Friday, December 29, 2017

ஒரு மாவட்டமே தங்கள் உறவுகளை காணவில்லை என்று போராட்டம் நடத்துகிறது

ஒரு மாவட்டமே தங்கள் உறவுகளை காணவில்லை என்று போராட்டம் நடத்துகிறது
மாநில முதல்வரோ அது குறித்து அக்கறையின்றி தேர்தல் பரப்புரை செய்கிறார்.
ஒரு பெண் தண்டவாளத்தில் தலைவைத்து ரயில் மறியல் செய்கிறார்.
தலைவர்கள் ஆர்.கே நகர் தேர்தலில் மும்முரமாக இருக்கின்றார்கள்.
வீதம் ஜிஎஸ்ரி வரி போட தெரிந்த மத்திய அரசுக்கு காணாமல்போன மக்களை மீட்க தெரியவில்லை.
எல்லையில் செத்தால் இந்திய வீரன் என்று பதக்கம் வழங்கும் இந்திய அரசு கடலில் செத்தால் தமிழக மீனவன் என்கிறது.
சுதந்திர தினத்திற்கு அணிவகுக்கும் ஒரு விமானம்கூட கடலில் தத்தளிக்கும் தமிழக மீனவனை மீட்க வரவில்லை.
இலங்கைக்கு அன்பளிப்பு செய்ய கப்பல்கள் இருக்கிறது. ஆனால் குமரியில் தமிழ் மீனவனை மீட்க கப்பல்கள் இல்லை.
வருடந்தோறும் 85ஆயிரம் கோடி ரூபாயை வரியாக கட்டும் தமிழன் தன் காணாமல்போன உறவுகளை மீட்டுத்தரும்படி ரயில் மறியல் செய்ய வேண்டி இருக்கிறது.
தமிழர்களின் ஒற்றுமையை குலைப்பதற்கும் தமிழ்நாட்டை உடைப்பதற்கும் திட்ட சதி நடைபெறுகிறது.
தமிழ்மக்கள் ஒன்றாக திரளவேண்டிய தருணம் இது!

No comments:

Post a Comment