Saturday, March 27, 2021

குஜராத் கொலைகாரனும்

•குஜராத் கொலைகாரனும் முள்ளிவாயக்கால் கொலைகாரனும்! மகிந்தராஜபக்சா - ரொம்ப நன்றி மோடிஜி! சொன்னமாதிரி எங்களை காப்பாற்றிவிட்டீர்கள் மோடி - பரவாயில்லை. எங்களுக்;குள்ள எதற்கு நன்றியெல்லாம்? மகிந்த ராஜபக்சா - இல்லை தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் எங்கே ஒருவேளை எங்களை கைவிட்டுவிடுவீர்களோ என பயந்தேன். மோடி - சரி சரி கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையம் என்ன மாதிரி? மகிந்த ராஜபக்சா - கிழக்கு முனையத்தில் உங்களுக்கு 49 % இருந்தது. அதற்கு நம்ம புத்த பிக்குமார் எதிர்ப்பு தெரிவிச்சாங்கள். அதனால அதை எடுத்துவிட்டு மேற்கு முனையத்தில் 90 % தந்திருக்கிறேன். அதுவும் உங்கள் நண்பர் அதானி முதலாளிக்கு தந்துள்ளேன். மோடி - வெரி குட். மகிந்த ராஜபக்சா - அது சரி மோடிஜி! தமிழ்நாட்டு மக்களை எப்படி சமாளிக்கப் போறிங்க? மோடி - அவங்களை ஒரு திருக்குறள் சொல்லி ஈசியாய் ஏமாத்திடலாம். அல்லது அடுத்தமுறை தமிழ்நாடு வரும்போது தமிழில் பேசுவேன் என்று சொன்னா உடனே நம்பிடுவாங்க. மகிந்த ராஜபக்சா - அப்படியா? நானும் தமிழில் பேசிப்பார்த்துவிட்டேன். ஆனால் ஈழத் தமிழனை ஏமாற்ற முடியவில்லையே? கவனம் மோடிஜி! தமிழன்களை ரொம்பவும் குறைச்சு மதித்திடாதீங்க. என்ர அனுபவத்தில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment