Friday, December 29, 2017

•இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் பாய்ந்து பாய்ந்து அடிப்பானாம்!

•இளகின இரும்பைக் கண்டால்
கொல்லன் பாய்ந்து பாய்ந்து அடிப்பானாம்!
மகிந்த ராஜபக்சவை ஒன்றும் செய்ய முடியாதவர்கள்
திருமாவின் தலைக்கு விலை வைக்கிறார்களாம்!
கோயிலை இடிக்குமாறு கூறிய திருமாவை கைது செய்யாவிட்டால்
தான் தீக்குளிக்கப்போவதாக எச்ச ராசா கூறுகிறார்.
திருமா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தண்டவாளத்தில் தலை வைப்பேன் என்று தமிழிசை மிரட்டுகிறார்.
திருமா தலையை வெட்டுபவர்களுக்கு ஒரு கோடி ரூபா வழங்கப்படும் என்று இந்து இயக்க தலைவர் அறிவித்துள்ளார்.
திருமா இறந்து போக வேண்டும் என்று ராமேஸ்வரத்தில் இந்து அமைப்பினர் யாகம் வளர்க்கின்றனர்.
கோயிலை இடிக்க வேண்டும் என்று பேசியதற்கே இந்தளவு பொங்குபவர்கள் கோயிலை இடித்தவருக்கு எதிராக ஏன் எதுவுமே செய்யவில்லை?
மகிந்த ராஜபக்ச பல கோயில்களை குண்டு வீசி உடைத்தார். பீரங்கியால் தகர்த்தார்.
ஆனால் இவர்கள் அவருக்கு எதிராக அறிக்கை விடவில்லை. மாறாக செங்கம்பள வரவேற்பு அல்லவா வழங்கினார்கள்.
ஒருவேளை இலங்கை இன்னொரு நாடு. அதில் நாம் தலையிட முடியாது என்று இவர்கள் காரணம் சொல்லக்கூடும்.
சரி. அப்ப, காஞ்சியில் தேவநாதன் என்ற குருக்கள் கோயில் கர்ப்பகிரகத்தில் வைத்து பல பெண்களுடன் உறவுகொண்டது கோயில் புனித தன்மைக்கு எதிரானது இல்லையா?
ஏன் இந்த இந்து தலைவர்கள் அப்போது மேகநாதன் குருக்களுக்கு எதிராக பொங்கி எழவில்லை?
அடுத்து, சங்கரராமன் என்பவரை கோயில் வளாகத்தில் வைத்து காஞ்சி சங்கராச்சாரி கொன்றாரே. அதனால் கோயில் புனிதம் கெடவில்லையா?
மடத்தினுள் வைத்து நடிகை சொர்ணமாலாவுடன் சின்ன சங்கராச்சாரி சல்லாபம் செய்தாரே. அப்பவும் கோயில் புனிதம் கெடவில்லையா?
இந்த இந்து அமைப்புகளும் தலைவர்களும் ஏன் சங்கராச்சாரிகளுக்கு எதிராக பொங்கி எழவில்லை? அந்த கொலையாளிகளை இன்றும் போற்றி வணங்கி வருகின்றனரே!
குறிப்பு-
இன்று திருமாவின் தலைக்கு விலை வைப்பவர்கள்
நாளை உனக்கு விலை வைப்பார்கள் என்பதை உணர்ந்து கொள் தமிழா!

No comments:

Post a Comment