Saturday, March 27, 2021

கண்ணீர் அஞ்சலிகள்!

• கண்ணீர் அஞ்சலிகள்! ஒருபுறம் கொரோனோவுக்கே மருந்து கண்டுபிடித்துவிட்டதாக உலகம் மகிழ்ந்து கொண்டிருக்கும்வேளையில் மறுபுறத்தில் இப்பவும் குளவி கடித்து தமிழர் இறப்பது கொடுமையே. இத்தனை நாளும் மலையகத்திலேயே வருடா வருடம் தோட்டத்தொழிலாள மக்கள் குளவி கடித்து இறந்து வந்தனர். தற்போது முல்லைத்தீவில் ஒரு தமிழ் விவசாயி அதுவும் 50 வயதில் குளவி கடித்து இறந்துள்ளார். குளவிக் கடிக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லையா? அல்லது அந்த மருந்து தமிழருக்கு வழங்கப்படுவதில்லையா? பதவி பெற்றவுடன் 5 கோடி ரூபா சொகுசு வாகனத்திற்கு அலையும் அரசியல்வாதிகள் பதில் தருவார்களா? சந்தேகம்- விவசாயியையும் தோட்டத் தொழிலாளர்களையும் கடிக்கும் குளவி ஏன் அரசியல்வாதிகளை கடிப்பதில்லை?

No comments:

Post a Comment