Saturday, March 27, 2021

ஈழத் தமிழ் பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா?

•ஈழத் தமிழ் பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா? நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் பண மோசடி புகார் என்றே தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த ஜெர்மனிப் பெண் என்பவர் ஒரு ஈழத் தமிழ் பெண் என்பதை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன. திருமணம் செய்வதாக கூறி ஜெர்மனியில் வசிக்கும் ஈழத் தமிழ் பெண்ணிடம் 70 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நடிகர் ஆர்யா அப் பெண்ணை ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துகொள்ளாதது மட்டுமன்றி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்க மறுக்கிறார் நடிகர் ஆர்யா. அதுமட்டுமன்றி காவல்துறையிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் வீட்டுக்கு ஆள் அனுப்புவேன் என்றும் மிரட்டுகிறார். தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த ஒரு மலையாள நடிகர் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஈழத் தமிழ் பெண்ணுக்கு மிரட்டும் அளவுக்கு எப்படி அவருக்கு துணிச்சல் வந்தது?

No comments:

Post a Comment