Saturday, March 27, 2021

இந்திய அரசு

•இந்திய அரசு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. தமிழ் மக்களை கைவிட்டுவிட்டது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது! தமிழகத்தில் உள்ள தலைவர்களும் கட்சிகளும் வலியுறுத்தியும்கூட இந்திய அரசு தமிழருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. சீனா வெளிப்படையாக இலங்கை அரசை காப்பாற்ற முயன்றுள்ளது. இந்திய அரசு மறைமுகமாக .இலங்கை அரசை காப்பாற்ற முயன்றுள்ளது. யாழ் குடா நாட்டில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டதால் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்கும் என இந்திய அரசு விசுவாசிகள் கூறினார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க இருப்பதால் இந்திய அரசு நிச்சயம் தமிழருக்கு ஆதரவாக செயற்படும் என்றுகூட அவர்கள் சொன்னார்கள். எல்லாவற்றையும்விட இந்து பிரதமரான மோடி அவர்கள் ஈழத்தில் இந்து மக்களை கைவிட மாட்டார் என ஈழத்து பாஜக , மற்றும் ஈழத்து சிவசேனை வெங்காயங்கள் கூறினார்கள். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயற்படுகிறது. தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்படுகிறது. எனவே தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படும் பாஜக கூட்டணியை தமிழக மக்கள் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.

No comments:

Post a Comment