Wednesday, March 31, 2021

அவர் விரும்பியிருந்தால்

அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் படித்து பட்டம் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் ஆயுதப் போராட்டப்பாதையை கைவிட்டு தேர்தல் பாதையில் பயணித்திருக்கலாம் அவர் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் பாஜக பாசிசம் வந்துவிடும் என்றுகூறி திமுக கூட்டணியை ஆதரித்திருக்கலாம் ஆனால் அவர் மார்க்சிச லெனிய மாவோயிச சிந்தனையில் ஆயுதம் ஏந்தி தமிழ்நாடு விடுதலைக்காக போராடினார். அவர் தியாகம் வீண் போகாது. அவர் கனவு நிச்சயம் நிறைவேறும்.

திருவாரூரில் இருந்து மஞ்சள் பையுடன்

திருவாரூரில் இருந்து மஞ்சள் பையுடன் வந்த கலைஞர் குடும்பத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்க முடியாதவர்கள் இவரிடம் 35 லட்சம் ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்கிறார்கள். ஒரு ரூபா சம்பளத்தில் எப்படி 30 அயிரம் கோடி ரூபா சொத்து வந்தது என்று ஜெயா அம்மையாரிடம் கேட்க முடியாதவர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தில் எப்படி வாழ்கிறீர்கள் என்று இவரிடம் கேட்கின்றனர். இதுவரை இவர் ஆட்சியில் இருந்ததில்லை. இம்முறையும் இவர் ஆட்சியைப் பிடிக்கப்போறதில்லை ஆனாலும் எல்லோரும் சேர்ந்து இவரை எதிர்கிறார்களே அது ஏன்? ஏனென்றால் இவர் ஒருவர்தான் “நாடு என் கையில் சிக்சிச்சு நீ செத்தே” என்று மகிந்த ராஜபக்சேவை எச்சரித்துள்ளார். அதுமட்டுமல்ல இவர் ஒருவர் மட்டுமே இனி தமிழன் மேல் கைவச்சால் திருப்பி அடிப்பேன் என்று கூறினார். கைக்கெட்டும் தூரத்தில் 7 கோடி தமிழர் தாம் இருந்தும் ஈழத் தமிழரை காக்க முடியவில்லையே என்ற ஆழ்ந்த வருத்தம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு இளைஞன் மனதிலும் உள்ளது. இந்த தமிழக இளைஞர்களின் உணர்வையே இவர் தன் பேச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார். மீண்டும் எழுந்து நிற்க முயலும் ஈழத் தமிழர்களுக்கும் இவரின் இந்த பேச்சு நிச்சயம் ஆறுதல் கொடுக்கும். இவர் திருப்பி அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் இவர் ஒருவர் மட்டுமே இவ்வாறு பேசியிருக்கிறார்.

ஜேர்மனியில் தமிழர்களை நாடு கடத்தலுக்கு

ஜேர்மனியில் தமிழர்களை நாடு கடத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பல இடதுசாரி அமைப்புகள், பசுமை இயக்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கலந்துகொண்டு தமிழ் மக்களின் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜெர்மனி அரசின் இந்த நாடுகடத்தல் முயற்சி இரக்கமற்றது. இது மற்ற நாடுகளுக்கும் தவறான முன்னுதாரணத்தை கொடுக்கப்போகிறது. கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு தொடர்ந்தும் ஜெர்மனியில் வாழ்வதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

ஈழத் தமிழரை ஆதரித்தமைக்காக

ஈழத் தமிழரை ஆதரித்தமைக்காக தடாச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். கட்சி மாறினால் வழக்கை வாபஸ் பெற்று விடுதலை செய்வதாக சிறையில் வந்து பேரம் பேசியபோதும் அவர் அதற்கு இணங்கவில்லை. அவர் மதுரை சிறையில் இருந்தபோது அச் சிறையில் இருந்த ஈழத் தமிழராகிய நாம் உண்ணாவிரதம் இருந்தபோது எமக்கு ஆதரவாக அவரும் உண்ணாவிரதம் இருந்தார். ஒருநாள் இரு நாள் அல்ல. தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் எமக்காக உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரைப் பார்க்க வந்த திமுக மாவட்ட தலைவர்களும் சிறைக்கு வெளியே குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் சிறை அதிகாரிகள் வேறு வழியின்றி எமது கோரிக்கையின்படி எம்மைத் தாக்கிய சிறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தார்கள். உண்ணாவிரதம் முடிவுற்றது என்று அதிகாரிகள் கூறியதை அவர் நம்பவில்லை. அப்புறம் நான் நேரடியாக கூறிய பின்பே அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். போராளிகளால் “சுப்பக்கா” என்று அன்பாக அழைக்கப்பட்டவர். அவர் அங்கம் வகிக்கும் திமுக கட்சி மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஈழத் தமிழர் ஆதரவு என்பது மறக்க முடியாதது. பாராட்டுக்குரியது.

பொலிஸ் அரசின் ஏவல்நாய்

பொலிஸ் அரசின் ஏவல்நாய் அது எஜமான் குரைக்கச் சொன்னால் குரைக்கும் அது எஜமான் கடிக்கச் சொன்னால் கடிக்கும். அது எஜமான் வீசும் எலும்புத்துண்டிற்காக நன்றாக வாலாட்டும். நல்லவேளை. சமூகவலைத்தளங்களின் எதிர்ப்பால் உடனடியாக இந்த நாய் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பாஜக வரலாறு காணாத தோல்வி

பாஜக வரலாறு காணாத தோல்வி அடையப்போகிறது என்று அனைத்து கருத்து கணிப்புகளும் கூறுகின்றன. பாஜக வேட்பாளர்களே தமது தலைவர் மோடியின் படத்தை மறைத்து விட்டு ஜெயா அம்மையாரின் படத்தை போட்டு வாக்கு கேட்கும் அவலம். பிரதமர் மோடி இன்னும் இரண்டு தடவை பிரச்சாரத்திற்கு வந்தால் அதிமுக வெல்லக்கூடிய இரண்டு மூன்று சீட்டுகளும்கூட இல்லாமல் போய்விடுமோ என்ற நிலை. வேடிக்கை என்னவெனில் தமிழ்நாட்டில் மலர முடியாத பாஜக கட்சி ஈழத்திலும் நேபாளத்திலும் மலரப் போகிறார்களாம்.

Saturday, March 27, 2021

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

•மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்! லண்டனில் அம்பிகா செல்வகுமார் அவர்கள் இனப்படுகொலைக்கு நீதிகோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். ஜரிஸ் போராளிகள் உண்ணாவிரதம் இருந்தபோது அவர்களை இறக்கவிட்ட பிரித்தானிய அரசு அம்பிகை செல்வக்குமார் அவர்களின் உண்ணாவிரதத்திற்கு மதிப்பளிக்குமா என்பது சந்தேகமே. எனவே இவ்வாறான தனிமனித போராட்டங்களை தவிர்த்து அதிகளவு மக்கள் பங்குபற்றும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

கண்ணீர் அஞ்சலிகள்!

• கண்ணீர் அஞ்சலிகள்! ஒருபுறம் கொரோனோவுக்கே மருந்து கண்டுபிடித்துவிட்டதாக உலகம் மகிழ்ந்து கொண்டிருக்கும்வேளையில் மறுபுறத்தில் இப்பவும் குளவி கடித்து தமிழர் இறப்பது கொடுமையே. இத்தனை நாளும் மலையகத்திலேயே வருடா வருடம் தோட்டத்தொழிலாள மக்கள் குளவி கடித்து இறந்து வந்தனர். தற்போது முல்லைத்தீவில் ஒரு தமிழ் விவசாயி அதுவும் 50 வயதில் குளவி கடித்து இறந்துள்ளார். குளவிக் கடிக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லையா? அல்லது அந்த மருந்து தமிழருக்கு வழங்கப்படுவதில்லையா? பதவி பெற்றவுடன் 5 கோடி ரூபா சொகுசு வாகனத்திற்கு அலையும் அரசியல்வாதிகள் பதில் தருவார்களா? சந்தேகம்- விவசாயியையும் தோட்டத் தொழிலாளர்களையும் கடிக்கும் குளவி ஏன் அரசியல்வாதிகளை கடிப்பதில்லை?

பறக்க முடியாதவர்கள் ஓட வேண்டும்

பறக்க முடியாதவர்கள் ஓட வேண்டும் ஓட முடியாதவர்கள் நடக்க வேண்டும் நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது செல்ல வேண்டும். எப்போதும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். எக் காரணம் கொண்டும் முயற்சியை நிறுத்திவிடக்கூடாது. ஒருவன் நீரின் மேல் மட்டத்திற்கு வந்த பின்பே அவன் ஆழத்தில் இருந்து வருவதற்கு முயற்சி செய்திருக்கிறான் என்பது தெரியவரும். அதுபோல் ஒரு இனம் வெற்றி பெற்றபின்பே அது தொடர்ந்து போராடியது என்பது வரலாறாக அமையும். வெற்றிபெறும்வரை தொடர்ந்து முயற்சி செய்வோம். ஜ.நா முன்றலில் புலம்பெயர் தமிழ் உறவுகள் எழுப்பும் குரல் நாடுகளின் தலைமைகளுக்கு கேட்காமல் இருக்கலாம். ஆனால் உலக மக்களுக்கு நிச்சயம் கேட்கும்.

நிச்சயம் வெற்றி

“நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இவர்களிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே இவர்களை பேரணி செல்ல வைக்கிறது. இப்படி வீதியோரம் படுத்து உண்ணாவிரதம் இருக்கச் செய்கிறது. கையில் ஆயுதம் இல்லை. ஆதரிக்க ஒரு பலமான நாடு இல்லை. இருந்தும் புதிது புதிதாக களத்தை உருவாக்கி போராடுகிறார்கள். குத்துச் சண்டை போட்டியில் ஒருவன் வீழ்ந்தவுடன் தோல்வி என்று அறிவிப்பதில்லை. மாறாக வீழ்ந்தவன் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி என அறிவிக்கப்படும். அதுபோல் சிங்கள அரசு வெற்றியை கொண்டாட முடியாமல் இருப்பதற்கு காரணம் தமிழ் இனம் தோல்வியை இன்னும் ஒத்துக் கொள்ளாமல் எழுந்து நின்று போராடுவதே.

இருவரும் ஈழத் தமிழர்கள். இருவர் பெயரும் அம்பிகா.

ஒரு அம்பிகா, இனப்படுகொலைக்கு நீதிகோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இன்னொரு அம்பிகா, தான் நீண்டநாள் கூறிவந்த புலிகளின் தவறுகள் ஜ.நா அறிக்கையில் வந்திருப்பதாக பெருமையாக டிவீட் செய்கிறார். தமிழ் மக்கள் எத்தனையோ தியாகங்களை செய்தும் இன்னும் விடுதலை பெற முடியாமைக்கு காரணம் இப்படியான துரோகங்களும் நம் மத்தியில் இருப்பதுதான்.

வாழ்த்துகள்!

•வாழ்த்துகள்! எமது வலிகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதே ஒரு கலைஞனின் கடமையாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் பங்குபற்றிய தமிழ் சிறுமி ஒருவர் எமது வலிகளை ஓவியமாக வரைந்து முதல் பரிசு பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள்.

இவர்கள் பயங்கரவாதிகள் என்கிறார்கள்

இவர்கள் பயங்கரவாதிகள் என்கிறார்கள் இவர்கள் போர்க்குற்றம் இழைத்தார்கள் என்கிறார்கள் இவர்களுடைய போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் ஜ.நா வில் அறிக்கை கொடுக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கை ராணுவத்தை விட இவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்கிறார்கள். சரி. அப்படியென்றால் கடந்த 12 வருடமாக ஏன் இது குறித்து விசாரணை செய்யவில்லை? இப்படி கூறுபவர்களின் கையில்தானே அரசும் அதிகாரமும் இருக்கிறது. சிங்கள அரசு நினைத்திருந்தால் ஒரு வாரத்தில் இறந்தவர்களின் பட்டியலை திரட்டி வெளியிட்டிருக்கலாமே? அதில் எத்தனைபேர் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள், எத்தனை பேர் இவர்களால் கொல்லப்பட்டவர்கள் என்ற விபரத்தை காட்டியிருக்கலாமே? இவர்களிடமிருந்து தமிழ் மக்களை காக்கவே போர் தொடுத்தோம் என்கிறார்கள். அப்புறம் ஏன் 60ஆயிரம் சிங்கள ராணுவத்தை தமிழர் பகுதிகளில் குவித்து வைத்திருக்கிறார்கள்? அப்புறம் ஏன் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் புலிகள் வந்துவிடுவார்கள் என அச்சப்படுகின்றார்கள்?

புலவர் கலியபெருமாள்.

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள். தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் இன்று ஆகும்.(04.03.2019) புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர். அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்பட்டார். வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை. தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி..

கோழி மிதித்து குஞ்சு சாவதில்ல

கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை என்றார்களே, இங்கு எப்படி மூன்று குஞ்சுகள் கோழியால் சாகடிக்கப்பட்டது? இன்னும் 3 நாளில் சர்வதேச பெண்கள் தினம் வரும் நிலையில் ஒரு பெண் தன் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்யும் நிலை இருக்கிறதே? சிலர் இதற்கு பொருளாதாரநிலை காரணம் என்பர். இன்னும் சிலர் இதற்கு மன அழுத்தம் காரணம் என்பர். அடுத்த பெண் சாகும்போதும் இதையே இவர்கள் கூறிக்கொண்டு இருக்கப்போகிறார்கள். ஆனால் இதனை தீர்க்க வேண்டிய அரசியல்வாதிகளோ அடுத்த முதலமைச்சர் யார் என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். வாழ்க்கையில் ஆயிரம் நெருக்கடிகள்; இருந்தாலும் நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒற்றை நம்பிக்கையே எல்லோரையும் தொடர்ந்து வாழ வைக்கிறது. அந்த நம்பிக்கை அற்றுப்போகும்போது தற்கொலை எண்ணங்கள் தோன்றுகின்றன.

தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும்.

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. (முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் அவர்களும் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.

44வது சென்னை புத்தக கண்காட்சி த

44வது சென்னை புத்தக கண்காட்சி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் அரங்கு எண் 71ல் உள்ள பொதுமை பதிப்பகத்தில் எனது நூல்களை விரும்புவோர் பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டில் வருமானவரித்துறையினர்

வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு செய்து கொண்டிருக்கும்வேளையில் தன்னிடம் இருக்கும் புத்தகங்களே தனது சொத்து என போட்டோ பிடித்து போடுவதற்கும் ஒரு கெத்து வேண்டும். சபாஷ்! அனுராக் அவர்களே. மோடி கும்பலின் முகத்தில் ஓங்கி குத்தியிருக்கிறீர்கள். பாராட்டுகள். மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாளைய சுப்பர் ஸ்டார்கள்!

• நாளைய சுப்பர் ஸ்டார்கள்! ஒரு காலத்தில் நல்ல பாடும் குரல்வளம் உள்ளவர்களே நடிகராகும் வாய்ப்பு இருந்தது. பின்னர் நல்ல முகத்தோற்றமும் உடல் வளமும் உள்ளவர்களே நடிகராகும் வாய்ப்பு இருந்தது. தற்போது பணவசதி உள்ளவர்கள் நடிகராகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் உதயநிதி ஸ்டாலின்கூட நடிகை நயன்தாராவுடன் நடித்து படம் வெளியிடுகிறார். ஆனால் இந்த 2000 கிட்ஸ்க்கு வாய்த்திருக்கும் சுப்பர் ஸ்டார்களை நினைத்தால்தான் பாவமாய் இருக்கிறது.

மண்டியிட்டு சீட்டு பெறுவதைவிட

•மண்டியிட்டு சீட்டு பெறுவதைவிட எழுந்து நின்று தோல்வியை சந்திப்பது மேல்! ஸ்டாலின், லெனின் தத்துவங்களை பேசிய கம்யுனிஸ்ட் கட்சிகள் கேவலம் இரண்டு சீட்டுக்காகவும் பத்து கோடி ரூபா பணத்திற்காகவும் திமுக ஸ்டாலினிடம் மண்டியிடுவதை பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது. இவர்களுடன் ஒப்பிடும்போது தோல்வியாக இருந்தாலும் அதை தனியாக நிமிர்ந்து நின்று சந்திக்கும் சீமான் நாம் தமிழர் கட்சியினரை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

சமஸ்கிருதத்தில் பத்தாயிரம் கோடி சொற்கள் உள்ளது.

சமஸ்கிருதத்தில் பத்தாயிரம் கோடி சொற்கள் உள்ளது. ஆனால் தமிழில் 1.24 லட்சம் சொற்கள் மட்டுமே உள்ளது. – ஆடிட்டர் குருமூர்த்தி தமிழ்நாட்டில் பிழைக்க வந்ததோடு தமிழில் துக்ளக் இதழ் வெளியிட்டு காசு சம்பாதித்துக்கொண்டு சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்கிறார். செத்த சமஸ்கிருத மொழியில் பற்று இருந்தால் துக்ளக் இதழை சமஸ்கிருத மொழியில் வெளியிட வேண்டியதுதானே? பணம் சம்பாதிப்பது தமிழ் மொழியில். ஆனால் விசுவாசம் காட்டுவது சமஸ்கிருத மொழிக்கு. கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருத மொழிக்கு மோடி அரசு வழங்கிய தொகை 160 கோடி ரூபா. ஆனால் தமிழ் மொழிக்கு வழங்கிய தொகை வெறும் 6 கோடி ரூபா மட்டுமே. ஆனால் மோடி ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு வரும்போது திருக்குறள் கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்.

வீட்டோடு மாப்பிள்ளை!

வீட்டோடு மாப்பிள்ளை! கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியில் வீட்டோடு மாப்பிள்ளை பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பங்கு பற்றிய பலரும் வீட்டோடு மாப்பிள்ளை என்பது கேவலமானதாகவும் தமிழர் முறை அல்ல என்பதாகவும் கருத்து கூறினார்கள். ஆனால் ஈழத்தின் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் தமிழக தமிழர்கள் ஈழத்தில் வீட்டோடு மாப்பிள்ளை முறைதான் இருக்கின்றது என்பதை இதுவரை அறியாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஈழத்தில் இதுவரை ஒரு பெண்கூட காஸ் சிலிண்டர் வெடித்து இறக்கவில்லை என்பதற்கு இந்த வீட்டோடு மாப்பிள்ளை முறைதான் காரணம் என நினைக்கிறேன். ஈழத்தில் சொத்து பெரும்பாலும் பெண் பிள்ளைகளுக்கே வழங்கப்படுகிறது. அவர்களே தம் பெற்றேரை முதுமைக்காலத்தில் பராமரிக்கிறார்கள். குறிப்பு – கம்போடியாவில் பெண்களுக்கே வரதட்சணை கொடுக்கப்படுகிறது. இதனால் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்றே கம்போடிய பெற்றார்கள் விரும்புகிறார்கள்.

நல்ல நிகழ்ச்சி

•நல்ல நிகழ்ச்சி முடிந்தால் ஒருமுறை பார்த்துவிடுங்கள்! கடந்த ஞாயிற்றுக்கிழமை ZEE தமிழ் தொலைக்காட்சியில் கரு.பழனியப்பன் அவர்களின் “தமிழா தமிழா” நிகழ்ச்சியில் “ இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் அமானுஷ்ய நம்பிக்கை அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா” என்னும் தலைப்பில் கலந்துரையாடியுள்ளனர். அதாவது பேய் பில்லி சூனியம் நரபலி போன்ற மூட நம்பிக்கைகள் குறைந்திருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஒரு படித்த பேராசிரியரே தன் இரு மகள்களை நரபலி கொடுத்த செய்தி வந்திருக்கும் சூழ்நிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர்கூட தமிழ்நாட்டில் திருவாரூர் என்னும் இடத்தில் தந்தை ஒருவர் Nஐhதிடர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு தன் மகனைக் கொன்ற செய்தி வந்துள்ளது. இது பெரியார்மண் என்று பெருமையாக கூறும் தமிழ்நாட்டில் இத்தகைய கொடுமை எப்படி நிகழ்ந்தது?

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு. ஒரு கை இழந்த பின்பும் மறு கையால் துப்பாக்கி ஏந்தி போராடிய பெண் போராளிகள் ஒழுகும் பாடசாலையில் ஒரு கையால் குடை பிடித்துக்கொண்டு மறு கையால் பரீட்சை எழுதிய மாணவிகள் மாணவர்களை பதுங்குழியில் இருத்திவிட்டு தாய்க் கோழிபோல் காத்து நின்ற ஆசிரியைகள் இவர்கள்தானே உண்மையான சாதனை தமிழிச்சிகளாக இருக்க வேண்டும். இவர்களை எல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஐhவும் நேரில் பார்த்திருக்கிறார்தானே? அப்படியிருக்க எப்படி ஊழல் செய்து சிறை சென்று வந்த சசிகலாவை சாதனைத் தமிழிச்சி என்று அவரால் கூற முடிந்தது?

மார்வாடிகளே தமிழ்நாட்டுக்கு

மார்வாடிகளே தமிழ்நாட்டுக்கு பிச்சை எடுத்து பிழைக்க வந்தவர்கள். இதுகூடத் தெரியாமல் இந்தஆள் எல்லாம் எப்படி தமிழ்நாட்டில் அமைச்சராக இருக்கிறார்? தமிழ் இனத்தின் சாபக்கேடுகள்!

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின் ஒரு முதலாளித்துவ குடியரசில் எவ்வளவு ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாடான போதிலும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அதிகமான முன்னேற்றம் அடைந்த நாட்டில் கூட பெண்களுக்கு ஆண்களைப் போல் முழு அளவுக்கு சமமான உரிமைகள் இல்லை. முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும் கம்பீரமான வார்த்தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும் ஆர்பாட்டங்களுமாக ஒலிக்கும் கோஷங்களும் உள்ள ஜனநாயகமாகும். ஆனால் பெண்களின் உண்மை நிலையை அதாவது சமத்துவமும் சுதந்திரமும் இல்லாது இருப்பதை மூடி மறைக்கிறது. ஆனால் ´சோலிஸ்ட் ஜனநாயகம்´ என்பது புரட்டான பகட்டான போலியான வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறது... ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது. ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது. "ஒடுக்கப்பட்ட பெண்ணினத்துக்கு சுதந்திரமும், சமத்துவமும்...." "தொழிலாளிகளுக்கும், உழைக்கும் விவசாயிகளுக்கும் சுதந்திரமும், சமத்துவமும்..." "ஒடுக்குபவர்களுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, ஏழை விவசாயிகளைச் சுரண்டும் பணக்கார விவசாய உடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டம்..." இதுவே நமது போர் முழக்கம்! இதுவே நமது பாட்டாளி வர்க்க உண்மை!!.

பெண் விடுதலை குறித்து (பகுதி -1)

•பெண் விடுதலை குறித்து (பகுதி -1) பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை மட்டுமல்ல இன விடுதலையும்கூட இல்லை. ஆனாலும் இன விடுதலை குறித்து பேசுபவர்கள் எந்தளவு தூரம் பெண் விடுதலை குறித்து பேசுகிறார்கள்? ஐனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே எண்ணிக்கையில் அதிகம். அப்படியென்றால்; ஐனநாயக முறைப்படி பெண்கள் கையில்தானே அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லையே? ஆனால் வரலாற்றில் பெண்கள் எப்போதும் இப்படி இருந்தில்லை என்றும் இடையில்தான் இவ்வாறு ஆக்கப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் பெண் எப்போது அடிமையானாள்? அவள் ஏன் அடிமையாக்கப்பட்டாள்? வரலாற்றின் தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூக வடிவமே இருந்திருக்கிறது. இச் சமூக வடிவத்தில் ஆணைவிடவும் பெண்ணிற்கே கூடுதல் அதிகாரம் இருந்துள்ளது. பெண்ணே குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான பணியைச் செய்ததன் காரணமாக குடும்பத்தின் தலைமை பெண்ணிடமே இருந்தது. குழந்தைகள் தாயின் வழியிலேயே அடையாளம் காணப்பட்டனர். சமுதாயத்தின் அக் கால கட்டத்தில் திருமணமோ அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ சமூக கட்டுப்பாடாக இருக்கவில்லை. இதன் பொருள் அவர்கள் பாலியற் கட்டுப்பாடு இன்றி வாழ்ந்தனர் என்பது அல்ல. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் ஆதிக்கம் பெண்ணிடமே இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரும்போது ஆணே(தந்தை) சமூக குழும வீட்டை நீங்கிச் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகள் தாயுடனேயே இருந்தன. சமுதாயத்தின் இக் காலகட்டத்தில் உற்பத்திக் கருவிகளான அம்பு, வில், ஈட்டி போன்றன பொதுவானதாக முழு சமூகத்திற்கும் சொந்தமானதாக இருந்தன. அதாவது உற்பத்திக் கருவிகள் தனியார் உடமையாக இருக்கவில்லை. மந்தைகள், காணிகள் போன்ற உற்பத்தி வசதிகளும் இருக்கவில்லை. தனியார் உடமையாக எதுவும் இல்லாததால் ஒரு தந்தை தன் குழந்தைக்கு விட்டுச் செல்ல எதுவும் இருக்கவில்லை. உற்பத்தி சக்திகளின் விருத்தியின் விளைவாக உற்பத்திக் கருவிகளின் உடமை தனியார் கைக்கு மாறியது. அதன்பின் பணத்தின் திரட்சியும் மூலதனமும் உருவாகின. இந்த நிலையில் ஆண் தனது தனியுடமை தனது மனைவிக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு போவதை விரும்பினான். இதுவே ஒருதார மணம் நடைமுறைக்கு வந்த அடிப்படை. இந்த ஒருதார மணம் என்பது பெண்ணுக்குரியதாக இருந்ததேயொழிய ஆணுக்கு அல்ல. பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமாக மாறியது. ஆண் ஆதிக்கத்திற்கு வந்தான். இந்த ஆண் ஆதிக்க நிலை முடிவுக்கு வருமா? பெண் விடுதலை பெறுவாரா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

117 பெண் வேட்பாளர்கள்.

117 பெண் வேட்பாளர்கள். இதுவரை எந்தக் கட்சியும் செய்யாத சாதனை. இனியும்கூட இன்னொரு கட்சி இப்படி செய்ய முடியுமா என்று கேட்க வைத்திருக்கும் சாதனை . சர்வதேச மகிளிர் தினத்தில் “நாம் தமிழர் கட்சி”யினர் மகிளிருக்கு வழங்கியிருக்கும் வாழ்த்து செய்தி இது.

இந்த முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளுக்கு

இந்த முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளுக்கு எந்த வேலை இலாபத்தை தருகிறதோ அந்த வேலை மட்டுமே ஆக்கபூர்வமான வேலையாக கருதப்படுகிறது. இதன்படி பெண்கள் மற்றும் தாய்மார்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் செய்யும் கடுமையான உழைப்பு பயனற்ற வேலை என்றே கருதப்படுகிறது. இந்த இரக்கமற்ற யதார்த்தத்தை தெளிவாக கவனிக்க வேண்டியது பெண் செய்யவேண்டிய முதல் காரியம் என்று ரோசா லக்சம்பேர்க் கூறினார். அவர் இவ்வாறு கூறி சுமார் 100 வருடங்களின் பின்னர் இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் இதுபற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. வீட்டில் குடும்ப வேலைகளை கவனிக்கும் பெண்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நடிகர் கமலஹாசன் கூறினார். அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலின் தாம் பதவிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்புடும் என அறிவித்தார். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாம் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா வழங்குவோம் என அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமார் ஆறு லட்சத்து கோடி ரூபா ஆகும். இந்நிலையில் இவ்வாறு பெண்களுக்கு பணம் வழங்க முடியுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் கொடுப்பார்களோ இல்லையோ ஆனால் வீட்டு வேலைகளை கவனிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஊதியமாக பணம் வழங்க வேண்டும் என்ற சிந்தனை ஆரம்பித்தமை வரவேற்கப்பட வேண்டியதே.

910 ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகரில் தோழர் கிளாரா

910 ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தலைநகரில் தோழர் கிளாரா nஐட்கின் தலைமையில் நடைபெற்ற உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு சோசலிசப் பார்வையுடன் உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். இதில் பெருமளவு ஆண்களும் பங்கு பற்றினர். இந்த தினமே உலக மகிளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்றை அறியாமல் பெண்களைப் போல் ஆண்களுக்கும் சர்வதேச தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஒருவர் கேட்டிருக்கிறார். இவ்வாறு கேட்டிருப்பவர் ஆண் அல்ல. ஒரு பெண் அதுவும் பாரதீயஜனதாக்கட்சியைச் சேர்ந்த சோனல் மான்சிங் என்ற எம்.பி யே பாராளுமன்றத்தில் கோரியுள்ளார். நல்லவேளை. இதைக் கேட்டு பாரதீயஐனதாக்கட்சியின் ஆண் எம்.பிக்களே சிரித்துவிட்டனர். இப்படி ஒரு முட்டாள் எப்படி எம்.பி யாக இருக்கிறார்?

பெண் விடுதலை குறித்து ( பகுதி – 2)

•பெண் விடுதலை குறித்து ( பகுதி – 2) அவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோவுக்கு மேல் இருக்கும். ஆனால் அவரின் எடையோ 60 கிலோதான். சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும்; என்பதால் இந்த வெடி பொருட்களுடன் அவர் நீந்தி சென்ற தூரம் கிட்டத்தட்ட 17 மைல்கள் என்கிறார்கள். அவர் எட்டு மணி நேரம் நீந்தி சென்று தாக்குதலை மேற்கொண்டார் என்று கூறுகிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தான் மரணமடையப் போகிறேன் என்று தெரிந்தும் அவரது கால்கள் சோரவில்லை. கைகள் செயல் இழக்கவில்லை. இலக்கை அடைந்தார். 326 அடி நீளம் , 51 அடி அகலம். 6300 தொன் எடை கொண்ட அதி நவீன ராடர் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை முழ்கடித்தார். இதைப் படிக்கும்போது இந்த வீர தீரச் செயலை செய்தவர் ஒரு இளைஞனாக இருப்பான் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால் ஆண்களே வியக்கும் இந்த சாதனையைப் புரிந்தவர் ஒரு பெண். அவர் பெயர் அங்கையற்கண்ணி. பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் அங்கையற்கண்ணிகளின் கதைகளை கூறுவோம். இதேபோல பல சாதகைளை நிகழ்த்திய பெண்கள் கதைகள் இருந்தும் இன்றும் பெண்கள் அடிமைகளாகவே இருக்கின்றனர். அப்படியாயின் பெண்கள் இவ் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்போது? பொருளாதார நிலைமைகள் மாறி உற்பத்திக் கருவிகள் மீண்டும் சமூகத்தின் உடமையாகும்போது நிச்சயமாக அது முடிவுக்கு வரும். உற்பத்தியில் சமபங்குடையவராகப் பெண்ணின்நிலை மீட்கப்படும். அப்போது திருமணமும் ஒருதார முறையும் நிலைக்குமா என்பதை இப்போது கூறுவது கடினம். ஆனால் வேறுபட்ட பொருளாதார நிலைமைகள் வேறுபட்ட விதமான சமுதாயத்தை உருவாக்கும். அவ்வாறு மாறிய பொருளாதார சமூகநிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் தாம் வேண்டும் சமூக அமைப்பு எப்படியானதாயிருக்க வேண்டும் என்பதுபற்றி தமது சொந்த முடிவுகளை எடுப்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.

அம்பிகை அம்மையாரும்

அம்பிகை அம்மையாரும் பாரதீயஐனதா வெங்காயங்களும்! இந்தியாவில் பம்பாயில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதியானதால் அதை “பம்பாய் வெங்காயம்” என்று இலங்கையில் அழைக்கப்பட்டது. அதேபோல் தற்போது இந்தியாவில் இருந்து “பாரதீயஐனதா வெங்காயம்” இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெங்காயங்கள் தமக்கும் இந்திய பாரதீயஐனதாவுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள். அதுமட்டுமல்ல பாரதீயஐனதா என்ற பெயரின் அர்த்தம்கூட தமக்கு தெரியாது என்று இந்த வெங்காயங்கள் கூறுகின்றன. இனப்படுகொலைக்கு நீதி கேட்டு லண்டனில் அம்பிகா அம்மையார் பத்து நாள்களாக உண்ணாவிரதம் தொடர்கிறார். இலங்கையில்கூட பலர் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த வெங்காயங்கள் தமக்கு இது பற்றி அக்கறை இல்லையாம். தாம் தமிழ் மக்களுக்காக எந்தப் போராட்டமும் செய்யப்போவதில்லையாம். சரி. போராட்டம் செய்வதில்லை என்றால் கட்சி எதற்கு என்று கேட்டதற்கு யாழ்ப்பாண மக்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஸ் படிப்பிக்கப் போகிறார்களாம். ஸ்போக்கன் இங்கிலிஸ்தான் இப்ப பிரச்சனையா? அல்லது அது படித்தால் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனையும் எப்படி தீரும்? என்பன பற்றி எந்த விளக்கமும் கூறப்படவில்லை. இத்தனைக்கும் காரணகர்த்தா அந்த யாழ் இந்திய தூதரே. இந்த மூன்று வெங்காயங்களை வைத்து தமிழ் மக்களின் ஆழத்தை அறிய முயற்சி செய்திருக்கிறார். ஆனால் யாழ் இந்திய தூதரின் முயற்சி வெற்றிபெறப்போவதில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல மயிரிலும்கூட பாரதீயஐனதா வளர முடியாது.

மோடி - ஏம்பா! 1500 ரூபா

மோடி - ஏம்பா! 1500 ரூபா ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் கொடுக்கப்போவதாக கூறினாயாமே. எப்படிப்பா கொடுக்கப்போறாய்? எடப்பாடி – நீங்க எப்படி 15 லட்சம் கொடுத்தீங்களோ அப்படித்தான் நானும் கொடுப்பேன். மோடி – அப்ப நீயும் என்னைப்போல மக்களுக்கு அல்வாதான் கொடுக்கப்போறியா? நீதி - ஒருவரை ஏமாற்ற வேண்டுமெனில் முதலில் அவரின் ஆசையைத் தூண்ட வேண்டும்.

செய்தி – சம்பந்தர் போன்று ஆளுமை உள்ளவர்

செய்தி – சம்பந்தர் போன்று ஆளுமை உள்ளவர் தெற்காசியாவிலேயே இல்லை – சாணக்கியன். என்னது ஐயா ஆளுமை மிக்கவரா? லண்டனில் அம்பிகா அம்மையார் பத்தாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். தாயகத்திலும் மக்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஐயா உயிரோடு இருக்கிறாரா அல்லது உறக்கத்தில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. கடந்த ஆட்சியில் தீபாவளிக்கு தீர்வு வரும் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். இந்த ஆட்சியில் அதுவும் இல்லை. ஐ.நா அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐயா அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் உள்ள ரெலோ அதனை நிராகரித்துள்ளது. கூட இருக்கும் பங்காளிக்கட்சியையே ஐயாவால் அரவணைக்க முடியவில்லை. அப்புறம் எப்படி தெற்காசியாவில் ஆளுமை மிக்க தலைவராக இருக்க முடியும்? ஆளுமை என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் தெற்காசியா எங்கே இருக்கிறது என்பதையாவது தெரிந்து சாணக்கியன் பேச வேண்டும்.

ஈழத் தமிழ் பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா?

•ஈழத் தமிழ் பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா? நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் பண மோசடி புகார் என்றே தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த ஜெர்மனிப் பெண் என்பவர் ஒரு ஈழத் தமிழ் பெண் என்பதை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன. திருமணம் செய்வதாக கூறி ஜெர்மனியில் வசிக்கும் ஈழத் தமிழ் பெண்ணிடம் 70 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா அப் பெண்ணை ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துகொள்ளாதது மட்டுமன்றி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்க மறுக்கிறார் நடிகர் ஆர்யா. அதுமட்டுமன்றி காவல்துறையிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் வீட்டுக்கு ஆள் அனுப்புவேன் என்றும் மிரட்டுகிறார். தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த ஒரு மலையாள நடிகர் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஈழத் தமிழ் பெண்ணுக்கு மிரட்டும் அளவுக்கு எப்படி அவருக்கு துணிச்சல் வந்தது?

11வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

•11வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்! இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் அம்பிகை அவர்கள் 11 வது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறார். தாயகத்திலும் சுழற்சிமுறையில் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது அதனை பயங்கரவாதம் எனக்கூறி ஒன்றுசேர்ந்து அழித்தவர்கள் இப்போது தமிழ் மக்கள் அகிம்சை வழியில் போராடும்போது கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இது தமிழின விடுதலைக்கான பாதை எது என்பதை தமிழ் மக்கள் தெளிவாக தீர்மானிப்பதற்கு நிச்சயம் உதவப்போகின்றன.

தமிழால் வாழ்ந்தவர் பலர்

தமிழால் வாழ்ந்தவர் பலர் ஆனால் தமிழுக்காக வாழ்ந்தவர் சிலரே. அந்த சிலருள் பாவலேறு பெருஞ்சித்திரனார் ஒருவர். அவர் இருந்தவேளை அவரின் அருமை தெரியவில்லை. அவர் மகன் தோழர் பொழிலனிடமே அவரர் பேசிய தனித்தமிழை கிண்டல் செய்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. அதுதான் அவர் சம்பாதித்த சொத்து! தமிழும் அதை பேசும் தமிழரும் இருக்கும்வரை அவர் பெயரும் உச்சரிக்கப்படும்.

ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓட வேண்டும்

ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓட வேண்டும் நிற்பதாக இருந்தால் எதிர்த்து நிற்க வேண்டும் ஒருபோதும் வீழ்ந்து மண்டியிடக்கூடாது. ஆயுத வழியானாலும் அகிம்சை வழியானாலும் தமிழ் இனம் போராட தயங்காது எப்போதும் போராடிக் கொண்டே இருக்கும் என்பதையே அம்பிகையின் 12வது நாள் உண்ணாவிரத போராட்டம் உணர்த்துகிறது. போராடி தோற்றால் மரணம்கூட வெற்றிதான். ஆனால் போராடாமல் தோற்றால் அந்த மரணம் கூட மன்னிக்காது.

பெல்ட்டால் அடிக்காதீங்கண்ணா,

“பெல்ட்டால் அடிக்காதீங்கண்ணா, வலிக்குது அண்ணா, நானே ஆடையை கழட்டுகிறேன் அண்ணா” என்று பெண் கதறி அழுகிறார். ஆனாலும் அந்த மிருகங்கள் இரங்கவில்லை. பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அதை படம் பிடித்தும் வைத்துள்ளனர். பிடித்து வைத்திருந்த படத்தை காட்டி பணம் பறித்துள்ளனர். மிரட்டி வேறு பலருக்கும் அந்த பெண்களை இரையாக்கி உள்ளனர். இது ஏதோ ஒன்றோ இரண்டு பெண்களுக்கு நடக்கவில்லை. 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நடந்துள்ளது. அதுவும் ஏதோ ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்தில் நடந்துவிடவில்லை. மாறாக 2012ல் இருந்து நடந்து வந்தது. இதுபோன்ற சம்பவங்கள் அறியும்போது மக்களும் உணர்ச்சிவசப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் ஆண் குறியை வெட்ட வேண்டும். தூக்கில் போட வேண்டும் என்று எழுதுகிறார்கள். வழக்கை விசாரிக்கமாலே தீர்ப்பை வழங்குகிறார்கள். அப்புறம் அடுத்த சம்பவம் நடக்கும்வரை இதை மறந்துவிடுகின்றார்கள். மக்களின் இந்த போக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும் அவர்களை தப்ப வைக்கும் காவல்துறைக்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. இந்த கும்பலில் தொகுதி எம்எல்.ஏ வின் மகன் உட்பட 20ற்கு மேற்பட்டவர்கள் உணடு என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர். ஆனால் பொலிஸ் நாலு பேரை மட்டுமே கைது செய்து வழக்கை மூடப் பார்க்கிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பொள்ளாச்சியில் நிகழ்ந்த சம்பங்கள் ஆகும். இதுவரை பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஏனெனில் குற்றவாளியின் தந்தை ஜெயராமன் உப சபாநயகராக பதவியில் இருந்தமையே. எனவே ஜெயராமன் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் மாத்திரமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும். பொள்ளாச்சி தொகுதி மக்கள் ஜெயராமனை தோற்கடிப்பார்களா?

அனைத்து கட்சிகளாலும் மறக்கப்பட்ட

அனைத்து கட்சிகளாலும் மறக்கப்பட்ட பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் விடுதலை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர் இதுவரை விடுதலை செய்யப்படாமைக்கு மத்திய அரசும் பாஜக கட்சியுமே காரணமாகும். தாம் ஆட்சிக்கு வந்தால் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வோம் என எந்தவொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளிக்க முன்வரவில்லை. பேரறிவாளனை விடுதலை செய்ய குரல் கொடுப்போம் என தாயார் அற்புதம்மாளிடம் கூறியவர்கள் இப்போது அந்த தாயையும் ஏமாற்றிவிட்டார்கள்.

பூனையும் எலியும் ஓடும்போது

பூனையும் எலியும் ஓடும்போது பெரும்பாலும் எலிகளே வெற்றி பெறுகின்றன. ஏனெனில், பூனை உணவுக்காக ஓடுகிறது எலி உயிருக்காக ஓடுகிறது. அதாவது, தேவையைவிட குறிக்கோளே அதிக திறமையை வெளிப்படுத்தும். அதேபோன்று, அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல அது தற்காப்பு எனப்படும். பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை வன்முறை என்றார்கள். “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தி கொன்று அழித்தார்கள். இப்போது அதே பெண்கள் அகிம்சை வழியில் போராடுகிறார்கள். ஆனால் யாருமே கண்டுகொள்ளவில்லையே.? இவர்கள் என்ன தமிழீழமா கேட்கிறார்கள், இல்லையே? நடந்த இனப்படுகொலைக்கு நீதிதானே கேட்கிறார்கள். அதைக்கூட இந்த அகிம்சை வழியால் பெற முடியவில்லையே. அப்புறம் எப்படி அகிம்சை வழியில் தமிழ் இன விடுதலை பெற முடியும்? நியாயவான்களே! எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறீர்கள்? வந்து பதில் சொல்லுங்கள். தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?

திமுக வின் தேர்தல் அறிக்கையும்

திமுக வின் தேர்தல் அறிக்கையும் ஈழத் தமிழர் பிரச்சனை மீதான அக்கறையும்! (1) இத்தனை நாளும் வலியுறுத்தி வந்த “தமிழீழம்” தீர்வு இம்முறை திமுக தன் தேர்தல் அறிக்கையில் கைவிட்டுள்ளது. ஆனால் தமிழீழம் ஏன் கைவிடப்படுகிறது என்பது பற்றி கூறப்படவில்லை. (2) இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்லது. ஆனால் (அ) இதை கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா? (ஆ)இனப்படுகொலையில் திமுக வுக்கும் பங்கு உண்டு என்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் கூறியிருக்கிறார். இதற்கு திமுக பதில் அளிக்குமா? (இ)இறுதி நேரத்தில் புலிகளையும் அதன் தலைவர்களையும் காப்பாற்ற நோர்வேயும் அமெரிக்காவும் திட்டம் ஒன்றை முன்வைத்ததாகவும் ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அதனை விரும்பவில்லை என்றும் “அவர்களை முடித்து விடுங்கள்” என்று தன்னிடம் கூறியதாக முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர்மேனன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு திமுக வின் பதில் என்ன? (3) ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் இந்த அகதிகளுக்கு மருத்துவம் உட்பட உயர் கல்வி வாய்ப்பு மாநில அரசால் வழங்க முடியும். அதனை திமுக அரசு செய்யுமா? குறிப்பாக இந்தியாவில் இருக்கும் மற்ற அகதிகள் போன்று ஈழ அகதிகளும் நடத்தப்படுவார்களா? (4) கலைஞரால் 1990ல் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் இன்றும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதை இப்போதாவது மூடி அதில் இருக்கும் அப்பாவி ஈழ அகதிகளை விடுதலை செய்ய திமுக அரசு முனையுமா? தேர்தல் அறிக்கையில் என்னதான் கூறினாலும் ஆட்சிக்கு வந்தபின்பு ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையே தனது கொள்கை என்று கலைஞர் கூறுவார். அதுபோல் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் நடந்து கொள்வார். குறிப்பு – திமுக வின் தேர்தல் அறிக்கை குறித்து ஈழத் தமிழர் அக்கறை கொள்ள எதுவுமேயில்லை. ஆனால் ஸ்டாலின் உண்மையில் ஈழத் தமிழர் மீது அக்கறை இருந்தால் கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் மணி எங்கே? அவனுக்கு என்ன நடந்தது? என்பதையாவது தெரியப்படுத்துங்கள். அது போதும்.

2009 க்கு பின்னர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டவை

2009 க்கு பின்னர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டவை • பலாலி விமான நிலையம் • காங்கேசனதுறை; துறைமுகம் • காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை • திருகோணமலை எண்ணெய் குதங்கள் • புல்மோட்டை இல்மனைற் வளம் • சம்பூர் நிலக்கரி மின்சாரம் • மன்னார் பெற்றோல் வளம் 2009க்கு பின்னர் இத்தனையும் பெற்றுக்கொண்ட இந்திய அரசு ஈழத்தமிழருக்கு பெற்றுக்கொடுத்த அதிகாரங்கள் என்ன? நாம் அறிந்தவரையில் இந்திய அரசு வழங்கிய சில அதிகாரங்கள் (?) (1) சம்பந்தர் ஐயாவுக்கு டில்லி மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை. (2) சுரேஸ் பிரேமச்சந்திரன் மகளுக்கு டில்லி மருத்துவ கல்லூரியில் அனுமதி. (3) செல்வம் அடைக்கலநாதனுக்கு திருச்சியில் வீடு மற்றும் பல கோடி ரூபா பெறுமதியான வியாபார நிலையம் (4) மாவை சேனாதிராசாவுக்கு சென்னையில் பங்களா. (5) ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் இந்திய தூதரால் வழங்கப்படும் பல கோடி ரூபா நிதி. இந்திய அரசு உண்மையில் கூறுகிறதோ இல்லையோ ஆனால் இந்திய அரசு கூறுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு; தொடர்ந்து கூறி வருகிறது.. இது ஏன்?

யார் தமிழர்கள்?

• யார் தமிழர்கள்? செய்தி – தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் 75 % வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு வழங்க சட்டம் கொண்டு வரப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் கன்னடர்களுக்கே வேலை என்னும் சட்டம் கொண்டு வந்தபோது அவர்களை இனவாதிகள் என்றோ அல்லது யார் கன்னடர்களோ என்று எவரும் கேட்டதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை வழங்க வேண்டும் என தமிழ்தேசிய உணர்வாளர்கள் கோரிய போது அவர்களை இனவாதிகள் என்றார்கள். அதுமட்டுமல்ல யார் தமிழர்கள்? என்று கேட்டார்கள். லேப் டெஸ்ட் செய்து தமிழர்களை கண்டு பிடிப்பீர்களா என நக்கலாக கேட்டனர். இப்போது அவர்கள் ஸ்டாலினை இனவாதி என்றோ அல்லது யார் தமிழர் என்பதை எப்படி ஸ்டாலின் கண்டு பிடிப்பார் என்றோ கேட்பார்களா? ஸ்டாலின் உண்மையில் இச் சட்டம் கொண்டுவருவாரா என்று தெரியவில்லை. ஆனால் இச் சட்டம் கொண்டு வருவேன் என்று பேச வேண்டிய நிலைக்கு அவர் வந்துள்ளார். அந்தளவில் தமிழ் இன உணர்வாளர்களுக்கு வெற்றிதான்.

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள்

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார். கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது. பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியி;ன் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன. மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியனவாகவும் உள்ளன

15வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

•15வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்! அவர் எந்தக் கட்சியிலும் இல்லை அவர் எந்தப் பதவியிலும்கூட இல்லை அவர் மற்றவர்கள்போல் ஒரு சாதாரண தமிழ் பெண் அவர் விரும்பினால் மற்றவர்கள்போல் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழலாம் அவர் அவ்வாறு வாழ விரும்பவில்லை. எனவேதான் அவர் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அவர் விரும்பிய தீர்வு கிடைக்காமல் போகலாம். ஆனாலும் அவரது போராட்டம் தமிழ் இன விடுதலைக்கான பாதை எது என்பதை சிந்திக்க தூண்டுகிறது.

ஆழ்ந்த இரங்கல்கள்!

•ஆழ்ந்த இரங்கல்கள்! கலை மக்களுக்காகவே என்று கம்யுனிஸட் கருத்துகளைக் கொண்ட திரைப்படங்களை தொடர்ந்து தந்த இயக்குனர் ஐனநாதன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தவர்கள் நண்பர்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

அகிம்சைப் போராட்டத்திற்கு

•அகிம்சைப் போராட்டத்திற்கு சிங்கள அரசு தந்திருக்கும் பதில்! இவர்கள் ஆயுதம ஏந்திப் போராடவில்லை இவர்களை பயங்கரவாதிகள் என்று யாரும் குறிப்பிடவில்லை ஆனாலும் இவர்களின் சுழற்சிமுறை உண்ணாவிரதத்திற்கு சிங்கள அரசு அளித்திருக்கும் பதில் இதோ. இவர்களின் கூரையை பிடுங்கி எறிந்து அராஜகம் செய்துள்ளது சிங்கள அரசின் பொலிஸ் யாழ்ப்பாணம் சென்று நல்லை ஆதீன முதல்வரைச் சந்தித்த காந்தி தேசத்தின் தூதுவர்கூட அருகில் உண்ணாவிரதம் இருந்தவர்களை சந்திக்கவில்லை. அகிம்சை வழியில் போராடுபவர்களை சிங்கள அரசு மதிக்காதது குறித்தும் அகிம்சை தேசம் என்று கூறப்படும் இந்தியா ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகள் தொடரும் என காந்திதேச பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அது சரி. காந்தியை சுட்டுக் கொன்றவர்கள் ஈழத்தில் காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பார்களா? குறிப்பு - கூரையைப் பிய்த்தால் என்ன குடை பிடித்துக்கொண்டு போராட்டத்தை தொடர்வோம் என்று சிங்கள அரசுக்கு பதில் கூறியுள்ளார்கள் தமிழ் மக்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! -Rathy Mogan

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! தோழரே!!!!சகல சௌபாக்கியங்களுடனும்!நீடூழி நீங்கள் வாழவேண்டும்!!!!என... இறைவனிடம் வேண்டுகிறேன்!!! என் மனம்நிறைந்த வாழ்த்துகள்!தோழரே!!💐😍😍😍😍 தமிழினத்திற்கு எதிராக ஒன்று திரண்டு விட்ட பல வாறான சதிகளாலும்,எதிரிகளின் சூழ்ச்சிகளினால் எம்மினத்தினிடையே ஏற்பட்ட உள் முரண்களாலும்,”ஈழத்தமிழர்கள்” எனும் எம் இனம்!21ம் நூற்றாண்டில் சர்வ உலகங்களின் சதிகொண்டு அழிக்கப்பட்டோம்!! உலக நாடெங்கும் “அகதிகள்” எனும் “மனவலியை” தரும் “முத்திரைகளோடு” வலம் வருகின்றோம்.😔 ஆனபோதும்........ நாடுகள்தான் கடந்த போதும் நமக்குள்ளே இருக்கும் ஓர் “தாய்மண்ணை” விட்டகன்ற தவிப்பு,ஆற்றொணாத துயர்,எமக்குள்ளே இருக்கும் ஓர் பிடிவாதம்,நம்பிக்கை,மனவலிமை,துணிவு,விழ விழ எழுவோம்!!!! எனும் ஓர் உந்துதலின் வேகம்,அடக்குமுறையின் ஆற்றாமை அனைத்தையும் உள்ளடக்கி நம்மில் சிலர்,”இனத்திற்கான” விடிவை ஏற்படுத்த வேண்டும்,அதற்கான விதைகளை விதைத்தே ஆக வேண்டும் என்ற “உடும்பு பிடி” போன்று “ஈழத்தவர்” “எழுத்துலகை” கட்டியாளும் சில முன்னோடிகளில்!!!! #நீங்களும் ஒருவர் என்பதில் #பெருமகிழ்ச்சி கொள்கிறேன் தோழரே!!!😍😍😍 திசைகள்தான் வேறான போதும் எம் “எண்ணங்கள்” ஒன்றுதான்!!! ஆறுகள் போய் “சங்கமிக்கும்” இடம் கடல்!!! போன்று நாமும் “இலைமறை காயாக” உங்களின் காலத்திலேயே வாழ்கிறோம் என்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சியே!!!! நம் ஈழ அழிப்பின் பின்னான காலத்தில் பல எழுத்துலகில் தங்களை ஜாம்பவான்கள் என காட்டிகொண்ட பலர் இருந்த இடமோ!! பதிந்த தடமோ!! தெரியாமல் ஒளிந்த கொண்ட #இவ்வேளையில்!!!! நீங்கள் எம் “#வடமராச்சிக்கு” (மற்றவர்கள் கோபம் கொள்ள வேண்டாம்) உரிய துணிவோடு இன்றுவரை களத்தில் கடந்தகால!நிகழ்கால!பல வரலாற்று உண்மைகளையும்,சான்றுகளையும் உரிய நேரங்களில் எடுத்தெடுத்து போட்டு எம்மினத்தினிடையே விழிப்புணர்வை!ஏற்படுத்துவது மட்டுமல்லாது,ஒரு பத்திரிகை துறைக்கே உரிய “நொதுமலாளராக” பாரபட்சம் பார்க்காது அனைத்து தரப்பினரையும்,”அறுத்து தொங்கவிடும்” உங்கள் எழுத்திற்கு “ஈடு இணை” இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். “ஈழத்தவர்” எழுத்துலகில் “ஈடுஇணையற்ற” ஓர் போராளியாக!!! உங்களை பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் கூட தோழரே!!! எம் இனம் இழந்து நிற்கும் அனைத்தையும் இணைத்து ஈடேற்றவாவது,இறைவன் உங்களுக்கு “நீண்ட ஆயுளையும்” “சௌபாக்கியத்தையும்” தரவேண்டும் என இறைவனிடம் வேண்டிகொண்டு,மீண்டும் என் உளம் நிறைந்த பிறந்ததின!!வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்!! #உங்களின் சேவைக்கு நன்றியும் தோழரே!!!🙏😍😍😍😍😍😍😍😍

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!

•வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்! எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் மகிழ்வுக்குரியவை. பெரு மகிழ்வை தந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

அம்பிகையின் அகிம்சைப் போராட்டம்

அம்பிகையின் அகிம்சைப் போராட்டம் தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? கடந்த 15 நாட்களாக அம்பிகை அவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது. போராட்டம் தோல்வியைத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதன் அர்த்தம் எல்லாப் போராட்டமும் வெற்றியை பெறுகிறது என்று அல்ல. அம்பிகை அவர்களின் அகிம்சைப் போராட்டம் வெற்றியை தரவில்லை என்றாலும் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான போராட்டப்பாதை எதுவாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய அவசியத்தை தோற்றுவித்துள்ளது. தனிமனித சாகச போராட்டங்கள் அரசை அசைக்காது என்பது மட்டுமன்றி அவை பரந்;துபட்ட மக்களை அணி திரட்டவும்கூட உதவவில்லை என்பது கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.

தேர்தல் பாதை திருடர் பாதை.

“தேர்தல் பாதை திருடர் பாதை. மக்கள் பாதை புரட்சிப்பாதை” என்று இதுவரை கூறிவந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் தற்போது தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அதன் தலைவர் காளியப்பன் தெரிவித்துள்ளார். இப்போது எழும் கேள்வி என்னவெனில் தேர்தல் பாதை நல்ல பாதையாகிவிட்டதா? அல்லது மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருடர்களாகி விட்டனரா?

கனிமொழி அக்காவின் கவனத்திற்கு!

•கனிமொழி அக்காவின் கவனத்திற்கு! நடிகர் விஐய் சேதுபதி மகளுக்கு மனநலம் பாதிக்கப்ட்ட ஒரு ஈழத் தமிழர் அநாகரிகமாக எழுதியபோது “தமிழ்தேசியர்கள் எல்லாருமே இப்படித்தான்” என்று பொங்கி எழுந்தவர் கனிமொழி அக்கா. இப்போது நடிகை குஷ்பு பற்றி திமுக வைச் சேர்ந்த ஒருவர் அநாகரிகமாக எழுதியதை வைத்து திமுக எல்லோருமே இப்படித்தான் என நாம் கூறப்போவதில்லை. மாறாக இவ்வாறு அநாகரீகமாக எழுதிய திமுக நபரை கனிமொழி அக்கா கண்டிக்க வேண்டும் என்றே கோருகிறோம்.

கோத்தாவின் வெள்ளைவான்

•கோத்தாவின் வெள்ளைவான் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் வரும்! பாக்கியா என்ற 19வயது சிங்கள மாணவி ஒருவரை பொலிஸ் சென்று மிரட்டி அச்சுறுத்தியுள்ளது. தனது வீட்டுக்கு அருகில் உள்ள சிங்கராஜா காடு அழிக்கப்பட்டு அங்கு ஹோட்டல் ஒன்று கட்டப்படுவதை இந்த மாணவி கடந்த சனிக்கிழமையன்று டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அடுத்தநாளே பொலிஸ் சென்று அவரை அச்சுறுத்தியுள்ளது. ஏனெனில் அக் காட்டை அழித்து ஹோட்டல் கட்டுபவர் பிரதமர் மகிந்த ராஜபக்சாவின் மகனாவார். கருத்து கூறியதற்காக சிங்கள மாணவியை சிங்கள ஜனாதிபதியின் சிங்கள பொலிஸ் சென்று மிரட்டியுள்ளது. இதன்மூலம் வெள்ளைவான் தமக்கும் வரும் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள். எந்த சிங்கள மக்களால் ஜனாதிபதியானாரோ அதே சிங்கள மக்களால் கோத்தா தூக்கியெறியப்படுவார். இது உறுதி. குறிப்பு – ஜனாதிபதி கோத்தாவுடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுப்பதற்காக “இலங்கை பாஜக கட்சி” தொடங்கிய அந்த மூன்று நபர்களும் இப்போது எங்கே என்று யாருக்காவது தெரியுமா?

அம்பிகை அவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை.

அம்பிகை அவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை. அவர் எந்தக் கட்சியிலும் இல்லை. தனி மனிதரான அவரின் அகிம்சைப் போராட்டம் எப்படி தமிழ் மக்களுக்கு மிகப் பெரும் துரோகமாக அமையும் என புரியவில்லை. கட்சிகளும் அதன் தலைவர்களும் போராட்டத்தை முன்னெடுக்காத நிலையில் மக்களின் இவ்வாறான தன்னெழுச்சி போராட்டங்கள் தோன்றுவது இயல்பு. அம்பிகையின் தன்னெழுச்சிப் போராட்டம் இலக்கை அடையாமைக்கு காரணம் அவரது இலக்கின் தவறு அல்ல. மாறாக இலக்கை அடைய அவர் தேர்ந்தெடுத்த பாதையின் தவறாகும். ஆனால் துரதிருஸ்டவசமாக அம்பிகையை விமர்சிப்பவர்கள் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்களேயொழிய யாருமே அவர் மேற்கொண்ட பாதையை விமர்சிக்க முன்வரவில்லை. எதிரி மீதான விமர்சனம் என்பது புலி இரைமீது பாய்ந்து கவ்வுவது போன்று இருக்க வேண்டும். நட்பு சக்தி மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவது போல் இருக்க வேண்டும். அதாவது எதிரி மீதான விமர்சனம் ஈவு இரக்க மின்றி எதிரியை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நட்பு சக்தி மீதான விமர்சனம் அவர்கள் தவறை உணர வைத்து வென்றெடுக்க உதவ வேண்டும். அவர்கள் நெஞ்சை தொட வேண்டும். ஆனால் எம்மில் பலர் எதிரிகளான இலங்கை இந்திய அரசுகள் மீது மென்மையான விமர்சனம் வைக்கிறார்கள். நம்மவரான அம்பிகையை கிழித்து தொங்க விடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்க முடியும் என நம்புகிறார்கள்?

தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவது

தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவது மட்டுமன்றி இம்முறை திமுக கூட்டணிக்கு வாக்களிக்கப்போவதாக தோழர் மருதையன் கூறியிருக்கிறாh. பாவம். அவருக்கும் பசிக்கும்தானே. தாராளமாக திமுக கூட்டணியை ஆதரிக்கட்டும். தேவையானால் திமுக ஸ்டாலினை இனி மாபெரும் ஆசானாகவும் ஏற்றுக்கொள்ளட்டும். ஆனால் அதற்காக மார்க்சிய லெனிய அமைப்பில் இரண்டைத்தவிர மற்ற எல்லா அமைப்புகளும் தேர்தல் பாதைக்கு வந்துவிட்டன என்று கூறி தன்னை நியாயப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.

ஒருவர் தமிழ்யுவதி.

ஒருவர் தமிழ்யுவதி. இப்போது சுவிஸில் இருக்கிறார். இன்னொருவர் சிங்கள யுவதி. இலங்கையில் இருக்கிறார்.. தமிழ்யுவதி தனது இனத்திற்கு நடந்த கொடுமைகளை சித்திரமாக வரைந்தார். அவருக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தது. சிங்கள யுவதி தன் காடு அழிக்கப்படுவது குறித்து வருத்தப்பட்டார். உடனே அவர் வீட்டுக்கு பொலிஸ் சென்று அச்சுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி காடு அழிப்பது தொடர்பாக கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் வைக்கப்பட்ட ஓவியம் அகற்றப்பட்டுள்ளது. இவ் ஓவியம் பொலிஸ் மற்றும் மாநகரசபையின் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி அலுவலக உத்தரவின் பேரில் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இலங்கை ஒரு ஜனநாயகநாடு. இங்கு பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் ஒரு சிங்கள ஜனாதிபதியினால் சிங்கள மக்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இது எப்படி நிகழ்கிறது என்று ஆச்சரியப்படுபவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் முதலமைச்சர் எடப்பாடியின் தமிழ் பொலிஸ் தூத்துக்குடியில் 12 தமிழர்களை சுட்டுக்கொன்றதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஏய் தமிழா!

•ஏய் தமிழா! வோட்டு போடுமுன்னர் இதை கொஞ்சம் சிந்தித்துப் பார்! காவிரி உன்னுடையது ஆனால் அதில் உனக்கு தண்ணீர் கிடையாது பாலாறு உன்னுடையது ஆனால் அதில் இருந்து தண்ணீர் பெற முடியாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் அதில் தண்ணீர் தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் அதில் முழு மின்சாரமும் கோர முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் அதில் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியாது கச்சதீவு உன்னுடையது ஆனால் அங்கு நீ செல்ல முடியாது கோயில் உன்னுடையது. ஆனால் அங்கு உன்னால் தமிழில் வழிபட முடியாது. நீதிமன்றங்கள் உன்னுடையது. ஆனால் உன்னால் தமிழில் வாதாட முடியாது. பாடசாலைகள் உன்னுடையது. ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது. தமிழ்நாடு உன்னுடையது. ஆனால் உன்னை ஒரு தமிழன் ஆள முடியாது. நீயும் இந்தியன்தான் என்றால், ஏன் உன்னால் தமிழ் மீனவனைக் காக்க முடியவில்லை? ஏன் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை? ஏன் இலங்கை அரசுக்கு செய்யும் உதவியை நிறுத்த முடியவில்லை? ஏன் சிறப்புமுகாம்களை மூடி அகதிகளை விடுதலை செய்ய முடியவில்லை? ஏன் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியவில்லை? ஜெயா அம்மையாரும் கலைஞரும் மாறி மாறி ஆண்டதில் உன் தமிழ்நாடு; கண்ட நன்மைதான் என்ன? கலைஞர் சம்பாதித்தது 50ஆயிரம் கோடி ஜெயா அம்மையார் சம்பாதித்தது 30 ஆயிரம் கோடி ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருப்தோ 5.21 லட்சம் கோடி கடன் சுமை. காவிரியில் கழிவுநீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்கிறார் கர்நாடக முதலமைச்சர் கெயில் பைப்லைன் போடுவதை தடுக்க தமிழக அரசிற்கு உரிமை இல்லை என்கிறது உச்சநீதிமன்றம். ஏழு தமிழரை தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியபின்பும் தமிழக அரசின் விடுதலை உத்தரவில் கையெழுத்திட ஆளுநர் மறுக்கிறார். தமிழகத்தில் அணுக்கழிவுகளை புதைப்போம், அதைத் தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறது மத்திய அரசு. நச்சு தொழிற்சாலைகள் அனைத்தையும் தமிழகத்தில் அமைப்போம். ஆனால் அதன் பலன்களை தமிழகத்திற்கு தரமாட்டோம் என்கிறது மத்தியஅரசு. தமிழா! இந்தியனாய் சிந்தித்து அடிமையாக இருந்தது போதும் தமிழனாக உணர்ந்து விடுதலை பெறுவாயா?

சங்கத்தலைவன்

•சங்கத்தலைவன் தோழர் பாரதிநாதன் அவர்களின் தறி நாவல் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. பொலிஸ் மற்றும் அரசு அராஜகம் பற்றிய படங்களை துணிவோடு தந்துகொண்டிருக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கு முதலில் பாராட்டுகளும் வாழ்த்துகளும். தறி நாவல் வந்தபோதே அதை வாசித்து அது பற்றிய என் கருத்தையும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். தெரிந்த கதை மட்டுமல்ல களம்கூட அறிந்ததே. ஆனாலும் ஆர்வம் குன்றாமல் பார்க்க முடிகிறது. பிரச்சார நெடி கொஞ்சம் தூக்கலாக இருப்பதுபோல் தோன்றினாலும் இத்தகைய கதைக் களத்தில் இது தவிர்க்க முடியாததே. ஒரு புரட்சிகர நாவல் வெளிவருலதும் அது திரைப்படமாக தயாரிக்கப்படுவதும் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதே. வாழ்த்துக்கள். முடிந்தவர்கள் ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

நினைவு கூர்வோம்!

•நினைவு கூர்வோம்! ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் 12வது நினைவு நாள் இன்றாகும். மாரிமுத்து என்பவர் "இலங்கைத் தமிழர்களை சோனியாகாந்தி காப்பாற்ற வேண்டும்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு 22.03.2009 அன்று இரவு வீட்டு வாசலில் முன்பு தீக்குளித்து மரணமடைந்தார். பாலசுந்தரம் என்பவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பதாகைகளை அமைத்தார் ஆனால் காவல்துறை அவற்றை அகற்றினர். இதையடுத்து 22.03.2009 அன்று மதியம் 12 மணியளவில் தீக்குளித்து மரணமடைந்தார். இவ்வாறு மொத்தம் 16 பேர் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உயிர் தியாகம் செய்தார்கள். ஆனாலும் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை. புலிகள் ராஜிவ் காந்தியைக் கொன்றதால்தான் சோனியாவின் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு அக்கறை எடுக்கவில்லை என்றார்கள். இப்போது இருப்பது சோனியாவின் அரசு இல்லை. இப்போது இருப்பது மோடியின் அரசு. இப்போது புலிகளும் இல்லை. ஆனாலும் இப்பவும் இந்திய அரசு தமிழர்கள் மீது அக்கறை கொள்ளவில்லையே? இந்த 16 தமிழரின் உயிர் தியாகம் இன்றும் எமக்கு கூறும் முக்கிய செய்தி என்னவெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழர் நலனில் அக்கறை கொள்ளாது என்பதே.. இந்த உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வதே இவர்களுக்கு செய்யும் நினைவு அஞ்சலியாக இருக்கும்.

கேரளாவில் காங்கிரஸ் கட்சியானது

கேரளாவில் காங்கிரஸ் கட்சியானது பாஜக வுடன் இரகசிய கூட்டணி அமைத்துள்ளது என கேரள முதல்வரும் கம்யுனிஸ்ட் கட்சி தலைவருமான பினராயி விஜயன் கூறியுள்ளார். அதாவது தமிழ்நாட்டில் காவிப்பாசிசத்திற்கு எதிராக திமுக மற்றும் கம்யுனிஸ்ட்டுகளுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கேரளாவில் அதே பாஜக வுடன் சேர்ந்து செயற்படுகிறது. இப்போது எமது கேள்வி என்னவெனில் (1) காவிப்பாசிசத்திற்கு எதிராக திமுக கூட்டணியை ஆதரிப்பதாக கூறுபவர்கள் இது குறித்து என்ன பதில் கூறப் போகிறார்கள்? (2) காவிப் பாசிச ஆபத்து தமிழ்நாட்டில் மட்டும்தானா? கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இல்லையா? (3) மேற்கு வங்கத்தில் தனக்கு எதிராக கம்யுனிஸ்ட்டுகள் பாஜக வுடன் இரகசிய கூட்டணி அமைப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டுகிறார். இது குறித்து திமுக கூட்டணியை ஆதரிப்போர் என்ன கூறப்போகிறார்கள்? (4) தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை ஆதரிக்காதவர்கள் எல்லாம் பாஜக வின் பினாமிகள் அல்லது பாஜக வின் பி டீம் என்று முத்திரை குத்துபவர்கள் கேரளத்தில் காங்கிரசையும் மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்டுகளையும் அவ்வாறு கூறுவார்களா?

தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல

தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசனையும் நினைவு கூர்வோம். “பகத் சிங்கும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும். பகத் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சுதந்திரம் அடைந்தோம்” என்று முன்னாள் குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் குறிப்பிட்டார். (ஆதாரம்- 24.03.1994 தினமணி) வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர். நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம். இன்று பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் வெள்ளைக்கார அரசால் தூக்கில் இட்டுக் கொல்லப்பட்டநாள் மட்டுமன்று. தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் கொள்ளைக்கார இந்திய அரசால் கொல்லப்பட்ட நாளும் ஆகும். தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் இன்று ஆகும். தியாகி பகத்சிங்கை கொன்றதன் மூலம் இந்தியா சுதந்திரம் பெறுவதை வெள்ளைக்கார அரசால் தடுக்க முடியவில்லை. அதேபோல் தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி. தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோர் தமிழக மக்களுக்காக மட்டும் போராடவில்லை. ஈழத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள். அதனால்தான் அவர்கள் இந்திய அரசால் கொல்லப்பட்டார்கள். பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோரையும் தமிழக மக்களும் ஈழத் தமிழர்களும் என்று நினைவில் போற்றுவார்கள்.

கரடியே காரித் துப்பிவிட்டது!

•கரடியே காரித் துப்பிவிட்டது! கண் தெரியவில்லை. காது கேட்கவில்லை. மற்றவர் துணையின்றி நடக்க முடியவில்லை. எனவே சம்பந்தர் ஐயா பதவி விலகி இளையவர்களுக்கு வழி விட வேண்டும் என கடந்த தேர்தலின் போது நான் பதிவு செய்திருந்தேன். அப்போது சுமந்திரன் விசுவாசிகள் சிலர் நான் அநாகரீமாக கருத்து பதிவதாக எகிறிக் குதித்தார்கள். இப்போது சுமந்திரனே “இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் கட்சி 20 சீட் பெற்றிருக்கும்” என்றும் “இளையவர்களுக்கு வாய்ப்பளித்தல் என்பதை சட்டமாக கொண்டு வர வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, தமிழரசுக்கட்சியின் கனடா பொறுப்பாளரான தங்கவேலு அவர்களும் “தமிழ்தேசிய கூட்டமைப்பு முதியவர்களின் கூடாரமாகிவிட்டது” என்று கூறியிருக்கிறார். சரி இப்போது இந்த பதிவின் நோக்கத்திற்கான விடயத்திற்கு வருகிறேன். கடந்த தேர்தலின்போது கனடாவில் இருந்து வந்த பணத்திற்கு கணக்கு எங்கே என யாழ் மாவட்ட மகிளிர் அணி பொறுப்பாளர் ஒருவர் கேட்டிருந்தார். உடனே அவர் மீது ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார் சுமந்தின். அவ்வேளை கனடா பொறுப்பாளர் தங்கவேலு அவர்களும் சுமந்திரனுக்கு சார்பாக கருத்து தெரிவித்திருந்தார். இப்போhது அதே தங்கவேலு அவர்கள் கட்சியின் பத்திரிகைக்கு 35 லட்சம் ரூபா பணம் அனுப்பியதாகவும் ஆனால் பத்திரிகை வெளியிடவில்லை என்றும் அப் பணத்திற்கு என்ன நடந்தது என்றும் கேட்டிருக்கிறார். இப்போது சுமந்திரன் என்ன கூறப்போகிறார்? கணக்கு காட்டப் போகிறாரா அல்லது தங்கவேல் மீதும் ஆயிரம் கோடி ரூபா நட்டஈடு வழக்கு தொடரப் போகிறாரா?

ஈழத் தமிழருக்கு இன்னல்

ஈழத் தமிழருக்கு இன்னல் நேரும்போதெல்லாம் தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் முதல் குரலாக வைகோ அவர்களின் குரலே இருக்கும். தனது பணத்தில் விமான டிக்கட் போட்டு வந்து ஜ.நாவில் ஈழத் தமிழரகுக்கு ஆதரவாக குரல் எழுப்புபவரும் வைகோ அவர்களே. ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்புவதால் அவருக்கு எந்த பதவியும் இதுவரை கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்தும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார். இப்போதும்கூட “இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் மத்திய அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்” என வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் விரும்பியிருந்தால் எந்த அறிக்கையும் விடாமல் மௌனமாக இருந்திருக்கலாம். கூட்டணி கட்சியினர் விரும்பமாட்டார்கள் என தெரிந்தும் அவர்களுக்கு எரிச்சல் தரக்கூடிய அறிக்கையை ஈழத் தமிழருக்காக அவர் வெளியிட்டிருக்கிறார்.

இவர் வெல்லப்போவதில்ல

இவர் வெல்லப்போவதில்லை. வென்றாலும் இவரால் இவை நிறைவேற்றப்போவதுமில்லை. ஆனாலும்கூட ஈழத் தமிழர் பற்றிய இவரது வாக்குறுதிகள் பாராட்டப்பட வேண்டியவை. ஏனெனில் இவர் இவற்றைக் கூறுவதால் பெரிய கட்சிகளும் இது பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எற்படுகிறது. ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கு ஆதரவு இல்லை என சிலர் கூறினார்கள். தமிழ்நாட்டு தேர்தலில் தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்தே தமிழக மக்கள்; அக்கறை கொள்வார்களேயொழிய ஈழத் தமிழர் பற்றி அக்கறை கொள்ளமாட்டார்கள் என இன்னும் சிலர் கூறினார்கள். அப்படியென்றால் நேற்று கட்சி ஆரம்பித்த கமலஹாசன்கூட எதற்காக ஈழத் தமிழர் பற்றிய வாக்குறுதிகளை வழங்க வேண்டும்?

இந்திய அரசு

•இந்திய அரசு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. தமிழ் மக்களை கைவிட்டுவிட்டது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது! தமிழகத்தில் உள்ள தலைவர்களும் கட்சிகளும் வலியுறுத்தியும்கூட இந்திய அரசு தமிழருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. சீனா வெளிப்படையாக இலங்கை அரசை காப்பாற்ற முயன்றுள்ளது. இந்திய அரசு மறைமுகமாக .இலங்கை அரசை காப்பாற்ற முயன்றுள்ளது. யாழ் குடா நாட்டில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டதால் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்கும் என இந்திய அரசு விசுவாசிகள் கூறினார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இருப்பதால் இந்திய அரசு நிச்சயம் தமிழருக்கு ஆதரவாக செயற்படும் என்றுகூட அவர்கள் சொன்னார்கள். எல்லாவற்றையும்விட இந்து பிரதமரான மோடி அவர்கள் ஈழத்தில் இந்து மக்களை கைவிட மாட்டார் என ஈழத்து பாஜக , மற்றும் ஈழத்து சிவசேனை வெங்காயங்கள் கூறினார்கள். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயற்படுகிறது. தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்படுகிறது. எனவே தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படும் பாஜக கூட்டணியை தமிழக மக்கள் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.

ஈழத் தமிழர்கள் பற்றிய

ஈழத் தமிழர்கள் பற்றிய கமலஹாசன் அவர்கள் நிலைப்பாடு !! •இந்திய குடியுரிமை விரும்பும் ஈழஅகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் •தாயகம் திரும்ப விரும்புவோருக்கு அதற்குரிய வசதிகள் செய்யப்பட வேண்டும். •சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் மூடப்பட வேண்டும் •புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்பட வேண்டும். •ஈழ தேசம் அமைவது அவசியம் கமலஹாசன் அவர்கள் தெரிவித்திருக்கும் மேற்கண்ட வாக்குறுதிகள் பெரும்பாலான மற்ற தமிழகக் கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன. ஆனால் கமலஹாசன் அவர்கள் இன்னும் மேலதிகமாக ஈழத் தமிழர் தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். பொதுவாக கமலஹாசன் அவர்கள் பேசுவது புரியாது என்பார்கள். இன்னும் சிலர் அவர் பேசுவது அவருக்கே புரியாது என்றும் கிண்டல் செய்வார்கள். ஆனால் ஈழத் தமிழர் விடயத்தில் அவர் எப்படி இந்தளவு தெளிவாக கூறுகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் பாஜக வும் சரி காங்கிரஸ் கட்சியும் சரி எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஈழத் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பார்கள். ஆனால் ஆட்சியில் ஏறியதும் இவை இரண்டுமே ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்து வருகின்றன். இதற்கு முக்கிய காரணம் இந்திய வெளியுறவுக் கொள்கையாகும். எனவே ஈழத் தமிழர் தொடர்பான இந்திய வெளியுறவுக்கொள்கை மாற்றப்பட வேண்டும் என்ற கமலஹாசன் அவர்களின் கோரிக்கை வரவேற்கப்பட வேண்டியதே.

இந்திய பிரதமர் மோடியின்

இந்திய பிரதமர் மோடியின் ஈழத் தமிழர் விரோத நிலைப்பாடு! கோழியை வறுத்து திங்க ஆசைபட்டவன் மேய்ந்து கொண்டிருக்கும் கோழியை பிடிக்க "பே..பே" என கோழியின் குரலில்தான் குரல் எழுப்புவான். "ஆஹா! நம் மொழியில் பேசுறானே" என கோழி நினைத்தால் கோழிக்கு எண்ணெய் சட்டிதான் கதி. ஆக பிரதமர் மோடி தமிழில் பேசினார், திருக்குறள் சொன்னார் என மயங்கினால் கோழியின் கதிதான் தமிழனுக்கும். யாழ்ப்பாணம் சென்ற ஒரே இந்திய பிரதமர் தானே என்று மோடி அண்மையில் பெருமையாக பேசினார். ஆனால் இப்போது அதே மோடிதான் ஈழத் தமிழருக்கு விரோதமாக செயற்பட்டுள்ளார். இதுவே வங்காளி இனத்திற்கு நடந்திருந்தால் இந்நேரம் மேற்கு வங்க மாநிலம் பற்றி எரிந்திருக்கும். ஆனால் தமிழ் இனத்திற்கு இந்தளவு துரோகம் இழைக்கப்பட்டிருந்தும் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. பஸ்க்குகூட ஒரு கல்லெறி நடக்கவில்லை. மோடி யின் இத் துரோகத்தை ஸ்டாலின் கண்டித்திருக்கிறார். வைகோ வேல்முருகள் எல்லாம் கண்டித்திருக்கின்றனர். ஏன் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்கூட கண்டித்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் அதன் தலைவர்களும் கண்டித்தும் மோடியினால் எப்படி இத்தனை தைரியமாக தமிழ் இனத்திற்கு எதிராக செயற்பட முடிகிறது? ஏனெனில் தமிழக தலைவர்கள் எல்லாம் வெறும் குரைக்கும் நாய்கள்தான், இவர்கள் ஒருபோதும் கடிக்க மாட்டார்கள் என மோடி நம்புகிறார். தமிழ்நாட்டிற்கு பாராளுமன்றத்தில் 39 எம.பிக்கள் உள்ளனர். இதில் ஒருவர்கூட இந்திய அரசு ஈழத் தமிழருக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் எனக் கோரவில்லை. இப்போது புரிகிறதா மோடி ஏன் தைரியமாக தமிழ் இனத்திற்கு எதிராக செயற்படுகிறார் என்று?

குஜராத் கொலைகாரனும்

•குஜராத் கொலைகாரனும் முள்ளிவாயக்கால் கொலைகாரனும்! மகிந்தராஜபக்சா - ரொம்ப நன்றி மோடிஜி! சொன்னமாதிரி எங்களை காப்பாற்றிவிட்டீர்கள் மோடி - பரவாயில்லை. எங்களுக்;குள்ள எதற்கு நன்றியெல்லாம்? மகிந்த ராஜபக்சா - இல்லை தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் எங்கே ஒருவேளை எங்களை கைவிட்டுவிடுவீர்களோ என பயந்தேன். மோடி - சரி சரி கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையம் என்ன மாதிரி? மகிந்த ராஜபக்சா - கிழக்கு முனையத்தில் உங்களுக்கு 49 % இருந்தது. அதற்கு நம்ம புத்த பிக்குமார் எதிர்ப்பு தெரிவிச்சாங்கள். அதனால அதை எடுத்துவிட்டு மேற்கு முனையத்தில் 90 % தந்திருக்கிறேன். அதுவும் உங்கள் நண்பர் அதானி முதலாளிக்கு தந்துள்ளேன். மோடி - வெரி குட். மகிந்த ராஜபக்சா - அது சரி மோடிஜி! தமிழ்நாட்டு மக்களை எப்படி சமாளிக்கப் போறிங்க? மோடி - அவங்களை ஒரு திருக்குறள் சொல்லி ஈசியாய் ஏமாத்திடலாம். அல்லது அடுத்தமுறை தமிழ்நாடு வரும்போது தமிழில் பேசுவேன் என்று சொன்னா உடனே நம்பிடுவாங்க. மகிந்த ராஜபக்சா - அப்படியா? நானும் தமிழில் பேசிப்பார்த்துவிட்டேன். ஆனால் ஈழத் தமிழனை ஏமாற்ற முடியவில்லையே? கவனம் மோடிஜி! தமிழன்களை ரொம்பவும் குறைச்சு மதித்திடாதீங்க. என்ர அனுபவத்தில் சொல்கிறேன்.

ஆழ்ந்த அஞ்சலிகள்!

•ஆழ்ந்த அஞ்சலிகள்! தமிழினப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்தவரும் எகிப்து நாட்டின் பிரபல பெண்ணிய எழுத்தாளரும் மருத்துவருமாகிய நவல் எல் சதாவி தனது 89 ஆவது வயதில் காலமானார். தீவிர மனித உரிமைச் செயற்பாட்டாளரான அவர் ஈழத் தமிழர் இனப்படு கொலை தொடர்பாக 2010 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் நிறுவப்பட்ட முதலாவது மக்கள் நீதி மையத்தில் பங்கெடுத்தவர். இலங்கையில் போரின் போதும் போருக்குப் பின்னரும் நடந்த தமிழர் இனப்படுகொலைகளைக் கண்டித்து அவை தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று வாதாடி வந்தவர். அவரின் மறைவுக்கு ஈழத் தமிழர் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகளையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒருவர் - ஏம்பா! முரளி

ஒருவர் - ஏம்பா! முரளி மலையக தமிழன் என்பதால்தான் யாழ்ப்பாண தமிழன் எல்லாம் அவர் படத்தில் விஜய சேதுபதி நடிப்பதை எதிர்ப்பதாக கூறினாங்களே. அவங்களை எங்கேயாவது கண்டீயா? மற்றவர் - ????

கண்டா வரச் சொல்லுங்க!

•கண்டா வரச் சொல்லுங்க! அந்த ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் ஐயாவைக் கண்டா வரச் சொல்லுங்க கிளிநொச்சி சிவன் கோவிலும் சிங்கள புத்தரிடம் பறிபோகிறது என்றுகூறி அவரைக் கூட்டி வாருங்க யாழ் ஆயர் இல்லம் முன் போராட்டம் நடத்தியதுபோல் தலதா மாளிகை முன் போராட்டம் நடத்த முடியுமா என்று கேட்டுச் சொல்லுங்க. அடுத்தமுறை யாழ் இந்திய தூதருடன் ரீ குடிக்கும்போது கிளிநொச்சி சிவன் கோவில் பறிபோவதை கூறமுடியுமா என கேளுங்க வரும்போது கூடவே அந்த ஈழத்து பாஜக தம்பிகளையும் கூட்டி வரச் சொல்லுங்க.

தோழர்

“தோழர்” என்ற ஒற்றைச் சொல் எதிரிக்கு இந்தளவு அச்சத்தைக் கொடுக்கிறது எனில் உரத்துச் சொல்வோம் நாங்களும் “தோழர்”களே.

இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லையே.?

இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லையே.? புலிகள் செய்த கொலைகளை விசாரிக்க வேண்டுமாம் இந்திய ராணுவம் செய்த கொலைகளை விசாரிக்க வேண்டுமாம் சுரேஸ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் சித்தார்த்தன் செய்த கொலைகள் எல்லாம் விசாரிக்க வேண்டுமாம் ஆனால் ஏனோ சிங்கள ராணுவம் செய்த கொலைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பரவாயில்லை எல்லாக் கொலைகளையும் விசாரிக்கும்படிதான் ஜ.நா வும் இலங்கை அரசைக் கேட்டுள்ளது. ஆனால் மகிந்த ராஜபக்சா அரசு விசாரணை செய்ய மறுக்கிறதே. விசாரிக்கும் அதிகாரம் மகிந்த ராஜபக்சா அரசிடம்தான் இருக்கிறது. அவரிடம் சென்று கேட்க வேண்டியதை எதற்காக நல்லூரில் வந்து கேட்கிறார் இந்த அருண் சித்தார்த்? நல்லூர் முருகன் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா?

இது தவறு!

இது தவறு! அருண் சித்தார்த் என்பவரின் பாலியல் லீலை என ஒரு வீடியோவை அனுப்பி அதை என் முகநூலில் பகிரும்படி சிலர் கேட்கின்றனர். இது தவறு. தயவு செய்து இப்படியான வீடியோக்களை பொதுவெளியில் பகிர வேண்டாம். அருண் சித்தார்த்தை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்த முடியும். அருண் சித்தாhத்துக்கு பதில் அளிக்க முடியாத அளவிற்கு தமிழ்தேசியம் பலவீனமானது அல்ல.

தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் 27ம் ஆண்டு நினவு நாள் 29.03.2021 ஆகும். 19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார். தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின். தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார். தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார். தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார். தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! குறிப்பு- தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது . இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2016/03/blog-post_33.html

தற்போது போகுமிடமெல்லாம்

தற்போது போகுமிடமெல்லாம் ஒரு செங்கல்லைக் காட்டி “இது என்ன?” என்று உதயநிதி கேட்கிறார். மக்களும் சிரித்துக்கொண்டு “இது செங்கல்” என்கிறார்கள். உடனே உதயநிதி “இல்லை இது எய்ம்ஸ் மருத்துவமனை என்று பிரதமர் மோடி கூறுகிறார்” என்கிறார். மக்கள் சிரித்துக்கொண்டு பலத்த கரகோசம் செய்கின்றனர். உண்மையில் ஸ்டாலினைவிட உதயநிதியின் பிரச்சாரம் மக்களை கவருகின்றது. பாஜக பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது. அவுஸ்ரேலியாவில் சுரங்கம் வாங்குவதற்கு முதலாளி அதானிக்கு 60000கோடி கடனாக மோடி அரசு வழங்கியுள்ளது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 1300 கோடிக்கு ஜப்பானிடம் கடன் கேட்டு கையேந்தகிறது இதே மோடி அரசு. மோடியின் இந்த மோசடியை உதயநிதி சிறப்பாக மக்களிடம் அம்பலப்படுத்துகிறார்.

இவர் ஒரு ஆசிரியர் என்கிறார்கள்

இவர் ஒரு ஆசிரியர் என்கிறார்கள் இவர் கலைமாமனி விருது பெற்றவர் என்கிறார்கள் பட்டிமன்ற பேச்சாளர், நடிகர், அரசியல் செயற்பாட்டாளர் என பல்முக செயற்பாட்டாளர். 66 வயதாகிவிட்டது. இவருக்கே ஒரு மகள் உண்டு அப்படியிருந்தும பொதுவெளியில் எப்படி இவரால் இப்படி பேச முடிகிறது? வன்மையான கண்டனங்கள்.

A.R ரகுமானின் தமிழ் உணர்வு!

•A.R ரகுமானின் தமிழ் உணர்வு! தமிழ்நாட்டு மேடையில் பெண் அறிவிப்பாளர் ஒருவர் இந்தியில் பேசியதும் என்னது இந்தியா என ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு மேடையைவிட்டு கீழே இறங்குகினார் A.R ரகுமான். கீழே நின்றுகொண்டு அப் பெண் அறிவிப்பாளரிடம் “தமிழ் பேசுவீர்களா என்று முதலே கேட்டேன் அல்லவா?” என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் அறிவிப்பாளர் “சும்மா அறிமுகத்திற்காக இந்தி பேசினேன். மன்னித்துவிடுங்கள்” என்கிறார். இதன்மூலம் தனக்கு இந்திப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம் என தெரிந்தும் AR ரகுமான் அவர்கள் தன் தமிழ் இன உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். ஆனால் இப்போது எனது கேள்வி என்னவெனில் சீமானை இனவெறியன் என்பவர்கள் AR ரகுமானையும் தமிழ்இன வெறியன் என்று கூறப்போகிறார்களா?

த கிரேட் இன்டியன் கிச்சன்

அவுஸரேலியாவில் இருக்கும் இலக்கியவாதிப் பெண் ஒருவர் “த கிரேட் இன்டியன் கிச்சன் என்ற மலையாளப்படத்தை பாருங்கள் தோழர்” என்று கூறினார். எனக்கு மலையாளம் தெரியாது என்ற படியால் “தமிழில் டப் பண்ணி வந்தபின் பார்க்கிறேன்” என்றேன். அதற்கு அவர் “இல்லை. இது ஆங்கில சப் டைட்லுடன் உள்ளது. எனவே நீங்கள் கட்டாயம் பார்த்து உங்கள் கருத்தை பகிர வேண்டும்” என கேட்டுக் கொண்டார். அதன்படி நேற்றையதினம் இப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குத்துப்பாட்டு இல்லை. டுமீல் டுமீல் சண்டைக்காட்சிகள் இல்லை. இரட்டை அர்த்தம் தரும் காமடி இல்லை. ஆனாலும் படம் எவ்வித சலிப்பும் இன்றி பார்க்க முடிந்தது. அற்புதமான படம். நடித்தவர்கள்கூட சிறப்பாக நடித்துள்ளார்கள். இது பெண்கள் பார்க்க வேண்டிய படம் இல்லை. பெண்களின் வலிகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு ஆண்கள் பார்க்க வேண்டிய படம். இந்த படம் பார்த்த பின் எனக்கு அம்மாவின் நினைவுகளே வந்தது. “அம்மா பசிக்குது” என்று என் ஒற்றை வார்த்தை கேட்டவுடன் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தன்னால் முடியவில்லை என்றுமே சொன்னதில்லை. உடனே அடுப்படிக்கு ஓடிச் சென்று சமைத்து உணவு தருவார். ஆனால் ஒருநாள்கூட நான் அவர் உணவை பாராட்டியதில்லை. நான் ஒரு மிகவும் மோசமான ஆண். வெட்கப்படுகிறேன்.