Friday, December 29, 2017

கடல் மேல் மிதக்க விட்டான். எங்களை கண்ணீரில் கரைய விட்டான்!!

•கடல் மேல் மிதக்க விட்டான்.
எங்களை கண்ணீரில் கரைய விட்டான்!!
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருபுறம் இலங்கை கடற்படை சுட்டது
இதுவரை 600 தமிழக மீனவன் மாண்டனர்
இன்னொருபுறம் இந்தியபடை சுட ஆரம்பித்துள்ளது
சுட்டது நாங்கள்தான் ஆனால் தோட்டா எங்களுடையது இல்லை என்று
கிண்டலாக பதில் கூறுகிறார் பாப்பாத்தி பாதுகாப்பு அமைச்சர்
இலங்கைக்கு இலவசமாக போர்க்கப்பல் வழங்கும் இந்திய அரசுக்கு
தமிழக மீனவனைத் தேடி மீட்பதற்கு கப்பல் இல்லையாம்
செவ்வாய்க்கு ராக்கட் விடும் இந்திய அரசுக்கு
புயல் வரும் என்று மீனவனுக்கு எச்சரிக்க வசதி இல்லையாம்
500 மைல் தாண்டி வந்து புலிகளின் கப்பலை தேடி அழித்தவர்களுக்கு
5 மைலுக்குள்ள இருந்த மீனவனைத் தேடி மீட்க முடியவில்லையாம்
வருடந்தோறும் 85 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ் இனம்
தன் மீனவனை உயிரோடு மீட்க முடியவில்லை என்பது மட்டுமல்ல
இறந்துபோன மீனவர்களின் உடலைக்கூட சிதைவின்றி பெற முடியவில்லை.
என்னே கொடும் துயரம் இது!
குறிப்பு- மிகப்பெரிய கப்பற்படை ,செயற்கைக்கோள்கள், ராடார்கள் அதி நவீன வசதிகள் எல்லாம் இருக்கின்றன இந்தியாவிடம். ஆனால் அவை எதுவும் தமிழரைக் காப்பாற்ற வருவதில்லை என்பதே கசப்பான உண்மை.

No comments:

Post a Comment