Saturday, March 27, 2021

இவர்கள் பயங்கரவாதிகள் என்கிறார்கள்

இவர்கள் பயங்கரவாதிகள் என்கிறார்கள் இவர்கள் போர்க்குற்றம் இழைத்தார்கள் என்கிறார்கள் இவர்களுடைய போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் ஜ.நா வில் அறிக்கை கொடுக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கை ராணுவத்தை விட இவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்கிறார்கள். சரி. அப்படியென்றால் கடந்த 12 வருடமாக ஏன் இது குறித்து விசாரணை செய்யவில்லை? இப்படி கூறுபவர்களின் கையில்தானே அரசும் அதிகாரமும் இருக்கிறது. சிங்கள அரசு நினைத்திருந்தால் ஒரு வாரத்தில் இறந்தவர்களின் பட்டியலை திரட்டி வெளியிட்டிருக்கலாமே? அதில் எத்தனைபேர் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள், எத்தனை பேர் இவர்களால் கொல்லப்பட்டவர்கள் என்ற விபரத்தை காட்டியிருக்கலாமே? இவர்களிடமிருந்து தமிழ் மக்களை காக்கவே போர் தொடுத்தோம் என்கிறார்கள். அப்புறம் ஏன் 60ஆயிரம் சிங்கள ராணுவத்தை தமிழர் பகுதிகளில் குவித்து வைத்திருக்கிறார்கள்? அப்புறம் ஏன் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் புலிகள் வந்துவிடுவார்கள் என அச்சப்படுகின்றார்கள்?

No comments:

Post a Comment