Friday, December 29, 2017

என்ன ம—க்கடா நாங்கள் உங்களுக்கு வோட்டு போடனும்?

•என்ன ம—க்கடா நாங்கள்
உங்களுக்கு வோட்டு போடனும்?
அல்வாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி
கடந்த வருடம் வெங்காயம் பயிரிட்டார் நட்டம்
இந்த வருடம் நம்பிக்கையுடன் கத்தரி பயிரிட்டார்.
அதுவும் நட்டம். தொடர்ந்த நட்டம். வேறு வழியின்றி
அந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.
இங்கு மற்ற மனிதர்களுக்கு சோறு போடும் விவசாயி
வறுமையின் கொடுமையினால் தற்கொலை செய்கிறான்.
ஆனால் எமது வடமாகாண முதல்வரோ
இந்திய தூதருடன் “பாரதி பிறந்ததின விழா” கொண்டாடுகிறார்.
தனது 13 வயது மகளை விபச்சார தொழிலில்
ஈடுபடுத்தியமைக்காக ஒரு தாயாரை
கடந்த வாரம் பொலிஸ் கைது செய்துள்ளது.
நாடு முழுவதும் 45 ஆயிரம் பெண்கள்
பாலியல் தொழில் செய்வதாக அமைச்சரே கூறுகிறார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயசுக்கு உட்பட்டவர்கள்.
சிறுவர் பாலியல் வியாபாரம்
உலகில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.
இதுவரை 2600 எயிட்ஸ் நோயாளிகள்
இனங்காணப்பட்டுள்ளனர்.
படிப்பில் முதன்மை வகித்த யாழ் மாவட்டம்
இன்று சாராய விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.
கேரளாவில்; இருந்து கோடிக்கணக்கான ரூபா கஞ்சா வருகிறது.
பாடசாலை வாசலிலேயே பொட்டலமாக விற்பனை செய்யப்படுகிறது.
தினமும் வாள் வெட்டுச் செய்தி பத்திரிகையில் வருகிறது.
இதுவரை இருந்த உள்ளுராட்சி உறுப்பினர்கள்
இவை எதையுமே தீர்க்கவில்லை
இனி உறுப்பினர்களாக வருகிறவர்களாலும்
இவை எதுவுமே தீர்க்கப்படப் போவதில்லை
அப்புறம் எதுக்கடா நாங்கள்
உங்களுக்கு வோட்டு போடனும்?

No comments:

Post a Comment