Saturday, March 27, 2021

பூனையும் எலியும் ஓடும்போது

பூனையும் எலியும் ஓடும்போது பெரும்பாலும் எலிகளே வெற்றி பெறுகின்றன. ஏனெனில், பூனை உணவுக்காக ஓடுகிறது எலி உயிருக்காக ஓடுகிறது. அதாவது, தேவையைவிட குறிக்கோளே அதிக திறமையை வெளிப்படுத்தும். அதேபோன்று, அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல அது தற்காப்பு எனப்படும். பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை வன்முறை என்றார்கள். “பயங்கரவாதம்” என்று முத்திரை குத்தி கொன்று அழித்தார்கள். இப்போது அதே பெண்கள் அகிம்சை வழியில் போராடுகிறார்கள். ஆனால் யாருமே கண்டுகொள்ளவில்லையே.? இவர்கள் என்ன தமிழீழமா கேட்கிறார்கள், இல்லையே? நடந்த இனப்படுகொலைக்கு நீதிதானே கேட்கிறார்கள். அதைக்கூட இந்த அகிம்சை வழியால் பெற முடியவில்லையே. அப்புறம் எப்படி அகிம்சை வழியில் தமிழ் இன விடுதலை பெற முடியும்? நியாயவான்களே! எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறீர்கள்? வந்து பதில் சொல்லுங்கள். தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?

No comments:

Post a Comment