Saturday, March 27, 2021

நிச்சயம் வெற்றி

“நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இவர்களிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே இவர்களை பேரணி செல்ல வைக்கிறது. இப்படி வீதியோரம் படுத்து உண்ணாவிரதம் இருக்கச் செய்கிறது. கையில் ஆயுதம் இல்லை. ஆதரிக்க ஒரு பலமான நாடு இல்லை. இருந்தும் புதிது புதிதாக களத்தை உருவாக்கி போராடுகிறார்கள். குத்துச் சண்டை போட்டியில் ஒருவன் வீழ்ந்தவுடன் தோல்வி என்று அறிவிப்பதில்லை. மாறாக வீழ்ந்தவன் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி என அறிவிக்கப்படும். அதுபோல் சிங்கள அரசு வெற்றியை கொண்டாட முடியாமல் இருப்பதற்கு காரணம் தமிழ் இனம் தோல்வியை இன்னும் ஒத்துக் கொள்ளாமல் எழுந்து நின்று போராடுவதே.

No comments:

Post a Comment