Saturday, March 27, 2021

ஈழத் தமிழருக்கு இன்னல்

ஈழத் தமிழருக்கு இன்னல் நேரும்போதெல்லாம் தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் முதல் குரலாக வைகோ அவர்களின் குரலே இருக்கும். தனது பணத்தில் விமான டிக்கட் போட்டு வந்து ஜ.நாவில் ஈழத் தமிழரகுக்கு ஆதரவாக குரல் எழுப்புபவரும் வைகோ அவர்களே. ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்புவதால் அவருக்கு எந்த பதவியும் இதுவரை கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்தும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார். இப்போதும்கூட “இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் மத்திய அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்” என வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் விரும்பியிருந்தால் எந்த அறிக்கையும் விடாமல் மௌனமாக இருந்திருக்கலாம். கூட்டணி கட்சியினர் விரும்பமாட்டார்கள் என தெரிந்தும் அவர்களுக்கு எரிச்சல் தரக்கூடிய அறிக்கையை ஈழத் தமிழருக்காக அவர் வெளியிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment