Saturday, March 27, 2021

செய்தி – சம்பந்தர் போன்று ஆளுமை உள்ளவர்

செய்தி – சம்பந்தர் போன்று ஆளுமை உள்ளவர் தெற்காசியாவிலேயே இல்லை – சாணக்கியன். என்னது ஐயா ஆளுமை மிக்கவரா? லண்டனில் அம்பிகா அம்மையார் பத்தாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். தாயகத்திலும் மக்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஐயா உயிரோடு இருக்கிறாரா அல்லது உறக்கத்தில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. கடந்த ஆட்சியில் தீபாவளிக்கு தீர்வு வரும் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். இந்த ஆட்சியில் அதுவும் இல்லை. ஐ.நா அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐயா அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் உள்ள ரெலோ அதனை நிராகரித்துள்ளது. கூட இருக்கும் பங்காளிக்கட்சியையே ஐயாவால் அரவணைக்க முடியவில்லை. அப்புறம் எப்படி தெற்காசியாவில் ஆளுமை மிக்க தலைவராக இருக்க முடியும்? ஆளுமை என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் தெற்காசியா எங்கே இருக்கிறது என்பதையாவது தெரிந்து சாணக்கியன் பேச வேண்டும்.

No comments:

Post a Comment