Saturday, March 27, 2021

இந்திய பிரதமர் மோடியின்

இந்திய பிரதமர் மோடியின் ஈழத் தமிழர் விரோத நிலைப்பாடு! கோழியை வறுத்து திங்க ஆசைபட்டவன் மேய்ந்து கொண்டிருக்கும் கோழியை பிடிக்க "பே..பே" என கோழியின் குரலில்தான் குரல் எழுப்புவான். "ஆஹா! நம் மொழியில் பேசுறானே" என கோழி நினைத்தால் கோழிக்கு எண்ணெய் சட்டிதான் கதி. ஆக பிரதமர் மோடி தமிழில் பேசினார், திருக்குறள் சொன்னார் என மயங்கினால் கோழியின் கதிதான் தமிழனுக்கும். யாழ்ப்பாணம் சென்ற ஒரே இந்திய பிரதமர் தானே என்று மோடி அண்மையில் பெருமையாக பேசினார். ஆனால் இப்போது அதே மோடிதான் ஈழத் தமிழருக்கு விரோதமாக செயற்பட்டுள்ளார். இதுவே வங்காளி இனத்திற்கு நடந்திருந்தால் இந்நேரம் மேற்கு வங்க மாநிலம் பற்றி எரிந்திருக்கும். ஆனால் தமிழ் இனத்திற்கு இந்தளவு துரோகம் இழைக்கப்பட்டிருந்தும் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. பஸ்க்குகூட ஒரு கல்லெறி நடக்கவில்லை. மோடி யின் இத் துரோகத்தை ஸ்டாலின் கண்டித்திருக்கிறார். வைகோ வேல்முருகள் எல்லாம் கண்டித்திருக்கின்றனர். ஏன் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்கூட கண்டித்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் அதன் தலைவர்களும் கண்டித்தும் மோடியினால் எப்படி இத்தனை தைரியமாக தமிழ் இனத்திற்கு எதிராக செயற்பட முடிகிறது? ஏனெனில் தமிழக தலைவர்கள் எல்லாம் வெறும் குரைக்கும் நாய்கள்தான், இவர்கள் ஒருபோதும் கடிக்க மாட்டார்கள் என மோடி நம்புகிறார். தமிழ்நாட்டிற்கு பாராளுமன்றத்தில் 39 எம.பிக்கள் உள்ளனர். இதில் ஒருவர்கூட இந்திய அரசு ஈழத் தமிழருக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் எனக் கோரவில்லை. இப்போது புரிகிறதா மோடி ஏன் தைரியமாக தமிழ் இனத்திற்கு எதிராக செயற்படுகிறார் என்று?

No comments:

Post a Comment