Saturday, March 27, 2021

ஏய் தமிழா!

•ஏய் தமிழா! வோட்டு போடுமுன்னர் இதை கொஞ்சம் சிந்தித்துப் பார்! காவிரி உன்னுடையது ஆனால் அதில் உனக்கு தண்ணீர் கிடையாது பாலாறு உன்னுடையது ஆனால் அதில் இருந்து தண்ணீர் பெற முடியாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் அதில் தண்ணீர் தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் அதில் முழு மின்சாரமும் கோர முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் அதில் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியாது கச்சதீவு உன்னுடையது ஆனால் அங்கு நீ செல்ல முடியாது கோயில் உன்னுடையது. ஆனால் அங்கு உன்னால் தமிழில் வழிபட முடியாது. நீதிமன்றங்கள் உன்னுடையது. ஆனால் உன்னால் தமிழில் வாதாட முடியாது. பாடசாலைகள் உன்னுடையது. ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது. தமிழ்நாடு உன்னுடையது. ஆனால் உன்னை ஒரு தமிழன் ஆள முடியாது. நீயும் இந்தியன்தான் என்றால், ஏன் உன்னால் தமிழ் மீனவனைக் காக்க முடியவில்லை? ஏன் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை? ஏன் இலங்கை அரசுக்கு செய்யும் உதவியை நிறுத்த முடியவில்லை? ஏன் சிறப்புமுகாம்களை மூடி அகதிகளை விடுதலை செய்ய முடியவில்லை? ஏன் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியவில்லை? ஜெயா அம்மையாரும் கலைஞரும் மாறி மாறி ஆண்டதில் உன் தமிழ்நாடு; கண்ட நன்மைதான் என்ன? கலைஞர் சம்பாதித்தது 50ஆயிரம் கோடி ஜெயா அம்மையார் சம்பாதித்தது 30 ஆயிரம் கோடி ஆனால் அப்பாவி தமிழ் மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருப்தோ 5.21 லட்சம் கோடி கடன் சுமை. காவிரியில் கழிவுநீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்கிறார் கர்நாடக முதலமைச்சர் கெயில் பைப்லைன் போடுவதை தடுக்க தமிழக அரசிற்கு உரிமை இல்லை என்கிறது உச்சநீதிமன்றம். ஏழு தமிழரை தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியபின்பும் தமிழக அரசின் விடுதலை உத்தரவில் கையெழுத்திட ஆளுநர் மறுக்கிறார். தமிழகத்தில் அணுக்கழிவுகளை புதைப்போம், அதைத் தடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறது மத்திய அரசு. நச்சு தொழிற்சாலைகள் அனைத்தையும் தமிழகத்தில் அமைப்போம். ஆனால் அதன் பலன்களை தமிழகத்திற்கு தரமாட்டோம் என்கிறது மத்தியஅரசு. தமிழா! இந்தியனாய் சிந்தித்து அடிமையாக இருந்தது போதும் தமிழனாக உணர்ந்து விடுதலை பெறுவாயா?

No comments:

Post a Comment