Saturday, March 27, 2021

கோத்தாவின் வெள்ளைவான்

•கோத்தாவின் வெள்ளைவான் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் வரும்! பாக்கியா என்ற 19வயது சிங்கள மாணவி ஒருவரை பொலிஸ் சென்று மிரட்டி அச்சுறுத்தியுள்ளது. தனது வீட்டுக்கு அருகில் உள்ள சிங்கராஜா காடு அழிக்கப்பட்டு அங்கு ஹோட்டல் ஒன்று கட்டப்படுவதை இந்த மாணவி கடந்த சனிக்கிழமையன்று டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். அடுத்தநாளே பொலிஸ் சென்று அவரை அச்சுறுத்தியுள்ளது. ஏனெனில் அக் காட்டை அழித்து ஹோட்டல் கட்டுபவர் பிரதமர் மகிந்த ராஜபக்சாவின் மகனாவார். கருத்து கூறியதற்காக சிங்கள மாணவியை சிங்கள ஜனாதிபதியின் சிங்கள பொலிஸ் சென்று மிரட்டியுள்ளது. இதன்மூலம் வெள்ளைவான் தமக்கும் வரும் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள். எந்த சிங்கள மக்களால் ஜனாதிபதியானாரோ அதே சிங்கள மக்களால் கோத்தா தூக்கியெறியப்படுவார். இது உறுதி. குறிப்பு – ஜனாதிபதி கோத்தாவுடன் பேசி தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுப்பதற்காக “இலங்கை பாஜக கட்சி” தொடங்கிய அந்த மூன்று நபர்களும் இப்போது எங்கே என்று யாருக்காவது தெரியுமா?

No comments:

Post a Comment