Friday, December 29, 2017

ஒருநாள் கோயில் யானை குளித்து நெற்றியில் விபூதி பீசி சுத்தமாக தெருவில் வந்து கொண்டிருந்தது.

ஒருநாள் கோயில் யானை குளித்து நெற்றியில் விபூதி பீசி சுத்தமாக தெருவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாக்கடையில் புரண்டு கொண்டிருந்த பன்றி ஒன்று யானையைப் பார்த்து சவால் விட்டதாம்.
ஆனால் யானையோ எதுவும் கேட்காதது போல் ஒதுங்கிச் சென்றதாம். அதைப் பார்த்த பன்றி தன் அருகில் இருந்த இன்னொரு பன்றியிடம் கூறியதாம் “பார்த்தியா, யானையே எனக்கு பயந்து போகின்றது?”என்றதாம்.
ஆனால் பன்றியை மிதித்தால் அதன் சாக்கடை நாத்தம் தன் உடம்பில் ஒட்டிவிடும் என்பதாலேயே யானை மௌனமாக ஒதுங்கிச் சென்றது என்ற விபரம் இந்த பன்றிக்கு தெரியவில்லை.
இந்தக் கதையை படித்தவுடன் சுமந்திரன் விட்ட சவாலுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மௌனமாக ஒதுங்கி போவது உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
அண்மையில் யாழ் தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் மாவை சேனாதிராசாவும் சுமந்திரனும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அவர்களுடைய உரையாடல் இது
சுமந்திரன்- “அண்ணை! நீங்கள் சட்டம் படித்திருக்க வேண்டும்”
மாவை சேனாதிராசா- “படித்து …..”
சுமந்திரன்- “பேமஸ்சான வக்கீலாக வந்திருக்கலாம்..”
மாவை சேனாதிராசா- “வந்து …..”
சுமந்திரன் - “ஜனாதிபதி சட்டத்தரணியாக வந்திருக்கலாம்”
மாவை சேனாதிராசா- “வந்து ….”
சுமந்திரன்- “எம்.பி யாகி தமிழ் மக்களை ஏமாற்றி நிறைய பணம் சம்பாதிக்கலாம்”
மாவை சேனாதிராசா- “அதைத்தானே இப்ப செய்து கொண்டிருக்கிறேன்”
சுமந்திரன்- ?????
குறிப்பு- நெடுக சீரியஸ் ஆன பதிவுகள் என்றால் கொஞ்சம் போர் அடிக்கும். எனவேதான் ரிலாக்ஸ்ற்கு இந்த நகைச்சுவை பதிவு.
சுமந்திரனை பன்றியுடன் ஒப்பிட்டு பன்றியைக் கேவலப்படுத்திவிட்டதாக தயவு செய்து யாரும் என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

எப்படி இவரால் இப்படியெல்லாம் பேச முடிகிறது?

எப்படி இவரால் இப்படியெல்லாம் பேச முடிகிறது?
செய்தி- அரசிடம் வேலை கேட்டால் அப்புறம் உரிமை கேட்க முடியாமற் போய்விடும்.- சம்பந்தர் அய்யா
தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்டு வாங்க முடியும்
தனக்கு இரண்டு சொகுசு பங்களா கேட்டு வாங்க முடியும்
தனக்கு சொகுசு பங்களாவுக்கு பெயிண்ட் அடிக்க 4 கோடி ருபா விசேட பிரேரணை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்
தனக்கு ஆறு சொகுசு வாகனம் கேட்டு வாங்க முடியும்
தனக்கு 30 சிங்கள படையினரை பாதுகாப்பிற்கு கேட்டு வாங்க முடியும்
தனக்கு விசேட செயலர் என்று கூறி தன் மகனுக்கும் சம்பளம் பெற முடியும்
தனக்கு மருத்துவ சிகிச்சை பெற இந்திய அரசின் உதவி பெற முடியும்
தனது காளி கோயில் கட்ட அரசிடம் நிதி பெற முடியும்.
தனது மகனுக்கு மட்டுமல்ல மகளுக்கும்கூட அரச சலுகைகள் பெற முடியும்.
இப்படி தனக்கும் தன்னுடைய சொந்த மக்களுக்கும் சலுகை பெறுவது உரிமை கேட்பதை பாதிக்கவில்லையாம்.
ஆனால் தமிழ் மக்களுக்கு வேலை கேட்டால் மட்டும் அப்புறம் உரிமை கேட்க முடியாமல் போய்விடுமாம்.
வேலை என்பது சலுகை அல்ல. அதுவும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய ஒரு உரிமையாகும்.
அந்த உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது சம்பந்தர் அய்யாவின் கடமையாகும்.
அதை மறந்து எப்படி இவரால் இப்படியெல்லாம் பேச முடிகிறது?

கிருத்திகன் நடராஜா ( Kiruthikan Nadarajah) அவர்கள் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
வவுனியாவைச் சேர்ந்த கிருத்திகன் நடராஜா ( Kiruthikan Nadarajah) அவர்கள் “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள கிருத்திகன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
முதலில் என்னை மன்னிக்க. இன்று தான் உங்கள் நூல் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இவ்வளவு நாளும் பரீட்சைகள் மற்றும் எனது இறுதியாண்டு படிப்போடு பறந்து சென்று விட்டது.
நேற்றைய தினம் தான் எனது மின்னஞ்சலினை சரிபார்க்கும் போது, உங்களது புத்தகம் இருந்தது தெரிய வந்தது. ஒரு மாதிரியாக வாசித்து முடித்து விட்டேன்.
சில விடயங்களை அலச விரும்புகிறேன்.
தோழர் தமிழரசனின் அறிமுகம் சிறப்பு.
அதனைத் தொடர்ந்து இவ்வளவு காலமும் நான் “பேரவை” என்ற அமைப்பு இலங்கையில் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்று நினைத்திருந்தேன். அது முற்றுமுழுதான பிழையான விடயம் என்பதையும் பின்னர் தான் புரிந்து கொண்டேன்.
இப்பொழுதெல்லாம் முன்பு ஆயுதம் தூக்கிய அமைப்புக்கள் தாங்கள் ஏதோ உத்தமர்கள் போல தம்மை வெளிக்கட்டி வருகின்றனர். அதனை அப்படியே இந்த நூல் நிச்சயம் மாற்றி விடும்.
இந்திய அரசாங்கத்தின் றோ செயற்பாடுகள் அன்று தொட்டு இன்று வரை அதே மாதிரியாகவே இருந்து வருகிறது.
தொடர்ச்சியாக உங்கள் இப்படியான பதிவுகள் நிச்சயம் வாசிப்போர் மனங்களில் ஏதும் மாற்றத்தினை ஏற்படுத்த வழிவகுக்கும்.
தொடர்ந்தும் உங்கள் பணியை செவ்வனே சிறப்புற செய்யுங்கள்.
நன்றியும், வாழ்த்துக்களும்,
கிருத்திகன் நடராஜா

மக்களே! உஷார் செம்பை எடுத்து உள்ளே வையுங்கள் திருடர்கள் வரப் போகிறார்கள் !!!

•மக்களே! உஷார்
செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்
திருடர்கள் வரப் போகிறார்கள் !!!
உள்ளுராட்சி தேர்தலையடுத்து மீண்டும் திருடர்கள் உங்கள் முன் வரப் போகிறார்கள்.
தேர்தலில் தமக்கு சீட்டு தரும்படி கோரி சண்டையை ஆரம்பித்துவிட்டார்கள்.
பதவிக்காக கட்சிக்குள் நடந்த சண்டையை தான் ஆரோக்கியமாக பார்ப்பதாக சுத்துமாத்து சுமந்திரன் வெட்கம் இன்றி கூறுகிறார்.
இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய சண்டை செய்யவில்லை. மாறாக தமது நலன்களை மேம்படுத்தவே போட்டி போடுகின்றனர்.
•போட்டியிடுபவர்கள் வென்றபின் 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை பெற்றுக்கொள்ளக்கூடாது.
•போட்டியிடுபவர்கள் வென்றபின் இந்தியாவில் சென்று குடியிருக்க்கூடாது. சொந்த தொகுதியிலேயே குடியிருக்க வேண்டும்.
•மக்கள் தம் குறைகளை தெரிவிக்க வசதியாக சொந்த தொகுதியில் ஒரு அலுவலகம் வைத்திருக்க வேண்டும்.
•தனக்கு உதவியாளராவோ அல்லது டிறைவராகவோ தன் குடும்ப உறுப்பினர்களை பதிவு செய்து சம்பளம் பெறக்கூடாது
•புலம்பெயர் நாடுகளுக்கு அடிக்கடி சென்று தனது சொந்தவீடு கட்ட மக்களிடம் நிதி பெறக்கூடாது.
•தனது குடும்பத்தவர்களை கொழும்பில் தங்கவைத்து அவர்களுக்கும் அரச சலுகைகள் பெறக்கூடாது
•தமக்கு பாதுகாப்பிற்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெறக்கூடாது. குறிப்பாக தமது பிள்ளைகள் நீச்சல் களம் செல்வதற்குகூட அரச வாகனம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு தரக்கூடாது.
•தமக்கு அடிக்கடி சொகுசு கதிரை வாங்கி மக்கள் பணத்தை வீண் விரயம் செய்யக்கூடாது
•வாரந்தோறும் இந்திய தூதுவரின் விருந்தில் கலந்துகொண்டு தண்ணியடிக்கக்கூடாது.
மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்படுபவர்களுக்கே கட்சிகள் சீட் வழங்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளுக்கு சம்மதிப்பவர்களுக்கே தாம் வாக்களிப்போம் என தமிழ் மக்கள் கூறவேண்டும்.
இப்படி ஒரு நிலை வருமாயின் அதன் பின் எத்தனை பேர் போட்டியிட வருகின்றார்கள் என பார்ப்போம்.
இன்று சண்டை பிடிப்பவர்களில் பாதிப்பேர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி மறைந்து விடுவார்கள்.
குறிப்பு- இந்த நிபந்தனைகள் ஒன்றும் கற்பனையானவை அல்ல. இதில் பெரும்பாலானவை ஜே.வி.பி கட்சியில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஜே.வி.பி கட்சியால் முடியுமென்றால் ஏன் தமிழ் கட்சிகளால் முடியாது?
மக்களே வோட்டு கேட்டு வருபவர்களிடம் இதனைக் கேளுங்கள்!

கடல் மேல் மிதக்க விட்டான். எங்களை கண்ணீரில் கரைய விட்டான்!!

•கடல் மேல் மிதக்க விட்டான்.
எங்களை கண்ணீரில் கரைய விட்டான்!!
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருபுறம் இலங்கை கடற்படை சுட்டது
இதுவரை 600 தமிழக மீனவன் மாண்டனர்
இன்னொருபுறம் இந்தியபடை சுட ஆரம்பித்துள்ளது
சுட்டது நாங்கள்தான் ஆனால் தோட்டா எங்களுடையது இல்லை என்று
கிண்டலாக பதில் கூறுகிறார் பாப்பாத்தி பாதுகாப்பு அமைச்சர்
இலங்கைக்கு இலவசமாக போர்க்கப்பல் வழங்கும் இந்திய அரசுக்கு
தமிழக மீனவனைத் தேடி மீட்பதற்கு கப்பல் இல்லையாம்
செவ்வாய்க்கு ராக்கட் விடும் இந்திய அரசுக்கு
புயல் வரும் என்று மீனவனுக்கு எச்சரிக்க வசதி இல்லையாம்
500 மைல் தாண்டி வந்து புலிகளின் கப்பலை தேடி அழித்தவர்களுக்கு
5 மைலுக்குள்ள இருந்த மீனவனைத் தேடி மீட்க முடியவில்லையாம்
வருடந்தோறும் 85 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ் இனம்
தன் மீனவனை உயிரோடு மீட்க முடியவில்லை என்பது மட்டுமல்ல
இறந்துபோன மீனவர்களின் உடலைக்கூட சிதைவின்றி பெற முடியவில்லை.
என்னே கொடும் துயரம் இது!
குறிப்பு- மிகப்பெரிய கப்பற்படை ,செயற்கைக்கோள்கள், ராடார்கள் அதி நவீன வசதிகள் எல்லாம் இருக்கின்றன இந்தியாவிடம். ஆனால் அவை எதுவும் தமிழரைக் காப்பாற்ற வருவதில்லை என்பதே கசப்பான உண்மை.

நடராசா சிவகுமார் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
லண்டனில் இருக்கும் நடராசா சிவகுமார் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் Accountant ஆக பணி புரிகின்றார். இவர் ஒரு சிறந்த தமிழ் இன உணர்வாளர். இவர் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகங்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து வருகின்றார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள நடராசா சிவகுமார் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு,
Man is an economic animal not a social animal as we think.
இந்த புத்தகத்தினை வாசிக்கும் போது வேதனையும் இந்திய உளவுப்படையின் நயவஞ்சகத் தன்மையையும் புரிந்து கொள்ளக்கூடியதாய் உள்ளது.
ஆயினும் ஆரம்பத்தில் இது ஒரு மார்க்சிய லெனினிய , மாவோ வை பற்றிய புத்தகமோ என்று எண்ணத் தோன்றியது. பின்பு அது மாறி தமிழரசனை பற்றிக் கூறியிருக்கிறது.
தமிழரசன் புலவர், சுந்தரம், நெப்போலியன் போன்றோர் மிகவும் அளவில்லா அன்பு மக்களிடம் வைத்து அவர்களுக்காக உழைத்தது அவர்கள் மீது மரியாதையையும் மதிப்பையும் தருகிறது.
இந்த புத்தகம் ஓரளவு இந்த உண்மையை தமிழ் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் என்பதில் எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. அவர்களது சுய மரியாதை வறுமையிலும் தெளிவாக தெரிகிறது.
இப்படியான பலர் நட்சத்திரங்களாக ஒவ்வொரு சமுதாயத்திலும் வந்து போவார்கள். அக புற காரணிகள் சரியாக அமையுமிடத்து அவர்கள் ஒரு லெனின் ஆகவோ அல்லது மாவோ ஆகவோ பெயர் எடுப்பார்கள். அர்ப்பணிப்பில் இவர்கள் சில வேளைகளில் அவர்களை மிஞ்சக் கூடும்.
நான் ஒரு மார்க்சியவாதி அல்ல. ஏனெனில் மனிதரின் ஆசைகளிற்கு மார்க்சி;யம் ஒரு பதில் வைக்காது.
இப்போ மாவோ இருந்திருந்தால் தோழர் பாலன் அவரை இலங்கை விடயத்தில் எதிர்த்திருப்பார், ஏனெனில் மாவோவும் இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொலை செய்திருப்பார். (உதாரணம் காஸ்ட்ரோ).
மாவோஇன் காலத்தில் தான் ஆப்பிரிக்காவை சீனா சுரண்டத் தொடங்கியது.
பஞ்ச சீல கொள்கையை ஆதரித்த சீனா இந்தியாவை வறிய நாடு என்று கூட பார்க்காது ருசியவிடம் அறிந்த தொழில் நுட்பத்தினை பாவித்து இந்தியாவினை ஆக்கிரமித்தது.
நான் இந்தியாவிற்காக வக்காலத்து வாங்க வரவில்லை ஏனெனில் இந்தியா செய்ததுபோல் ஒருவரும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகத்தை செய்யவில்லை.
பக்கம் 52:
ரொம்பலூரில் உள்ள குளத்தில் தமது நண்பர்கள் குளிக்க மறுத்ததற்கு அவர்களது வர்க்க சிந்தனைகள் கரணம் என்று கூறுவது என்ன வகையில் பொருந்தும். என்னை பொறுத்தவரை பாட்டாளி வர்க்கம் ஒரு கற்பனை வர்க்கம். ஏனெனில் ஒருபோதும் ஆசைகளுக்கு ஒருநாளும் முற்றுப் புள்ளி வைக்க முடியாது.
ரொம்பலூரில் உள்ள ஊத்தை குளத்திற்கும் வர்க்கத்திற்கும் என்னையா தொடர்பு? உங்களுக்கு மார்க்சியவாதம் என்ற கண்ணாடி போடாமல் பார்க்க முடியாதா?
இப்போ நாங்கள் இங்கிருந்து இலங்கை போனால் Toilet Tissue தேடுகிறோம். நாங்கள் இங்கு வந்து வர்க்கம் மாறி விட்டோமா? நீங்கள் சொல்லும் வர்க்கத்தை சார்ந்தவர்களை ஒருவாறாக துப்பரவாக வைத்து விட்டு அவர்களை அந்த குளத்தில் போய் குளி என்றால் அவர்களால் குளிக்க முடியுமா? அப்புறம் என்ன நடக்குது என்று பாருங்கோ. இது தான் மார்க்சியவாதம்.
பக்கம் 58:
ஈழ போராளிகள் தமிழர்சனின் தீர்க்க தரிசனத்தை ஏற்றிருந்தால் இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பை தவிர்த்து இருக்கலாம் என தோழர் பாலன் எழுதியதை என்னால் ஒத்துப்போக முடியவில்லை.
காரணம் இந்திய அரச இயந்திரம் ஒரு பலவீனமான இலங்கை தமிழரை எதிர்பார்த்தது. அவர்கள் ஒருபோதும் சிங்களவரை ஒரு எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் தமிழர்களை காழ்ப்புணர்ச்சியுடன் தான் பார்த்தார்கள்.
அவர்கள் தங்களது resources ஐ உபயோகித்து எவ்வாறாயினும் எங்களை உடைத்திருப்பார்கள். இந்தியன் சனத்தொகையுடன் தமிழ் நாட்டினை பார்த்தால் எங்களது விகிதத்தினை விட குறைவு. எனவே தமிழ் நாட்டுக்கு ஒரு பாடமாகவே தமிழ் மக்களை இலங்கையில் கொலை செய்து பயத்தினை ஊட்டினார்கள்.
அது அவர்களுக்கு எவ்வளவு தூரம் லாபத்தினை கொண்டு வரும் என நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எங்களுக்குள் கொழுந்து விட்டு எரியும் துன்பம் ஒரு நாள் அவர்களை எரிக்கும். இயற்கை அத்தகு பதில் சொல்லித்தான் ஆகும்.
பக்கம் 60:
பாலாவின் அறைகூவல் சிங்கள தமிழ் மக்கள் ஒன்று கூடி இந்தியாவுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை நான் முற்றாக மறுக்கிறேன்.
ஏனெனில் இது எங்களை இன்னும் பலவீனப்படுத்தி சேலை உரிய வைக்கும், இது சிங்களவரது எச்சம் அவர்களே துப்புரவு செய்யட்டும். முதலில் எங்களை அங்கீகரிக்கட்டும் நாட்டு பிரஜை ஆக, ஒரு தேசிய இனமாக, பின்பு நாங்கள் ஜக்கியப்படுவது பற்றி சிந்திக்கலாம்.
பக்கம் 67:
இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு? எந்த விதத்தில்? சிங்கள தமிழ் வெங்காயங்களை கொண்ட நாடு. தற்போதைய யுத்த உபகரணங்களுடன் ஒப்பிடும் போது ஒரு இடமும் கேந்திரம் இல்லை ஏனெனில் நீங்கள் எங்கிருந்தும் எங்கும் பாயும் ஏவுகணைகள் உள்ளன. இலங்கையில் திறமை(Skill) பெரிதாக இல்லை. எனவே இந்த வாதம் பொருந்தாது.
பக்கம் 72-79:
TNA ஒரு பல்லு பிடுங்கப்பட்ட கிழட்டு பாம்பு. அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியா இரு என்றால் இருக்கும் நிலையில் உள்ளனர்.
அவர்களை திட்டிப் பிரயோசனம் இல்லை. ஒன்று அவர்கள் செய்யலாம் கடைசி நேரத்தில் இந்தியாவின் விருப்பை விட்டு விலகி நல்ல புத்திஜீவிகளுக்கு கொடுக்கலாம்.
தங்களது தலைமையினை நல்ல காத்திரமான இந்தியாவுக்கு சோரம் போக முடியாதது ஒன்றாக மாற்ற வேண்டும். இது மிகவும் கடினம். சொல்வது சுலபம் செய்வது கடினம்
பக்கம் 81:
தனியார் கல்வி இந்தியா கொடுப்பது பற்றி ஏன் நாங்கள் அலட்டி கொள்ள வேண்டும். எல்லா வெளிநாடுகளும் நீங்கள் போய் காசு கட்டி படிக்கிறீர்கள் என் அதை அவர்கள் உங்கள் நாட்டில் கட்டிட கொதிப்படிக்கிறீர்கள்? இது இலங்கைக்கு நாளடைவில் நல்லது. ஒரு நாள் இலங்கைக்கு நல்ல ஸ்கில்ஸ் (Skills ) வந்து சேரும்.
பக்கம் 84:
இந்தியாவை பொறுத்தவரை இலங்கை ஒரு சிங்கள மாநிலம். உண்மையில் அவர்களுக்கு இலங்கை தேவையில்லை ஆனால் இலங்கைக்கு இந்தியாவை விட்டால் ஒருத்தரும் இல்லை என்ற நிலை. இந்தியாதான் அரசியல் பாதுகாப்பு இந்த போரின் போது இலங்கைக்கு எடுத்து கொடுத்தது.
தமிழனாக பார்க்கும் போது சிங்களவர்களுக்கு மிகப் பெரிய உதவிகளை போரில் இந்தியா கொடுத்திருக்கிறது. தமிழ் மக்களை அகதி நிலைக்காக்கி எங்களை ஓர் அடிமை இனமாக சிங்களவனுக்கு மாற்றி கொடுத்துள்ளது. இதற்கு சிங்களவர்கள் நன்றி கூறுகிறார்கள் போலும்.
India gave the political cover to Srilanka During War in the international arena. So Srilanka has an obligation to India. Only people got betrayed is Tamils by Indians who used us to bring Srilanka to indian Line and then destroyed us. LTTE without realising helped all along for the Indian Course.
LTTE இந்தியாவின் அபிலாஷய்களுக்கு தங்களை அறியாமல் அர்ப்பணித்து விடடார்கள்.
பக்கம் 85- 86:
இலங்கையில் உள்ளவர்கள் ஒரு வேர்ல்ட் கிளாஸ் (WORLD CLASS ) ஸ்கில்ஸ் வைத்திருப்பதாக நான் எண்ணவில்லை. அதற்கான சூழ் நிலைகள் வரவில்லை. எனவே ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்து வந்தால் என்ன? எனவே இந்தியயர்கள் வந்து உங்களது வேலைஐ கொண்டு போய் விடுவார்கள் என்பது மடை தனம்
இலங்கையில் இருக்கும் பலர் தங்கள் முதுகில் சொரிந்து விட்டு தங்களை கெட்டிக்காரர் என்று எண்ணுபவர்கள் அது இரு இனத்துக்கும் பொருந்தும். இவர்கள் யாவரும் றீ ரெயின் பண்ணுப்பட வேண்டும்.
சம்பளம் தீர்மானிப்பது சந்தையும் அவரது திறமையும். எனவே இந்த கூற்று கேள்விக்குறியே? (supply and demand , market determine and the skills level )
ராஜிவ் காந்தி / இந்தியன் காங்கிரஸ்
இவரது கொலை காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல் ஆகி எமது மக்களின் தலையில் விழுந்து விட்டது. அவர் செய்த கொலைகள் மறுக்கப்பட்டு (எனது உறவினர் சுடப்படடார்) ஆனால் அவரது மரணம் பெரிதாக்கப்பட்டது. அதனால் தமிழ் மக்கள் தான் வஞ்சிக்கப்பட்டார்கள்.
உண்மையில் அதில் இந்தியாவும் மேற்கு உலகம் நன்மை அடைந்தது. இந்தியன் உளவுத்துறை அதை தமிழ்நாட்டையும் எங்களயும் பிரிக்க அதைப் பாவித்தது. அவர்கள் ராஜிவ் இறப்பை விரும்பினார்கள்.
எங்களது ராஜதந்திர எல்லாம் வல்ல சூரியனும் தலையில் பட்டத்தினை ஏற்றார். மேனன், நம்பியார் போன்றோர் ராஜீவின் தனிப்படட உறவினால் மிக பழிவாங்கும் எண்ணத்துடன் செயல் படடார்களே ஒழிய ராஜீவின் இறப்பு அவர்களுக்கு பெரிதல்ல.
எப்போதும் தமிழ் மக்களுக்கு ஆதரவு பெருகும் போது இந்திய உளவுத்துறையும் அரசியல் இயந்திரமும் அதை எங்களுக்கு எதிராக பாவித்தது.
இது ஒரு மூக்கு சளி. கருணாநிதி பிரபாகரன் இதற்கு " sorry" சொல்வார் என்று எதிர் பார்த்தாராம்? பாலசிங்கம் அது துயர சம்பவம் என்று விடடார்.
எம்மில் பலர் காங்கிரஸ்தான் இதற்கு காரணம் என்றும் சோனியா தான் மூல காரணம் என்று நினைக்கிறது நகைப்பு. இதை கூட இந்திய அரசியந்திரம் தொலை நோக்குடன் அவர்களில் பழியை போட்டுவிட்டுத் தப்பப் பார்க்கிறது.
சோனியா காந்தியிலும் காங்கிரஸிலும் பழியை போடு விட்டு எங்களது அடுத்த சந்ததியினை மறக்க வைத்து தப்பலாம் என் நினைக்கிறார்கள்.
இலங்கையில் ஒரு போர்க்குற்ற விசரனை நடந்தால் அது இந்தியாவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து அதை எல்லா விதத்திலும் தடுக்கிறது.
பக்கம் 126:
உளவு துறையின் கொடூரம் பற்றியும் அதன் மூர்க்கத் தனத்தையும் பற்றியும் இந்த பக்கம் நன்றாக விளக்குகிறது. அது எவ்வாறு நயவஞ்சகமாக தோழர் தமிழரசனைக் கொன்றது என்று அருமையாக விளக்குகிறது.
பக்கம் 142:
புலவர் கலியபெருமாள் அவர்களின் எழுத்து நமக்கு துன்பத்தையும் அவரது கவலையையும் தருகிறது. அவர் எவ்வாறு தமிழரசனின் இறப்பை ஜீரணிக்க முடியாமல் தவித்தார் என்பது விளங்குகிறது.

பக்கம் 151:
நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் இந்தியாவின் ஏஜென்ட்கள். அவர்கள் இறுதி யுத்தத்தின் பின்பு பிரபாகரன் மரணித்தது தெரிந்தும் அதை தமிழ் நாடு மக்களுக்கு கூறாமல் ஒளித்தவர்கள். இது அவர்களுக்கு கிடைத்த instruction iபடி நடந்தார்கள்.
அவர்களுக்கு தெரியும் தமிழ் நாடு கொந்தளிக்கும் என்று. அதை தவிர்ப்பதற்கு நாடகம் ஆடினார்கள். இதனை இந்திய உளவுத்துறை அவர்களை வைத்து நன்றாக கையாண்டது.
நான் இன்னுமொரு ஏஜென்ட் தமிழருவி மணியனுடன் கதைத்த போது விரைவாக நழுவி விட்டார். அவர் எல்லாப் பிழைகளையும் சோனியாவில் போட்டுவிட்டு இந்திய அரச இயந்திரம் ஒரு தவறும் செய்யவில்லை என்று கூறித் திரிந்தவர். நாங்கள் challenge பண்ணியவுடன் நழுவினார்.
Page159/ Page 108 1st para: Compare
தமிழரசனின் பண்பும்; மக்களை நேசிக்கும் தன்மையும் அவரது ஆயுத உபயோக மறுப்பு துல்லியமாக தெரிகிறது. குறிப்பாக தோழர் பாலன் இலங்கையில் இன்னொரு தலைவர் அதனைப் பாவித்து சிறந்த தலைவராக வந்ததாகவும் கூறியிள்ளார். நிச்சயமாக அந்த தலைவரை விட தமிழரசன் மக்களைக் கூடுதலாக நேசித்திருப்பார் என ஊகிக்க முடிகிறது.
பக்கம் 161 :
பாலசிங்கம் அவர்களை மக்கள் நிப்பாடினார்கள் என்று. அது இந்திய உளவுத்துறையின் ஒரு நாடகம். இங்கு சிலர் சொல்லி திரிவார்கள் ராஜபக்சவே வருகையை தாங்கள் தடுத்தாக. உண்மையில் பிரிட்டிஷ் உளவு துறை அந்த நாடகம் ஆடி ராஜபக்ஷவை தம் வழிக்கு கொண்டு வர முயற்சி செய்தார்கள்
சாத்வீகப் போராட்டமும் அதன் வலிமையும்
எமது போராட்டத்தில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் தமிழ் மக்கள் கடைசி மூன்று நாட்களில் கொல்லப்பட்டு இருப்பார்கள். இதில் ஒரு பத்தில் ஒரு பங்கு நெறியாக நடத்தப்பட்ட ஒரு சாத்விகப் போராடத்தில் கொல்லப்பட்டிருப்பின் எங்களது வலிமை பன்மடங்காக உயர்ந்தும் ஆதரவும் பன்மடங்கு பெருகியிருக்கும். அதற்கு நல்ல நேர்மையான தலைமை தேவை. துரதிருஷ்டவசமாக எங்களிடம் நல்ல தலைமை தற்போது இல்லை. ஏனெனில் எங்களது சமுதாயம் மிகவும் அறிவு பூர்வமானது அல்ல. இப்போது தான் அறிவு வழியில் காலடி எடுத்து வைத்து இருக்கிறது, நிட்சயமாக நாங்கள் நல்ல தலைமயுடன் மீண்டும் ஒளி வீசுவோம்

நீங்கள் சினிமாவில் நடித்தீர்கள்

நீங்கள் சினிமாவில் நடித்தீர்கள்
நான் சினிமாவில் நடிக்க முடியவில்லை
எனவே
அரசியலில் நடிக்க முடிவு செய்துவிட்டேன்.
புயலில் தமிழ் மீனவர் செத்தது பற்றி
எனக்கு கவலை இல்லை
எனது அக்கறை எல்லாம்
எப்படியாவது தேர்தலில் ஜெயித்து
தமிழக முதல்வர் ஆகிவிட வேண்டும்.
ஆந்திராவில் ஒரு தமிழ் நடிகர்
கட்சியே தொடங்க முடியாது
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தெலுங்கு நடிகர்
தமிழக முதல்வராகவே வர முடியும்
- நடிகர் விஷால்
குறிப்பு-
வந்தாரை ஆளவைக்கும் தமிழ்நாடு
நம்பி வந்த தமிழ் அகதிகளை மட்டும்
சிறப்புமுகாமில் அடைத்து வைக்கும்!

•அடுத்த புலுடா தலைவி மன்னிக்கவும் புரட்சி தலைவி வருகிறார். பராக்! பராக்!

•அடுத்த புலுடா தலைவி
மன்னிக்கவும் புரட்சி தலைவி வருகிறார். பராக்! பராக்!
தமிழ் மக்களின் தலையில் தேசிக்காய் அரைக்க
மன்னிக்கவும் தமிழ் மக்களுக்காக அயாராது உழைக்க 
வருகிறார் அடுத்த புரட்(டு)சி தலைவி தீபா அம்மையார் !
ஒரு வேட்பு மனுவைக்கூட பிழையின்றி ஒழுங்காக தாக்கல் செய்ய தெரியவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த தமிழக முதல்வர் கனவு !
தங்களை கேரளா மாநிலத்துடன் இணைத்து விடுங்கள் என்று கன்னியாகுமரி மீனவன் விரக்தியில் கதறுகிறான். ஆனால் அதுகுறித்து எந்த கவலையும் இன்றி ஆர்கே நகர் தேர்தலில் போட்டி போடுகின்றனர்.
இந்த அம்மையார் இப்ப புருசனுடன் இருக்கிறாரா அல்லது கார் டிறைவருடன் இருக்கின்றாரா என்பதுகூட தெரியவில்லை. ( கட்சியை சொன்னேன்)ஆனால் அவர் தன்னை அடுத்த ஜெயா அம்மையார் என்கிறார்.
தமிழனுக்காக ஒரு துரும்பைக்கூட இதுவரை அசைக்காதவர்கள் தமிழனுக்கு முதல்வராக வர ஆசைப்படுகின்றார்கள்.
தமிழன் தலைவிதி. இன்னும் எத்தனை கூத்துகளை காண வேண்டி வருமோ?

•எல்லா தலைவர்களாலும் மறக்கப்பட்ட சிறப்புமுகாம் இனியாவது அகதிகளை விடுதலை செய்து மூடப்படுமா?

•எல்லா தலைவர்களாலும் மறக்கப்பட்ட சிறப்புமுகாம்
இனியாவது அகதிகளை விடுதலை செய்து மூடப்படுமா?
1990ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் இன்னும் மூடப்படவில்லை.
கடந்த 27 வருடங்களாக இந்தியாவில் ஈழ அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது திருச்சியில் இச் சிறப்புமுகாம் இயங்கி வருகிறது. அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி வருகின்றனர்.
எவ்வித நீதி விசாரணையும் இன்றி அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் இவ் அகதிகள் உள்ளனர்.
அவர்கள் விடுதலைகோரி உண்ணாவிரதம் இருக்கும்போது அதிகாரிகள் வாக்குறுதி கொடுப்பதும் பின்னர் அதனை நிறைவேற்றாது ஏமாற்றுவதுமாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் பல கட்சிகளும் அதன் தலைவர்களும் இச் சிறப்புமுகாமை மூடும்படி குரல் கொடுத்தனர். தற்போது அவர்களும் இதனை மறந்துவிட்டனர்.
இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஈழத் தலைவர்களும் இவ் அகதிகளை விடுதலை செய்யுமாறு இதுவரை கோரியதில்லை.
இந்நிலையில் சீமானின் நாம்தமிழர் கட்சியினர் மட்டுமே ஜ.நா வில் இச் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து சுட்டிக்காட்டி மகஜர் அளித்துள்ளனர்.
அண்மையில் சென்னையில் அரசியல்யாப்பு குறித்த கூட்டத்தில் பேசிய தலைவர்கள் குறிப்பாக காசிஆனந்தன் அய்யாகூட இச் சிறப்புமுகாம் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
யுத்தம் முடிந்து 8 வருடமாகிவிட்டது. இன்னும் எதற்காக சிறப்புமுகாம்? ஏன் இன்னும் அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யவில்லை? என்று ஒரு தலைவரால் கூட கேட்கப்படவில்லை என்பது வேதனையே.
இனியாவது யாராவது இதில் அக்கறை காட்டுவார்களா? அந்த அகதிகளின் விடுதலைக்கு வழி செய்வார்களா?
பிறக்கும் 2018 வருடமாவது இந்த அகதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்குமா?

289 நாட்களாக தொடரும் காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்!

•289 நாட்களாக தொடரும்
காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம்!
கொட்டும் மழை. நடுங்கும் குளிர். இத்தனைக்கும் நடுவில் 289 நாட்களாக தொடரும் போராட்டம்.
காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருமாறு கோரி அவர்களின் உறவுகள் 289 நாட்களாக போராடுகின்றனர்.
ஆனால் நல்லாட்சி அரசு இரங்கவில்லை. அவர்களுக்கு ஒரு தீர்வை இன்னும் வழங்கவில்லை.
ஆயுதம் ஏந்திப் போராடினால் பயங்கரவாதிகள் என்றார்கள். அகிம்சை வழியில் போராடினால்தீர்வு கிடைக்கும் என்றார்கள்.
இவர்கள் காந்தி சொன்ன அகிம்சை வழியில்தானே போராடுகிறார்கள். ஏன் இன்னும் தீர்வு வழங்கவில்லை?
வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளை நிறுவ முயலும் இந்திய தூதரும்கூட இவர்களுக்கு குரல் கொடுக்கவில்லையே.
காணாமல் போனவர்களின் பிரச்சனையைக்கூட தீர்க்க முடியாதவர்கள் இனப் பிரச்சனையைத் தீர்ப்பார்கள் என்று எப்படி நம்புவது?
உள்ளுராட்சி தேர்தலுக்காக கூட்டணி அமைக்க பல தமிழ் கட்சிகள் போட்டி போடுகின்றன.
ஆனால் இதில் ஒரு கட்சிகூட இந்த காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டத்திற்காக கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் மரணமடைந்துவிட்டனர். போராட்டம் இப்படியே தொடருமானால் மீதி உள்ளவர்களும் விரைவில் மரணமடைந்துவிடுவார்கள்.
இந்த போராட்டம் இப்படியான ஒரு முடிவை எட்டுவதையே இந்த அரசும் தமிழ் தலைவர்களும் விரும்புகிறார்கள் போலும்.
இந்த தலைவர்களின் ஒரு உறவு காணாமல் போயிருந்தால் அல்லது இந்த தலைவர்களின் ஒரு உறவு இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் இப்படி பாராமுகமாக அக்கறையற்று இருப்பார்களா?
காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி தமிழ் தலைவர்கள் அரசை வலியுறுத்துவதில்லை.
வெளிநாட்டு பிரதிநிதிகளிடமும்கூட இந்த பிரச்சனையை தமிழ் தலைவர்கள் கூறுவதில்லை.
குறிப்பாக ஒவ்வொரு வாரமும் இந்திய தூதுவரை சந்திக்கிறார்கள். ஆனால் அவரிடம்கூட இதனை வலியுறுத்துவதில்லை.
காணாமல்போனோர் பிரச்சனையை அரசு இதுவரை தீர்க்காமைக்கு இந்த தமிழ் தலைவர்கள்தான் காரணம் என்றால் அது மிகையல்ல.
தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல மாற்றுத் தலைமை தேவை என்பதையே இந்த பிரச்சனையும் உணர்த்துகிறது.

வடமாகாண கல்வி அமைச்சர் செய்வாரா?

•வடமாகாண கல்வி அமைச்சர் செய்வாரா?
வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தமிழகம் சென்றுள்ளார். அங்கு அவர் தமிழக அரசு அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார்.
அவர் ஏன் தமிழகம் சென்றார்? அங்கு அவர் என்ன பேசி வருகிறார்? என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.
ஆனால் அவர் தனது தனது தமிழக விஜயத்தை ஈழத் தமிழ் மக்களுக்கு பயன் உள்ள வகையில் மாற்ற முடியும்.
குறிப்பாக, அவர் கல்வி அமைச்சர் என்பதால் தமிழக அகதிமுகாம்களில் இருக்கும் அகதி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு வழங்கும்படி தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
அதுமட்டுமன்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களுக்கு தமிழக கல்லூரிகளில் உயர்கல்வி பெறுவதற்கு புலமைப்பரிசில்கள் வழங்கும்படி கோர வேண்டும்.
முக்கியமாக, தகவல்தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துமுகமாக தமிழகத்தில் உள்ளது போன்று ஈழத்தில் கணணிப்பூங்காக்களை ( IT PARK )நிறுவுவதற்கு உதவி கோர வேண்டும்.
இவையாவும் செய்ய வேண்டிய செய்யக்கூடிய விடயங்கள் ஆகும். இதனை அவர் செய்வாரா?

கேரள முதல்வரை சந்தித்து உதவி கேட்க தமிழக மீனவ குடும்பங்கள் முடிவு செய்துள்ளனர்.

கேரள முதல்வரை சந்தித்து உதவி கேட்க
தமிழக மீனவ குடும்பங்கள் முடிவு செய்துள்ளனர்.
இன்று தூத்துக்குடி மீனவர்கள் கேரள முதல்வரை சந்தித்துள்ளனர்.
அவரும் ஆவன செய்வதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் நாண்டுக்கிட்டு சாவுங்கடா!
மீட்புபணி அனைத்தும் முடிந்துவிட்டதாக கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
இறந்தவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாவும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்கள்மீது டார்ச்லைட் அடித்த கடற்படையிடம் குடி தண்ணீர் கேட்டதாவும் ஆனால் அவர்கள் தராமல் சென்றுவிட்டதாக கரை சேர்ந்த தமிழக மீனவர் தெரிவித்துள்ளார்.
இதைவிடக்கொடுமை என்னவென்றால் குஜராத்தில் கரைஒதுங்கிய தமிழக மீனவர்களை துறைமுகத்தினுள் குஜராத் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமன்றி அந்த தமிழக மீனவர்களுக்கு போதிய உணவுகூட அந்த அதிகாரிகளால் வழங்கப்படவில்லை.
அனைவரும் இந்தியர்கள் என்றால் மலையாள மீனவர்களுக்கு ஒரு கவனிப்பும் தமிழக மீனவர்களுக்கு புறக்கணிப்பும் ஏன்?
இதுதானா இந்திய நியாயம்?
குறிப்பு- மீனவர்களின் துயரத்தை தெரிவிக்காத தமிழ் ஊடகங்கள் நடிகர் விசாலின் வேட்புமனு நிராகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்கின்றன. அரசு மட்டுமல்ல ஊடகங்களும் தமிழனை புறக்கணிக்கின்றன.

ஒரு மாவட்டமே தங்கள் உறவுகளை காணவில்லை என்று போராட்டம் நடத்துகிறது

ஒரு மாவட்டமே தங்கள் உறவுகளை காணவில்லை என்று போராட்டம் நடத்துகிறது
மாநில முதல்வரோ அது குறித்து அக்கறையின்றி தேர்தல் பரப்புரை செய்கிறார்.
ஒரு பெண் தண்டவாளத்தில் தலைவைத்து ரயில் மறியல் செய்கிறார்.
தலைவர்கள் ஆர்.கே நகர் தேர்தலில் மும்முரமாக இருக்கின்றார்கள்.
வீதம் ஜிஎஸ்ரி வரி போட தெரிந்த மத்திய அரசுக்கு காணாமல்போன மக்களை மீட்க தெரியவில்லை.
எல்லையில் செத்தால் இந்திய வீரன் என்று பதக்கம் வழங்கும் இந்திய அரசு கடலில் செத்தால் தமிழக மீனவன் என்கிறது.
சுதந்திர தினத்திற்கு அணிவகுக்கும் ஒரு விமானம்கூட கடலில் தத்தளிக்கும் தமிழக மீனவனை மீட்க வரவில்லை.
இலங்கைக்கு அன்பளிப்பு செய்ய கப்பல்கள் இருக்கிறது. ஆனால் குமரியில் தமிழ் மீனவனை மீட்க கப்பல்கள் இல்லை.
வருடந்தோறும் 85ஆயிரம் கோடி ரூபாயை வரியாக கட்டும் தமிழன் தன் காணாமல்போன உறவுகளை மீட்டுத்தரும்படி ரயில் மறியல் செய்ய வேண்டி இருக்கிறது.
தமிழர்களின் ஒற்றுமையை குலைப்பதற்கும் தமிழ்நாட்டை உடைப்பதற்கும் திட்ட சதி நடைபெறுகிறது.
தமிழ்மக்கள் ஒன்றாக திரளவேண்டிய தருணம் இது!

•சுமந்திரன் சுத்துமாத்து!

•சுமந்திரன் சுத்துமாத்து!
செய்தி- ஆயுதக்குழுக்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தாராளமாக வெளியேறலாம்- சுமந்திரன்
சுமந்திரன் அவர்களே!
இத்தனைநாளும் கூட இருக்கும்வரையில் தெரியவில்லை. இப்போது அவர்கள் பிரிந்துபோகும்போதுதான் ஆயுதக்குழுக்களாக உங்களுக்கு தெரிகிறதா?
சரி. பரவாயில்லை. இருக்கட்டும். உங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா பைல் கட்டுக்களை சுமந்துகொண்டு இங்கு ஒருவர் பின்னால் போகிறாரே. அவரையாவது யார் என்று தெரிகிறதா?
புலிகளின் அரசியல்பிரிவு தலைவர் தமிழ்செல்வன் பின்னால் உங்கள் சம்பந்தர் அய்யா பதவிக்காக அலைந்தபோது ஆயுதக்குழுவாக அவர் தெரியவில்லையா?
தமிழ்தேசியகூட்டமைப்பை புலிகள் உருவாக்கியபோது அவர்கள் ஆயுதக்குழுவாக உங்களுக்கு தோன்றவில்லையா?
அல்லது, தமிழரசுக்கட்சி புனிதமான கட்சி என்று உங்களால் எப்படி கூற முடிகிறது?
தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்களே அமிர்தலிங்கமும் தமிழரசுக்கட்சியும்தானே.
துரையப்பாவை துரோகி என்று கூறி முதல் முதலாக துரோகி ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர்களும் தமிழரசுக்கட்சியினர்தானே!
பொத்துவில் கனகரத்தினம் கட்சி மாறியபோது அவருக்கு இயற்கை மரணம் வராது என்று பாராளுமன்றத்தில் பேசியவர் அமிர்தலிங்கம்தானே!
அருளம்பலம், தியாகராசா போன்றவர்களையெல்லாம் துரோகிகள் என்று கூறி சுடவைத்துவிட்டு இன்று நீங்கள் நல்லவர்கள். சுட்டவர்கள் ஆயுதக் குழுக்களா?
சிங்களவனின் தோலை உரித்து செருப்பு தைத்து போடுவோம் என உணர்ச்சிப் பேச்சு பேசி இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்கள் தமிழரசுக்கட்சியினர்தானே!
இப்போது தமிழரசுக்கட்சி சுத்தமான கட்சி. ஆனால் தமிழரசுக்கட்சியின் சொல்லைக் கேட்டு ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதக் குழுக்களா?
நன்றாய் இருக்கிறது உங்கட நியாயம். தமிழ் இளைஞர்கள் படிப்பை கைவிட்டு ஆயுதம் ஏந்திப் போராடியபோது இந்தியா சென்று கல்வி கற்றவர் நீங்கள்.
தமிழ் மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யாத நீங்கள் எல்லாம் ஆயுதக் குழுக்கள் என்று எள்ளிநகையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது.
பலர் அநியாயமாக இறந்தபோது நாம் கவலைப்பட்டிருக்கிறோம். ஆனால் முதன் முதலாக ஒருவர் சாகாமல் தப்பிவிட்டாரே என்று கவலைப்படுகின்றோம் என்றால் அது உங்களுக்காக மட்டுமே.