Saturday, March 27, 2021

வீட்டோடு மாப்பிள்ளை!

வீட்டோடு மாப்பிள்ளை! கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியில் வீட்டோடு மாப்பிள்ளை பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பங்கு பற்றிய பலரும் வீட்டோடு மாப்பிள்ளை என்பது கேவலமானதாகவும் தமிழர் முறை அல்ல என்பதாகவும் கருத்து கூறினார்கள். ஆனால் ஈழத்தின் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் தமிழக தமிழர்கள் ஈழத்தில் வீட்டோடு மாப்பிள்ளை முறைதான் இருக்கின்றது என்பதை இதுவரை அறியாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஈழத்தில் இதுவரை ஒரு பெண்கூட காஸ் சிலிண்டர் வெடித்து இறக்கவில்லை என்பதற்கு இந்த வீட்டோடு மாப்பிள்ளை முறைதான் காரணம் என நினைக்கிறேன். ஈழத்தில் சொத்து பெரும்பாலும் பெண் பிள்ளைகளுக்கே வழங்கப்படுகிறது. அவர்களே தம் பெற்றேரை முதுமைக்காலத்தில் பராமரிக்கிறார்கள். குறிப்பு – கம்போடியாவில் பெண்களுக்கே வரதட்சணை கொடுக்கப்படுகிறது. இதனால் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்றே கம்போடிய பெற்றார்கள் விரும்புகிறார்கள்.

No comments:

Post a Comment