Wednesday, March 31, 2021

திருவாரூரில் இருந்து மஞ்சள் பையுடன்

திருவாரூரில் இருந்து மஞ்சள் பையுடன் வந்த கலைஞர் குடும்பத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்க முடியாதவர்கள் இவரிடம் 35 லட்சம் ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்கிறார்கள். ஒரு ரூபா சம்பளத்தில் எப்படி 30 அயிரம் கோடி ரூபா சொத்து வந்தது என்று ஜெயா அம்மையாரிடம் கேட்க முடியாதவர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தில் எப்படி வாழ்கிறீர்கள் என்று இவரிடம் கேட்கின்றனர். இதுவரை இவர் ஆட்சியில் இருந்ததில்லை. இம்முறையும் இவர் ஆட்சியைப் பிடிக்கப்போறதில்லை ஆனாலும் எல்லோரும் சேர்ந்து இவரை எதிர்கிறார்களே அது ஏன்? ஏனென்றால் இவர் ஒருவர்தான் “நாடு என் கையில் சிக்சிச்சு நீ செத்தே” என்று மகிந்த ராஜபக்சேவை எச்சரித்துள்ளார். அதுமட்டுமல்ல இவர் ஒருவர் மட்டுமே இனி தமிழன் மேல் கைவச்சால் திருப்பி அடிப்பேன் என்று கூறினார். கைக்கெட்டும் தூரத்தில் 7 கோடி தமிழர் தாம் இருந்தும் ஈழத் தமிழரை காக்க முடியவில்லையே என்ற ஆழ்ந்த வருத்தம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு இளைஞன் மனதிலும் உள்ளது. இந்த தமிழக இளைஞர்களின் உணர்வையே இவர் தன் பேச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார். மீண்டும் எழுந்து நிற்க முயலும் ஈழத் தமிழர்களுக்கும் இவரின் இந்த பேச்சு நிச்சயம் ஆறுதல் கொடுக்கும். இவர் திருப்பி அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் இவர் ஒருவர் மட்டுமே இவ்வாறு பேசியிருக்கிறார்.

No comments:

Post a Comment