Saturday, March 27, 2021

அகிம்சைப் போராட்டத்திற்கு

•அகிம்சைப் போராட்டத்திற்கு சிங்கள அரசு தந்திருக்கும் பதில்! இவர்கள் ஆயுதம ஏந்திப் போராடவில்லை இவர்களை பயங்கரவாதிகள் என்று யாரும் குறிப்பிடவில்லை ஆனாலும் இவர்களின் சுழற்சிமுறை உண்ணாவிரதத்திற்கு சிங்கள அரசு அளித்திருக்கும் பதில் இதோ. இவர்களின் கூரையை பிடுங்கி எறிந்து அராஜகம் செய்துள்ளது சிங்கள அரசின் பொலிஸ் யாழ்ப்பாணம் சென்று நல்லை ஆதீன முதல்வரைச் சந்தித்த காந்தி தேசத்தின் தூதுவர்கூட அருகில் உண்ணாவிரதம் இருந்தவர்களை சந்திக்கவில்லை. அகிம்சை வழியில் போராடுபவர்களை சிங்கள அரசு மதிக்காதது குறித்தும் அகிம்சை தேசம் என்று கூறப்படும் இந்தியா ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகள் தொடரும் என காந்திதேச பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அது சரி. காந்தியை சுட்டுக் கொன்றவர்கள் ஈழத்தில் காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பார்களா? குறிப்பு - கூரையைப் பிய்த்தால் என்ன குடை பிடித்துக்கொண்டு போராட்டத்தை தொடர்வோம் என்று சிங்கள அரசுக்கு பதில் கூறியுள்ளார்கள் தமிழ் மக்கள்.

No comments:

Post a Comment