Saturday, March 27, 2021

நல்ல நிகழ்ச்சி

•நல்ல நிகழ்ச்சி முடிந்தால் ஒருமுறை பார்த்துவிடுங்கள்! கடந்த ஞாயிற்றுக்கிழமை ZEE தமிழ் தொலைக்காட்சியில் கரு.பழனியப்பன் அவர்களின் “தமிழா தமிழா” நிகழ்ச்சியில் “ இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் அமானுஷ்ய நம்பிக்கை அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா” என்னும் தலைப்பில் கலந்துரையாடியுள்ளனர். அதாவது பேய் பில்லி சூனியம் நரபலி போன்ற மூட நம்பிக்கைகள் குறைந்திருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஒரு படித்த பேராசிரியரே தன் இரு மகள்களை நரபலி கொடுத்த செய்தி வந்திருக்கும் சூழ்நிலையில் இந்த கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர்கூட தமிழ்நாட்டில் திருவாரூர் என்னும் இடத்தில் தந்தை ஒருவர் Nஐhதிடர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு தன் மகனைக் கொன்ற செய்தி வந்துள்ளது. இது பெரியார்மண் என்று பெருமையாக கூறும் தமிழ்நாட்டில் இத்தகைய கொடுமை எப்படி நிகழ்ந்தது?

No comments:

Post a Comment