Saturday, November 30, 2013

• தோழர் செந்தமிழன் திருச்சி சிறையில் இறக்கும் தருவாயில் இருக்கிறாரா?

• தோழர் செந்தமிழன் திருச்சி சிறையில் இறக்கும் தருவாயில் இருக்கிறாரா?

தோழர் தமிழரசன் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு விடுதலைப்படையானது தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி அரியலூரில் மருதையாற்றுப் பாலத்திற்கு வெடிகுண்டு வைத்தது யாவரும் அறிந்ததே. அதில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து 30 மேற்பட்ட பயணிகள் இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தோழர் செந்தமிழன் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தோழர் தமிழரசனுடன் சேர்ந்து செயற்பட்டவர். கடந்த இருபது வருடங்களாக இவர் திருச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றன.

தோழர் செந்தமிழன் மனநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருப்பதாக அ.மாக்ஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நீதிமன்றம் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டிருந்தும்கூட அரசு தோழர் செந்தமிழனை விடுதலை செய்யாமல் தொடர்ந்து அடைத்து வைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இன விடுதலைக்காக போராடிய ஒரு தோழர் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் இறக்கும் தருவாயில் இருப்பதானது மிகவும் வருத்தத்குரிய செய்தியாகும்.

தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுப்பதாக கூறும் உணர்வாளர்கள் அவருடன் சேர்ந்து இயங்கிய தோழர் செந்தமிழன் விடுதலைக்கு உதவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment