Saturday, March 27, 2021

இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லையே.?

இந்த கொசுவின் தொல்லை தாங்க முடியவில்லையே.? புலிகள் செய்த கொலைகளை விசாரிக்க வேண்டுமாம் இந்திய ராணுவம் செய்த கொலைகளை விசாரிக்க வேண்டுமாம் சுரேஸ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் சித்தார்த்தன் செய்த கொலைகள் எல்லாம் விசாரிக்க வேண்டுமாம் ஆனால் ஏனோ சிங்கள ராணுவம் செய்த கொலைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பரவாயில்லை எல்லாக் கொலைகளையும் விசாரிக்கும்படிதான் ஜ.நா வும் இலங்கை அரசைக் கேட்டுள்ளது. ஆனால் மகிந்த ராஜபக்சா அரசு விசாரணை செய்ய மறுக்கிறதே. விசாரிக்கும் அதிகாரம் மகிந்த ராஜபக்சா அரசிடம்தான் இருக்கிறது. அவரிடம் சென்று கேட்க வேண்டியதை எதற்காக நல்லூரில் வந்து கேட்கிறார் இந்த அருண் சித்தார்த்? நல்லூர் முருகன் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா?

No comments:

Post a Comment