநபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கூட தண்டனை பெறவில்லை. இந்திய நீதிமன்றத்தின் இந்த வினோதமான, வெட்கக்கேடான தீர்ப்பைப் பார்த்து உலகமே சிரிக்கிறது.

பேரறிவாளன் வாக்குமூலத்தை தான் திருத்தியதாக விசாரணை அதிகாரி கூறுகிறார். பேரறிவாளன் எதற்கு என்று தெரியாமல் பற்றரி வாங்கி கொடுத்தமைக்காக நிரூபிக்காத அந்த குற்றத்திற்காக மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் கூலிக்கு ஆள்பிடித்து கொலை செய்த சங்கராச்சாரியார் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அப்படி என்றால் சங்கரராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்தாரா?

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக் கூடாது என்பதே இந்திய நீதித்துறையின் நோக்கம் என்கிறார்கள். அப்படியாயின் குற்றவாளியான சங்கராச்சாரிகள் தப்பித்தாலும் பரவாயில்லை, நிரபராதியான பேரறிவாளனை தண்டிக்காதீர்கள்.

பேரறிவாளன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்!
இல்லையேல் வரலாறு அவரை விடுதலை செய்யும்!!
இது உறுதி!!!

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

தமிழ் வாசகர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூல வடிவத்தை சிதைவின்றி தெளிவான நவீன தமிழில் அளிக்கும் முயற்சி.

மிகச்சிறந்த மார்க்சிய அறிஞரான எஸ்.வி.ராஜதுரை அவர்களின் கடும் உழைப்பின் விளைவு.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
கார்ல் மார்க்ஸ் - பிரெடெரிக் எங்கெல்ஸ்
தமிழாக்கமும் அறிமுகமும் விளக்கக்குறிப்புகளும்:
எஸ்.வி. ராஜதுரை

அறிக்கை தோன்றிய சமூக வரலாற்றுச் சூழல், அதன் சாகச வரலாற்றுப் பயணம் பற்றிய 200 பக்க அளவில் அறிமுகப் பகுதி.

அறிக்கையின் ஒவ்வொரு சொல்லுக்கும் தொடருக்கும் கடும் அறிவு உழைப்பினாலும், சமகால மார்க்சிய அறிஞர்களுடன் உரையாடியும் திரட்டிய விளக்கக் குறிப்புகள்.
ஒவ்வொரு பொதுவுடைமையாளரின் கையிலும் இருக்க வேண்டிய நூல்.

ராயல் அளவில் (1/4 கிரவுன்), தரமான தாள், 480 பக்கங்கள், சிறந்த தையற்கட்டு

2014ம் ஆண்டு ஜனவரியில் வெளிவருகிறது.
முன் வெளியீட்டு திட்டத்தில் ரூ. 250 மட்டுமே. (தபால் செலவு தனி)

இச்சலுகை டிசம்பர் 31, 2013 வரை மட்டுமே.

மணியார்டர் (M.O) தொடர்பு முகவரி
பிரசன்னா,
முகம் வெளியீட்டகம்,
20/37, ஐயர் மனைப் பிரிவு, 13வது தெரு,
சிங்காநல்லூர், கோயம்புத்தூர் - 641 005.
தொடர்பு எண் - 91590 33939

• தோழர் செந்தமிழன் திருச்சி சிறையில் இறக்கும் தருவாயில் இருக்கிறாரா?

• தோழர் செந்தமிழன் திருச்சி சிறையில் இறக்கும் தருவாயில் இருக்கிறாரா?

தோழர் தமிழரசன் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு விடுதலைப்படையானது தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி அரியலூரில் மருதையாற்றுப் பாலத்திற்கு வெடிகுண்டு வைத்தது யாவரும் அறிந்ததே. அதில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து 30 மேற்பட்ட பயணிகள் இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தோழர் செந்தமிழன் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தோழர் தமிழரசனுடன் சேர்ந்து செயற்பட்டவர். கடந்த இருபது வருடங்களாக இவர் திருச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றன.

தோழர் செந்தமிழன் மனநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருப்பதாக அ.மாக்ஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நீதிமன்றம் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டிருந்தும்கூட அரசு தோழர் செந்தமிழனை விடுதலை செய்யாமல் தொடர்ந்து அடைத்து வைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இன விடுதலைக்காக போராடிய ஒரு தோழர் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் இறக்கும் தருவாயில் இருப்பதானது மிகவும் வருத்தத்குரிய செய்தியாகும்.

தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுப்பதாக கூறும் உணர்வாளர்கள் அவருடன் சேர்ந்து இயங்கிய தோழர் செந்தமிழன் விடுதலைக்கு உதவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

• மாநாட்டுக்கு பணம் வழங்கிய “லைக்கா”அல்லிராஜா

• மாநாட்டுக்கு பணம் வழங்கிய “லைக்கா”அல்லிராஜா

நடிகை திரிசாவை அழைத்து மானாட மயிலாட நடத்தியவர்!

மகனின் பிறந்த நாளுக்கு நடிகர் சிம்புவை அழைத்தவர்!

இளையராசாவை அழைத்து பெரும் செலவில் கச்சேரி நடத்தியவர்!

தற்போது மாநாட்டுக்கு மகிந்தவிடம் பணம் கொடுத்துள்ளார்!

இவர் ஒரு இலங்கை தமிழர். அதுவும் வன்னியைப் பிறப்பிடமாக கொண்டவர். இவர் தமிழ் மக்களிடமே தனது வியாபாரத்தை ஆரம்பித்தவர். புலத்தில் தமிழ் மக்களிடம் உழைத்த பணத்தை அநியாயமாக ஆடம்பரமாக தமிழ் இனத்திற்கு விரோதமாக செலவு செய்கிறார. இதை நான் கடந்த எனது பதிவுகளில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அப்போது அவரது கைக்கூலிகள் சிலர் அவர் தமிழ் மக்களுக்கு நிறைய உதவி செய்கிறார் என்றும் அவர் மீது அபாண்டமாக பழி சுமத்தக் கூடாது என்றும் எழுதினார்கள். அவருடைய நிறுவனத்தில் பணி புரிந்த அவரால் பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் இவரை அம்பலப்படுத்துமாறு தொடர்ந்து கேட்டு வந்தனர். அவர்கள் பல ஆதாரங்களையும் தர முன்வந்தார்கள்.

இலங்கையில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என பல தலைவர்களை நாடுகளை தமிழ் மக்கள் கேட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் மாணவர்கள் இளைஞர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் முன்னனி நிறுவனமான அதுவும் இலங்கை தமிழரின் நிறுவனமான “லைக்கா” கம்பனி மகிந்தவின் மாநாட்டுக்கு பண உதவி வழங்கிய செய்தி தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

“லைக்கா” முதலாளி அல்லிராஜா மாநாட்டுக்கு பண உதவி செய்தது மட்டுமல்ல இலங்கையில் மகிந்தவுடன் சேர்ந்து பண முதலீடு செய்யவுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஏற்கனவே அவர் மகிந்த குடும்ப உறவினர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகளை லைக்கா முதலாளி இதுவரை மறுக்கவில்லை என்பதோடு அதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறார்.

இவரது இந்த தமிழ் இன விரோத செயற்பாடுகள் நன்கு தெரிந்தும் பல ஊடகங்கள் அவரது விளம்பர வருமானத்திற்காக வாய் திறக்க மறுக்கினறன.

லைக்கா முதலாளி அல்லிராஜா ஒரு இலங்கை தமிழர். அதுவும் வன்னி தமிழர். அவரது வன்னியில் குழந்தைகள் உணவின்றி தற்கொலை செய்கின்றனர். இளம் பெண்கள் வாழ வழியின்றி பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஆனால் புலத்தில் தமிழ் மக்களை வைத்து உழைத்து சம்பாதித்த பணத்தை அவர் தமிழர்களைக் கொன்ற மகிந்த கும்பலுக்கு உதவுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.

இவர் தொடர்ந்தும் இவ்வாறு திமிராக, பொறுப்பற்றுச் செயற்படுவாரேயானால் தமிழ் மக்கள் இவரை புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.

குருவே! சாணக்கியரே!

குருவே! சாணக்கியரே!

உங்கள் விருப்பப்படி கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ளேன்!

உங்கள் ஆசைப்படி முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்துள்ளேன்!

உங்கள் எண்ணப்படி நெடுமாறனை சிறையில் அடைத்துள்ளேன்!

அடுத்து வைகோ சீமான் பேர்வழிகளையும் பிடித்து உள்ளே போடட்டுமா?

- என்றும் உங்கள் பாப்பாத்தி ஜெயா

வெள்ளை வான் கதைகள்( White Van Stories )

வெள்ளை வான் கதைகள்( White Van Stories )

லீனா மணிமேகலையின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட “வெள்ளை வான் கதைகள்” ஆவணப்படம் இன்று (13.11.2013) மாலை 5 மணிக்கு மத்திய லண்டனில் உள்ள கலீல் லெக்சர் தியேட்டரில் திரையிடப்பட்டது.

மாலை 5 மணி முதல் 7 மணி வரை படம் திரையிடப்பட்டது. அதன் பின்னர் 7 மணி முதல் 9 மணிவரை உரையாடல் நடைபெற்றது. நேரமின்மை காரணமாக என்னால் உரையாடலில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது.

இங்கிலாந்து பிரதமருடன் சென்ற சனல்-4 ஊடகவியலாளர் காலம் மக்ரே யாழ்ப்பாணம் செல்ல முடியவில்லை. இலங்கையில் இது வரை 16 மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் போயுள்ளார்கள். உலகத்திலேயே ஊடகவியலாளருக்கு பாதுகாப்பற்ற நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் முதல் இலங்கையின் எல்லா பாகங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களை பேட்டி எடுத்து ஆவணப்படம் தயாரித்திருக்கும் மணிமேகலையின் பணி நிச்சயம் பாராட்டுக்குரியது. அவருக்கு எமது வாழ்த்துகள்.

இலங்கையில் பல வருடங்களாக அரசினால் பலர் காணாமல் போயுள்ளனர். புலிகளினால் பலர் காணாமல் போயுள்ளனர். முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினால் காணாமல் போயுள்ளனர். ஏன் ஜே.வி.பி யினால் கூட பலர் காணாமல் போயுள்ளதாக கதைகள் உண்டு. இவ்வாறு பல கதைகள் உள்ள நாட்டில் லீனா மணிமேகலை அரசினால் காணாமல் போயுள்ளோரின் கதையை “வெள்ளைவான் கதைகள்” என ஆவணப்படுத்தியுள்ளார்.

இலங்கை அரசினால் தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் காணாமல் போயுள்ளனர் என்பதை லீனா மணிமேகலை துணிச்சலுடன் காட்டியிருக்கிறார். இதில் வேடிக்ககை என்னவெனில் இன்று பலரின் காணாமல் போவதற்கு காரணமாக உள்ள மகிந்த ராஜபக்ச அவர்கள் 1990 களில் பல சிங்கள மக்களின் காணாமல் போவதை ஜ.நா வரை சென்று வாதாடியதையும் இவர் இப் படத்தில் காட்டியிருக்கிறார்.

காணாமல் போனவர்களுக்காக போராடி காணாமல் போயிருக்கும் லலித், குகன் போன்றவர்கள் பற்றி லீனா ஏன் தனது படத்தில் குறிப்பிட மறந்தார் என்று புரியவில்லை? லலித் மற்றும் குகனிற்காக பல சிங்கள மக்களும் வீதியில் இறங்கி போராடியதை நாம் மறக்க முடியாது. அதனால் அவர்கள் எங்கு இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அந்த சிங்கள் மக்கள் அறிந்து அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த இருவருக்காக அவர்களுடைய தோழர்கள் அவர்களுடைய வீட்டை சிரமதான அடிப்படையில் திருத்தி கொடுத்தும் இருக்கிறார்கள்.

இரண்டு மணி நேர இந்த ஆவணப் படத்தை பார்த்த பின்பு தங்கள் தந்தையர், கணவன்மார்கள், பிள்ளைகள் ஆகியோரைக் காணாது தவிக்கும் அந்த அப்பாவிகளுக்கு ஒரு பதிலை தெரிவிக்காது இந்த அரசு ஏன் இழுத்தடிக்கிறது என்ற ஆத்திரமே மேலோங்கிறது. நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன? மனித உரிமை அமைப்புகள் என்ன செய்கின்றன? ஜ.நா மன்றம் என்ன செய்கிறது? யுத்தம் முடிந்து 4 வருடமாகியும் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக்கூட ஒரு அரசால் தெரிவிக்கவில்லை எனில் அந்த மக்கள விரோத அரசை இந்த உலகம் இன்னும் அனுமதித்துக் கொண்டு இருக்கிறது என்பதை எண்ணி எரிச்சலடைகிறோம். இது லீனா மணிமேகலை யின் வெற்றி என்பதில் சந்தேக மில்லை.

படத்தில் ஒரு அவசரத் தன்மை தெரிகிறது. கொஞ்சம் பொறுமையோடு செய்திருந்தால் ஒரு சிறந்த ஆவணப்படமாக வந்திருக்கும். பல்லாயிரம் கதைகளை ஒரு இரு மணி நேரப்படத்தில் முழுமையாக காட்ட முடியாது என்பதை உணர்கிறோம். இருப்பினும் இன்றைய நிலையில் இலங்கை அரசை தோலுரித்து காட்டியிருக்கும் லீனா வின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

லீனா ஏற்கனவே மீனவர் பிரச்சனை பற்றி “செங்கடல்” என்னும் படம் எடுத்திருக்கிறார். தற்போது காணாமல் போனோர் கதைகள் பற்றிய “வெள்ளை வான் கதைகள்” எடுத்திருக்கிறார். அவர் அடுத்து தமிழ்நாட்டில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இருக்கும் “சிறப்பு அகதிகள் முகாம்” பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் மக்கள் சார்பாக தாழ்மையுடன் கெட்டுக்கொள்கிறேன்.

• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள கட்சிகளுடன் தமிழ் மக்கள் சேர்ந்து மகிந்த ராஜபக்ச அரசை தோற்கடிக்க வேண்டும்- சுனந்த தேசப்பிரிய

• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள கட்சிகளுடன் தமிழ் மக்கள் சேர்ந்து மகிந்த ராஜபக்ச அரசை தோற்கடிக்க வேண்டும்- சுனந்த தேசப்பிரிய

கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.11.2013) யன்று லண்டனில் ஈஸ்டகாமில் மாலை 5.00 மணியளவில் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு சுனந்த தேசப்பிரிய உரையாற்றினார்.

இலங்கை- நமக்கு முன்னுள்ள கருத்தியல் தெரிவுகளும் செயற்பாட்டு வழிமுறைகளும் என்னும் தலைப்பில் பேராசிரியர் கணேசன் கருத்தரங்கை வழிநடத்தினார். சுனந்த தேசப்பிரிய ஆங்கிலத்தில் நடத்திய உரையாடலின் தொகுப்புரையை சுசீந்திரன் தமிழில் வழங்கினார்.

சுனந்த தேசப்பிரிய ஒரு ஊடகவியலாளர். மனித உரிமைச் செயற்பாட்டாளர். முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர். தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என பல காலமாக வலியுறுத்தி வருபவர். தற்போது மகிந்த அரசின் அச்சுறுத்தல் காரணமாக சுவிற்சலாந்தில் தஞ்சம் பெற்று இருப்பவர்.

வடக்கு மாணாசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருப்தை ஒரு நல்ல தொடக்கமாக தான் கருதுவதாகவும் இதிலிருந்து ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி செல்ல முடியும் என சுனந்த தேசப்பிரிய தனது உரையாடலின் போது குறிப்பிட்டார். மேலும் கூட்டமைப்பானது அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் பேசுவதிலும் விட சிங்கள மக்களுடன் பேசுவது பயன் உள்ளதாக இருக்கும். ஏனெனில் சிங்கள மக்களின் ஆதரவு இன்றி யாராலும் எந்த தீர்வையும் தர முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முன்பு சந்திரிக்கா ஒரு சமாதானத்தை தருவார் என நம்பினோம். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அது கைகூடவில்லை. இன்று நிiமை மாறியிருக்கிறது. நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைத்தால் அனைத்து மக்களுக்கும் சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் சிங்கள உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் கட்டுக்காசு கூட இல்லாமல் சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும் என்றார்.

நாம் எமக்காக சிங்கள் மக்கள் குரல் கொடுப்பதில்லை என்கிறோம். அதேவேளை சிங்கள மக்களில் இருந்து எமக்காக குரல் கொடுக்கும் சுனந்த தேசப்பிரிய போன்றவர்களை நாம் எந்தளவு ஆதரவளித்து ஊக்கப் படுத்துகிறோம்?

அரசு தரப்பு சாட்சியாக மாறி தமிழ் இனப் போராளிகளைக் காட்டிக் கொடுத்த வடிவேல் ராவணன்

• அரசு தரப்பு சாட்சியாக மாறி தமிழ் இனப் போராளிகளைக் காட்டிக் கொடுத்த வடிவேல் ராவணன் பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்!

ராமதாஸ் அய்யா அவர்கள் தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதில் விழுப்புரம் தனித் தொகுதியில் பா.ம.க வேட்பாளராக அதன் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் அவர்களை அறிவித்துள்ளார். காட்டிக் கொடுத்த துரோகிக்கு வாய்ப்பா? அதுவும் தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் பா.ம. க வில்? நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது.

கொடைக்கானல் வெடி குண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தனது வானொலி அறிவிப்பாளர் வேலையை தக்க வைப்பதற்காக அரசு தரப்பு சாட்சியாக மாறி தமிழ் இனப் போராளிகளைக் காட்டிக் கொடுத்தவர் வடிவேல் ராவணன். இவரது சாட்சியம் மூலமே தமிழின போராளிகளான பொழிலன் , முகிலன், இளங்கோ, அறிவழகன் போன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அத்தகைய துரோகியை வேட்பாளராக அறிவித்ததன் மூலம் ராமதாஸ் அய்யா அவர்கள் மிகப் பெரும் தவறை புரிந்துள்ளார்.

மதுரை சிறையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது தனது கட்சியை சேர்ந்த பசுபதி பாண்டியனுக்காக போராட்டம் நடத்திய ராமதாஸ் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டார். அவர் மதுரை சிறையில் எனக்கு அருகில் வைக்கப்பட்டார். அப்போது அவரிடம் “வடிவேல் ராவணன் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். அவரை எப்படி உங்கள் கட்சியில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அய்யா அவர்கள் “கைது செய்யப்பட்ட போது அவர் எங்கள் கட்சியில் இருக்கவில்லை. மேலும் தற்போது அவரிடம் இது பற்றி பேசியுள்ளோம். வழக்கு விசாரணை வரும்போது நிச்சயம் அவர் அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மாட்டார்” என உறுதியளித்தார்.

ராமதாஸ் அய்யா அவர்கள் உறுதியளித்ததால் வடிவேல் ராவணன் அப்ரூவராக சாட்சி சொல்ல மாட்டார் என நம்பினேன். அதுபோல் மறியல் போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறை வந்த வடிவேல் ராவணன் என்னை சிறையினுள்ளே சந்தித்து தான் தவறு செய்து விட்டதாகவும் ஆனால் விசாரணை வரும்போது நிச்சயம் அரசுக்கு சார்பாக சாட்சி சொல்லமாட்டேன் என உறுதியளித்தார்.

ஆனால் வழக்கு விசாரணை வந்தபோது அவர் எனக்கு உறுதியளித்தமைக்கு மாறாக , அய்யா ராமதாஸ் எனக்கு கூறியதற்கு மாறாக, அரசு தரப்பு ஆதரவாக சாட்சி கூறினார். அவரது சாட்சியம் மூலம் தமிழின உணர்வாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

அன்று தனது சுய நலனுக்காக தமிழின போராளிகளைக் காட்டிக் கொடுத்தவர் நாளை தனக்கு வோட்டு போடும் விழுப்புரம் மக்களைக் காட்டிக் கொடுக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவே அய்யா ராமதாஸ் அவர்கள் உடனடியாக வேட்பாளரை மாற்ற வேண்டும். இல்லையேல் பா.ம.க விழுப்புரம் தொகுதியில் கட்டுக்காசு கூட சிடைக்காத அளவிற்கு மாபெரும் தோல்வி பெறும். பெற வேண்டும்.

தமிழின உணர்வாளர்களே ஒன்றாக குரல் கொடுங்கள்!
காட்டிக் கொடுத்த துரோகிகளை தூக்கியெறிவோம்!!
விழுப்புரம் மக்களவே விழிப்போடு தயாராகுங்கள்!!!

அதிசயம். ஆனால் உண்மை.!! கொலைகாரர்களே கொலையைக் கண்டிக்கின்றனர் !!!!!

இன்று!

• இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? – கலைஞர்.
• இசைப்பிரியா கொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்- ப. சிதம்பரம்.

நாளை!
• இசைப்பிரியாவின் கொலையை கண்டிக்கிறேன்- மகிந்த ராஜபக்ச

அதிசயம். ஆனால் உண்மை.!!
கொலைகாரர்களே கொலையைக் கண்டிக்கின்றனர் !!!!!

இசைப்பிரியா மட்டுமல்ல 40 அயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள். கொலைக்கு அனைத்து வகையிலும் உதவியவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இலங்கை ராணுவத்திற்கு அன்று மட்டுமல்ல இன்றும்கூட பயிற்சி ஆயுதம் என அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது இந்திய அரசு.

இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம் என்கிறார் கோத்தபாயா. இந்தியாவின் உதவி இல்லாவிடின் யுத்தத்தில் நாம் வென்றிருக்க முடியாது என்கிறார் மகிந்த ராஜபக்ச. அதுமட்டுமல்ல இனப் படுகொலை புரிந்த ராஜபக்சவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாத்து வருவதும் இதே இந்திய அரசுதான்.

ஆனால் இன்று சிலர் ஏதோ ராஜபக்ச மட்டுமே கொலைகாரன் என்பது போலவும் இந்திய அரசு அப்பாவி போலவும் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாக நாம் கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால் கொலைகாரர்களே நீதி விசாரணை வேண்டும் என அப்பாவியாய் நடிப்பதை இப்போதுதான் நிஜத்தில் பார்க்கிறோம்.

தேர்தல் வருகிறது. மக்கள் பிய்ந்த செருப்புகளுடன் தயாராய் இருக்கிறார்கள். ஓட்டு கேட்டு வரும் இந்த நாய்களுக்கு செருப்படி கொடுக்க தயாராய் இருக்கிறார்கள் என்ற பயம். பதவி வேண்டுமே என்ற நப்பாசை. எனவே மக்களை ஏமாற்ற மாயாஜால அறிக்கை விடுகிறார்கள். ஆனால் இம்முறை மக்கள் ஏமாறமாட்டார்கள்.

யுத்தத்தின் இறுதி நேரத்தில் புலிகளும் மக்களும் இந்திய தலைவர்களின் பேச்சை நம்பி சரணடைந்தார்கள். இந்த ஏற்பாட்டை செய்தவர்கள் கலைஞர் மகள் கனிமொழி மற்றும் சிதம்பரம் போன்றவர்கள். சரணடைபவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். இருந்தும் தங்கள் பதவி நலன்களுக்காக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை இவர்கள் காவு கொடுத்தார்கள்.

யார், யார் சரணடைந்தார்கள்? சரணைடைந்தவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் ? என்பதெல்லாம் அப்போதே சோனியாகாந்தி, கலைஞர் கருனாநிதி, சிதம்பரம், கனிமொழி போன்றவர்களுக்கு தெரியும். அனைத்து விடீயோக்களும் இவர்களிடம் உண்டு. ஆனால் ஏதோ இப்பதான் இவற்றை பார்ப்பது போலவும் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைவதாகவும் நாடகம் போடுகின்றனர். மக்களை ஏமாற்ற அறிக்கை விடுகின்றனர். நாளை இசைப்பிரியாவின் கொலை தானும் கண்டிப்பதாக மகிந்த ராஜபக்சவும் அறிக்கை விடக்கூடும்!

மக்களின் படுகொலைகளுக்கு யார் காரணமோ அவர்கள் எல்லாம் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். வரலாற்றில் இதுவே இதுவரை நடந்திருக்கிறது. இனியும் இவ்வாறே நிகழும். இதற்கு சோனியாவோ அல்லது கலைஞரோ தப்ப முடியாது. சிதம்பரம் கனிமொழி போன்றவர்கள் சேர்த்து வைத்திருக்கும் கோடிக் கணக்கான ஊழல் பணம் அவர்களை ஒருபோதும் காப்பாற்ற போவதில்லை.

ஓ இசைப் பிரியாவே!

உன்னைக் கொன்ற அதே இலங்கை, இந்திய ராணுவங்களே 1972ல் மனம்பேரி என்ற சிங்கள யுவதியைக் கொன்றது.

60 ஆயிரம் சிங்கள இஞைர்கள் இலங்கை இந்திய ராணுவங்களால் 1989ல் கொல்லப்பட்டார்கள். ஆனால் அதே இளைஞர்கள் மீண்டும் பலமாக எழும்பிய வரலாறு எமது தீவில் உள்ளது அல்லவா!

எனவே உறுதியாக உரத்து கூறுகிறோம். உனது கொலைக்காக நாம் ஒப்பாரி வைக்கப்போவதில்லை.

நாம் வீரம் செறிநத் போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். எனவே மீண்டும் எழுவோம்.

கொலைகாரர்களை வேரோடு சாய்ப்போம். விடுதலை பெறுவோம். இது உறுதி. உறுதி.

“புரட்சிப் புயல்” வைகோ அவர்களுக்கு!

• மதிப்புக்குரிய “புரட்சிப் புயல்” வைகோ அவர்களுக்கு!
ஒரு ஈழத் தமிழன் பணிவுடன் எழுதும் மடல்.

உங்கள் தேர்தல் அரசியலுக்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டு வைக்கலாம். பதவியைப் பிடிப்பதற்கான் ஓட்டு அரசியல் அது என புரிந்து கொள்கிறோம். ஆனால் உங்கள் அரசியல் நலனுக்காக பி.ஜே.பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சி என்றோ அல்லது பி.ஜே.பி பதவிக்கு வந்தால் ஈழம் மலரும் என்றோ எங்களை வைத்து தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பி.ஜே.பி ஆட்சியில் இருந்த போது தமிழீழத்தை பெற்று தரவில்லை. ஏன் இன்றும்கூட அது தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்றோ அல்லது போர்க் குற்றம் என்றோ இது குறித்து மகிந்த ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக அக் கட்சி தலைவர்கள் கொழும்பு சென்று மகிந்தவுடன் கைகுலுக்கி விருந்துண்டு பரிசு பெற்று வருகின்றனர்.

• நீங்கள் இப்போது அடிக்கடி புகழும் வாஜ்பேயின் பொற்கால ஆட்சியின்போது யாழ்பாணம் புலிகளால் முற்றுகை இடப்பட்டதும் 40 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்களை அந்த வாஜ்பேய் அரசே காப்பாற்றியது என்பதும் தாங்கள் அறிந்ததே. அப்படியிருக்க அவருடைய ஆட்சியை எப்படி உங்களால் புகழ முடிகிறது?

• அவருடைய ஆட்சிக்காலத்தில் சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சி கொடுத்தது. அதற்காக அவரது ஆட்சி சிறந்த ஆட்சி என்கிறீர்களா?

• அவருடைய ஆட்சிக்காலத்தில் இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு செய்த பாரிய ஆயுத உதவிக்காகப் பாராட்டுகிறிர்களா? தமிழர்களைக் கொல்ல இந்திய அரசு ஆயுதம் வழங்கிய ஆட்சி எப்படி சிறந்த ஆட்சியாக உங்களால் கருதப்படுகிறது?

• புலிகளின் ஆயுதக் கப்பலை சர்வதேச எல்லைக்குள் வைத்து தாக்கியழித்தமைக்காகப் பாராட்டுகிறீர்களா?

• தமிழ்நாட்டில் பல அகதிகளை புலிகள் என்று பிடித்து சிறையில் அடைத்தார்களே. அதற்காக பாராட்டுகிறீர்களா? அல்லது புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தொடர்ந்து தடை செய்து வந்தமைக்காகப் பாராட்டுகிறீர்களா?

• இன்றும்கூட சிறப்பு அகதிகள் முகாம் இருக்கிறதே. அதையும் மூடாமல் பராமரித்தார்களே. அதற்காகப் பாராட்டுகிறீர்களா?


இத்தகைய தமிழர் விரோத பி.ஜே.பி யை ஆதரிப்பதும் அது ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு நன்மை செய்யும் என்றும் கூறுவதும் தமிழ் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல சுத்த அயோக்கியதனமும் ஆகும்.

இறுதியாக உங்களிடம் நாம் கேட்பது என்னவெனில் உங்கள் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு ஈழம் மலராவிட்டாலும் பரவாயில்லை தமிழ்நாட்டில் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்து கொடிய சிறப்பு முகாம்கள் மூடப்படும் என்றாவது உங்களால் உறுதிமொழி தரமுடியுமா?

குறிப்பு- காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டினதும் வெளியுறவுக் கொள்கை ஒன்றுதான். இவையிரண்டும் ஒருபோதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை.

உங்களுக்கோ அல்லது உங்கள் கட்சியினருக்கோ எம்.பி பதவியோ அல்லது அமைச்சுப் பதவியோ வேண்டுமானால் தாராளமாக நீங்கள் பி.ஜே.பி கட்சியுடனும் சேருங்கள். ஆனால் அதற்காக பி.ஜே.பி வந்தால் ஈழம் மலரும் என்ற மாதிரி எங்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
அப்பாவித் தமிழன்