Friday, December 29, 2017

•அடுத்த புலுடா தலைவி மன்னிக்கவும் புரட்சி தலைவி வருகிறார். பராக்! பராக்!

•அடுத்த புலுடா தலைவி
மன்னிக்கவும் புரட்சி தலைவி வருகிறார். பராக்! பராக்!
தமிழ் மக்களின் தலையில் தேசிக்காய் அரைக்க
மன்னிக்கவும் தமிழ் மக்களுக்காக அயாராது உழைக்க 
வருகிறார் அடுத்த புரட்(டு)சி தலைவி தீபா அம்மையார் !
ஒரு வேட்பு மனுவைக்கூட பிழையின்றி ஒழுங்காக தாக்கல் செய்ய தெரியவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த தமிழக முதல்வர் கனவு !
தங்களை கேரளா மாநிலத்துடன் இணைத்து விடுங்கள் என்று கன்னியாகுமரி மீனவன் விரக்தியில் கதறுகிறான். ஆனால் அதுகுறித்து எந்த கவலையும் இன்றி ஆர்கே நகர் தேர்தலில் போட்டி போடுகின்றனர்.
இந்த அம்மையார் இப்ப புருசனுடன் இருக்கிறாரா அல்லது கார் டிறைவருடன் இருக்கின்றாரா என்பதுகூட தெரியவில்லை. ( கட்சியை சொன்னேன்)ஆனால் அவர் தன்னை அடுத்த ஜெயா அம்மையார் என்கிறார்.
தமிழனுக்காக ஒரு துரும்பைக்கூட இதுவரை அசைக்காதவர்கள் தமிழனுக்கு முதல்வராக வர ஆசைப்படுகின்றார்கள்.
தமிழன் தலைவிதி. இன்னும் எத்தனை கூத்துகளை காண வேண்டி வருமோ?

No comments:

Post a Comment