Wednesday, October 30, 2013

சமூக நோக்கு

• “சமூக நோக்கு” இதழ் -2 வெளிவந்துள்ளது.

ஆசிரியர- பௌசர்

இதழ் பெற்றுக் கொள்ள அல்லது மேலதிக விபரங்களுக்கு

தொலைபேசி- 00447817262980
மின்னஞ்சல்- samukanookku@gmail.com
இணைய முகவரி- www.samukanookku.net

இன்று இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்கிற அக புற நெருக்கடிகள் பற்றிய எழுத்துக்களையும், கருத்துகளையும,; அவற்றை எதிர்கொள்வதற்கு அவசியமான சில முன்மொழிவுகளையும் தொகுத்து தரப்பட்டிருக்கிறது.

தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் 14 வது நிகழ்வு

லண்டனில் ஈஸ்ட்காமில் நேற்று (26.10.2013) தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் 14 வது நிகழ்வு மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

முதலாவது அமர்வாக ஜெய்சன் அவர்களின் கவிதைத் தொகுதி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் சபேஸ் சுகுணசபேசன் தலைமையில் கவுன்சிலர் போல் சத்தியநேசன், அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் கிரகாம் வில்லியம்சன் ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியில் நூல் ஆசிரியர் ஜெய்சன் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினார்.

சிறிய இடைவேளையின் பின்னர் இரண்டாவது அமர்வாக காலம் சென்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுனிலா அபேசேகர அவர்களின் நினைவும் பங்களிப்பும் குறித்து சார்ல்ஸ் அந்தனிதாஸ் தலைமையில் சரிநிகர் ஆசிரியர் சிவகுமார் உரையாற்றினார்.

மாலை 9.00 மணியளவில் நிகழ்வுகள் முடிவுற்றன. அண்மைய காலங்களில் இடம்பெற்ற புத்தக வெளியீடுகளில் மிகவும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட நிகழ்வாக இது இடம்பெற்றது பாராட்டுக்குரிய அம்சமாகும். ஆனால் பங்கு பற்றிய மக்களில் பெரும்பாலானோர் அதுவும் குறிப்பாக மனித உரிமைக்காக அதிகம் குரல் கொடுக்கும் வரதகுமார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுனில் அபேசேகரவின் நிகழ்வில் கலந்து கொள்ள அக்கறை காட்டாமையானது மிகவும் துரதிருஸ்டவசமானது.

எமக்காக சிங்கள மக்கள் குரல் கொடுப்பதில்லை என ஒருபுறம் கூறிக்கொள்கிறோம். மறுபுறம் அவ்வாறு குரல் கொடுக்கும் சுனில் அபேசேகர போன்றவர்களை நினைவு கூர தயங்குகிறோம். இனியாவது இந்த நிலை மாற வேண்டும்.

• தோழர் பொழிலன் அவர்களை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

• தோழர் பொழிலன் அவர்களை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கு, கிண்டி கத்திபாரா நேரு சிலை வெடிகுண்டு வழக்கு, ஊட்டி பூங்கா வெடி குண்டு வழக்கு என பல்வேறு வழக்குகள் நிமித்தம் கைது செய்யப்பட்ட தோழர்பொழிலனுக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.சென்னை உயர்நீதிமன்றம் இதனை உறுதி செய்தது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் 10 வருடங்களாக தண்டனையை குறைத்தது.

பல வருடங்களாக சென்னை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தோழர் பொழிலன் அவர்களை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மகனான தோழர் பொழிலன் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். அவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதன் மூலம் அவரது விடுதலைப் போராட்டத்தை நசுக்கலாம் என இந்திய மத்திய மாநில அரசுகள் கனவு காண்கின்றன.

இதே கொடைக்கானல் வழக்கில்தான் நானும் கைது செய்யப்பட்டேன். எட்டு வருட சிறைவாழ்க்கையின் பின்னர் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்பார்கள். என்னை நீதிமன்றம் விடுதலை செய்த போதும் தமிழ்நாடு அரசு என்னை விடுலை செய்யாமல் சிறையை விடக் கொடிய சிறப்புமுகாமில் அடைத்தது. நான் எனது சொந்த செலவில் இலங்கை திரும்பிச் செல்ல அனுமதிக்குமாறு கோரியும் விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் என்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது தமிழக அரசு.

தோழர் பொழிலன் மற்றும் பல தோழர்களின் உதவியாலும் ஆதரவினாலும் நான் சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இந்தியாவை விட்டு நாடு கடத்தப்பட்டேன். அவர்கள் செய்த உதவிகளை நன்றியுடன் நினைவு கூருகிறேன். தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்க அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

• ஜெயலலிதாவும் ஈழப் போராளி மகேஸ்வரனும்

• ஜெயலலிதாவும் ஈழப் போராளி மகேஸ்வரனும்

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் தமது பதவி நலன்களுக்காகவே ஈழப்பிரச்சனையைப் பயன்படுத்திவந்தனர். எம்.ஜி.ஆர் , கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல ஜெயலலிதாவும் கூட இவ்வாறே செயற்பட்டார். இவர்கள் ஒருபோதும் ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் அனுதாபமும் கொள்ளவில்லை. தமது பதவி நலன்களுக்காகவே பேசி வருகின்றனர்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் எனச் சிலர் கூறினார்கள். இலை மலர்ந்தது. அவர் பதவிக்கு வந்தார். ஆனால் இன்னும் ஈழம் மலரவில்லை. ஈழம் மலராவிட்டாலும் பரவாயில்லை தமிழ்நாட்டில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்து சிறப்புமுகாம்களையாவது மூடியிருக்கலாம். ஆனால் அவர் அதைக்கூட செய்யவில்லை. ஆனால் அவரோ கச்சதீவை மீட்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவதும் என்று நாடகம் போடுகிறார்.

இன்னொரு சாரார் ஜெயலிலதா ஒரு பாப்பாத்தி என்றும் அவர் ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என்றும் விமர்சனம் செய்கின்றனர். துக்ளக் சோ போன்றவரகள்; ஜெயலலிதா ஈழப்போராளிகளை தனக்கு அருகில் சேர்த்துக்கொள்வதில்லை என்றும் ஈழப்போராளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பவர் என்றும் புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஜெயலலிதாவும் மற்ற அரசியல்வாதிகள் போல் தேவை யேற்பட்டால் ஈழப்போராளிகளை அரவனைப்பதும் தேர்தலில் மக்கள் ஆதரவு பெற தான் ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதாக கூறுவதும் வென்றபின் அனைத்தையும் கைவிட்டு மறந்து செயற்படுவதும் வாடிக்கையாக கொண்டிருப்பவர்.

மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது இயக்க சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. அதில் முக்கியமானது ஒன்ரை கோடி ருபா பெறுமதியான தங்க கட்டிகள் ஆகும். இவை இலங்கையில் காத்தானகுடி வங்கியில் கொள்ளையிடப்பட்ட நகைகள் ஆகும். அவற்றை உருக்கி தங்க கட்டிகளாக அவர் மதுரையில் வைத்திருந்தார். இவற்றையும் பொலிசார் கைப்பற்றி வழக்கில் சேர்த்திருந்தனர்.

மகேஸ்வரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரும் அவரது இயக்க உறுப்பினர்களும் செலவுக்கு பணம் இன்றி மிகவும் கஸ்டப்பட்டனர். சாப்பிடக்கூட காசு இன்றி தவித்தனர். முக்கிய நபர்கள் மூலம் மத்திய உளவுப்படையை நெருங்கி உதவி கோரியபோது அவர்கள் இது மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதால் எம்.ஜி.ஆரிடம் கேட்குமாறு கூறியிருந்தனர். ஒரு முக்கிய அமைச்சர் மூலம் எம்.ஜி.ஆரிம் கேட்டபோது இது வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதால், இது நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விடயமாகையால் இதை தன்னால் தர முடியாது எனக் கைவிரித்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் மற்றும் மத்திய அரசு போன்றவையே தங்களால் உதவ முடியாது என்று கைவிரித்துவிட்டதால் இனி இந்த தங்கக் கட்டிகளை பெற்றுக்கொள்ளமுடியாது என்று மகேஸ்வரன் கருதியிருந்த வேளையில் “இந்து” பத்திரிகையில் பணி புரியும் ஒரு முக்கிய நபர் மகேஸ்வரனைத் தொடர்பு கொண்டு ஜெயலலிதாவிடம் கேட்கும்படி ஆலோசனை கூறினார். எம்.ஜி.ஆராலேயே முடியாத விடயம் அப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கும் ஜெயலலிதாவால் முடியுமா என நினைத்து மகேஸ்வரன் அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்தார். ஆனால் அந்த முக்கிய நபர் மீண்டும் மகேஸ்வரனை அணுகி ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன் என்றார்.

“ஜெயலலிதா ஒரு நடிகை. அவர் எம்.ஜி.ஆரின் வைப்பாட்டி. அதனால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்” எனபதே அவரைப்பற்றிய பொதுவான அபிப்பிராயமாக அப்போது ஈழப்போராளிகளுக்கு இருந்தது. எனவே ஒருவித அவ நம்பிக்கையுடன் வேண்டா வெறுப்பாக ஜெயலலிதாவுடன் மகேஸ்வரன் தொடர்பு கொண்டார். உடனடியாக ஜெயலலிதாவுடன் சந்திப்பதற்கு நேரம் தரப்பட்டது. மகேஸ்வரன் சென்றார். அவருக்கு தன்கையாலே பழரசம் கொடுத்து வரவேற்ற ஜெயலலிதா ஈழப்பிரச்சனை குறித்து மிகவும் அக்கறையுடனும் அனுதாபத்துடனும் பேசினார். நீங்கள் எல்லாம் அடிக்கடி தன்னுடன் சந்திக்க வேண்டும் என்றும் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்கலாம். நான் நிச்சயம் செய்து தருவேன் என்றெல்லாம் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவத்தில் கைப்பற்ற பட்ட தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ள உதவுவது குறித்து அப்போது எதுவும் பேசாதது மகேஸ்வரனுக்கு ஏமாற்றமாக இருந்தது. எனவே அவர் விரக்தியுடன் திரும்பி வந்தார்.

அவர் திரும்பி வந்த அரை மணி நேரத்தில் பொலிஸ் கமிஸனரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் உடனடியாக வந்து தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ளும்படி கேட்கப்பட்டது. மகேஸ்வரனைப் பொறுத்தவரையில் தன்னையே நம்பமுடியாத அளவிற்கு சந்தோசம் அடைந்தார். அவர் மட்டுமல்ல நாங்கள் அனைவரும் ஜெயலலிதா இந்த உதவியை செய்வார் என்றோ அல்லது அதையும் இவ்வளவு விரைவாக செய்வார் என்றோ கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆர் மற்றும் மத்திய அரசால் செய்ய முடியாத ஒரு காரியத்தை அதுவும் வழக்கில் நீதிமன்ற அதிகாரத்தில் இருந்த ஒன்ரைக் கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் திருப்பி கிடைக்க செய்தவர் ஜெயலிலதா. அன்று தனது அரசியல் பிரவேசத்தின்போது இவ்வாறு உதவி செய்தவர் பின்னர் ஆட்சியில் அமர்ந்ததும் ஈழப் போராளிகளை மறந்தார். அதுமட்டுமல்ல அப்பாவி அகதிகளை பிடித்து சிறப்பு முகாமில் அடைத்தார். அதே மகேஸ்வரன் மீது அந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு வழக்கை நடத்தினார். அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருந்தார்.

நான் துறையூர் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது எமக்கு படிப்பதற்கு பத்திரிகைகள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த சட்ட விரோதத்தைச் சுட்டிக்காட்டி அனுமதிகோரி 14 நாட்கள் உண்ணா விரதம் இருந்தோம். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு “இப்படி தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ள உதவி செய்த நீங்கள் இப்போது அகதிகளை இப்படி துன்புறுத்தலாமா?” எனக் கேட்டு கடிதம் அனுப்பினேன். உடனே அப்போது திருச்சி கியூ பிரிவு உதவி கண்காணிப்பாளராக இருந்த சண்முகம் என்பவர் துறையூர் முகாமில் என்னைச் சந்தித்து இனிமேல் இப்படிப்பட்ட உண்மை விபரங்களை வெளிப்படுத்தும் கடிதங்களை எழுதத்கூடாது என எச்சரித்தார்.

இங்கு நான் இதை வெளிப்படுத்துவதன் நோக்கம் ஜெயலலிதாவும் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் பதவியைப் பிடிப்பதற்கு எல்லாவித உதவிகளையும் செய்வதும் பதவியை பெற்றபின் மறந்து செயற்படுவதும் வழக்கமாக கொண்டவர்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே.

• மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம். நடந்தது என்ன?

• மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம். நடந்தது என்ன?

“துக்ளக்” சோ போன்றவர்கள் ஈழப்போராளிகள் தமிழகத்தில் அராஜகம் செய்தனர் என்பதற்கு குறிப்பிடும் சம்பவங்களில் இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவமும் ஒன்றாகும். இது பற்றிய உண்மைகள் முழுவதும் இந்த சோ, ராம் போன்ற பார்ப்பண கும்பல்களுக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியாது என்பதால் இவர்கள் தொடர்ந்தும் எழுதியும் ஏமாற்றியும் வருகின்றனர். எனவே இந்த சம்பவம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவது எனது கடமை என கருதுகிறேன்.

1984 ல் சென்னை விமான நிலையத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 40ற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்கள் பெரும்பாலும் சிங்கள பயணிகளாயினும் தமிழகத்தில் நடந்த முதல் பாரிய வெடிகுண்டு சம்பவம் என்பதால் இது மக்கள் மத்தியில் கடும் அதிர்வை எற்படுத்தியிருந்தது.

அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தார். இதனை செய்தது ஈழ விடுதலை இயக்கம் என்பதை தெரிந்தும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தியது தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமையிலான “தமிழீழ தேசிய இராணுவம்” ஆகும். எமது “பேரவை” இயக்கமும் தமிழீழ தேசிய ராணுவமும் ஜக்கியமாக சேர்ந்து இயங்கினோம். இந்தியாவில் எமது பாதுகாப்பு கருதி நாம் அவர்களது பெயரிலேயே செயற்பட்டோம்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து முதன் முதலாக வேதாரணியத்தில் கரைப்பொறுப்பாக இருந்த எமது தோழரும் ஈழத்திற்கு அனுப்ப வைத்திருந்த 100 பெட்டி வெடி மருந்தும் பொலிசாரால் கைப்பற்றப்ட்டது. அடுத்து ஒரு வாரத்தில் வெடிகுண்டு சம்பவத்தின் சூத்திரதாரியான தம்பாபிள்ளை மகேஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.

அவரை விசாரணை செய்யும்போது முழு உண்மைகளையும் பொலிசார் தெரிந்து கொண்டனர். அதாவது சென்னையில் இருந்து செல்லும் இலங்கை விமானத்தில் அந்த வெடி குண்டு அனுப்ப இருந்தது என்றும் கொழும்பில் அது இறங்கி சுமார் அரை மணி நேரத்தின் பின்பே குண்டு வெடிக்க இருந்தது என்றும் அதற்கு ஏற்ப நேர குண்டாக அது செய்யப்பட்டது என்பதையும் அறிந்து கொண்டனர். இங்கு மகேஸ்வரன் அவர்களின் நோக்கம் இலங்கையில் குண்டு வெடித்து இலங்கை அரசுக்கு பொருளாதார இழப்பு வரவேண்டும் என்பதேயொழிய சென்னை விமான நிலையத்தில் வெடிக்கவைப்பதோ அல்லது பயணிகளைக் கொல்வதோ நோக்கமாக இருக்கவில்லை.

மகேஸ்வரன் சென்னை விமான நிலையத்தில் பணி புரியும் ஒரு உயர் அதிகாரியிடம் இது பற்றி பேசி அவரும் தான் குண்டை கொழும்பிற்கு அனுப்ப உதவி செய்வதாக கூறி லஞ்சமாக பெரிய தொகை பணமும் பெற்றுக்கொண்டார். அந்த உயர் அதிகாரி கூறியபடி மகேஸ்வரனே விமான பயண ரிக்கட்டுடன் குண்டு அடங்கிய பயண சூட்கேசையும் கொண்டு சென்றார். ஆனால் அங்கு வாக்குறுதியளித்தபடி அந்த உயர் அதிகாரி நிற்காமல் ஏமாற்றிவிட்டார். இதனால் வேறுவழியின்றி சூட்கேசை அப்படியே விமான நிலையத்தில் வைத்துவிட்டு மகேஸ்வரன் திரும்பி வரவேண்டியேற்பட்டுவிட்டது.

வெளியே வந்த மகேஸ்வரன் உடனடியாக தொலைபேசி மூலம் சுங்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் விடயத்தை கூறியுள்ளார். அவர்களும் சென்று பெட்டியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வேறு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சென்றுவிட்டனர். அவர்கள் அஜாக்கிரதையாக இருப்பதை கண்ட மகேஸ்வரன் உடனே விமான நிலைய சுங்க துறையினருக்கு தொலை பேசி மூலம் குண்டு வெடிக்கப்போகிறது என்ற விடயத்தை கூறினார். சுங்க அதிகாரிகள் சென்று பெட்டியை தூக்கி பார்த்து “நல்ல கனமாக இருக்கிறது. அவ்வளவும் தங்க கட்டிகளாக இருக்கும,; ஆட்கள் எல்லாம் போன பின்பு எடுத்து நைசாக தமக்குள் பங்கு போட்டுக் கொள்ளலாம்” என்று ஒரு ஓரத்தில் பெட்டியை மறைத்துவைத்துவிட்டார்கள்.

இவ்வாறு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையாலும், தவறாலுமே சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடித்தது. இலங்கை விமானத்திற்கு ஏறவந்த சிங்கள பயணிகளும் கொல்லப்பட்டனர். இந்த உண்மைகள் யாவும் பொலிசார் மூலம் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே அதிகாரிகளை ஏசிவிட்டு மகேஸ்வரனை ஜாமீனில் விடுதலை செய்யும்படி அறிவுறுத்தினார்.

ஜாமீனில் வெளிவந்த மகேஸ்வரன் தொடர்ந்தும் இயங்கினார். ஆனால் அவரது இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டு அவரும் இயங்காமல் இருந்தவேளை 1997ம் ஆண்டு சென்னையில் அவர் கைது செய்யப்பட்டு இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கில் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். இருந்தும் ஜெயலலிதா அரசு வேண்டுமென்றே உச்ச நீதிமன்த்தில் அப்பீல் செய்தது. அதிலும் அவர் விடுதலை செய்யப்படார். இறுதியாக அவர் 2010ம் ஆண்டவில் சிறையில் இருந்து விடுவிக்கபப்ட்டு ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டார்.

• மீரா பாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடு

• மீரா பாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடு

இன்று (20.10.13) லண்டனில் ஈஸ்ட்காமில் மீராபாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

பாலசிங்கம் சுகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. யமுனா ராஜேந்திரன் “மரணம் இன அழிப்பும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அடுத்து மு. நித்தியானந்தன் “மரணம் அஞ்சலியும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதையடுத்து மாதவி சிவலீலன் “மரணம் இழப்பும் பாதிப்புகளும் பெண்களும் குழந்தைகளும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக நூல் ஆசிரியர் மீராபாரதி நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

மீராபாரதி உரையாற்றும்போது தனது தந்தையின் இழப்பும் அதனை தான் ஆற்றுப்படுத்த தான் எதிர் கொண்ட அனுபவங்களுமே இந்த நூலை எழுத தூண்டியது என்றார். எனவே இங்கு அவரின் தந்தை பற்றி சில வரிகள் கூறவேண்டும் என விரும்புகிறேன். அவரது தந்தையார் “கரவை கந்தாமி” என அறியப்பட்டவர். அவர் தோழர் சண்முகதாசனின் கம்யுனிஸ்ட் கட்சியில் முன்னனி தோழராக செயற்பட்டவர். மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்து முழுநேர ஊழியராக செயற்பட்டவர். அவர் எனது ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தாலும்கூட அவரை நான் ஒருபோதும் ஊரில் காணவில்லை. 1988ல் கொழும்பில் தோழர் சண்முகதாசனின் இல்லத்திலே அவரைக் கண்டிருக்கிறேன். தோழர் சண்முகதாசனை நான் வீடீயோ பேட்டி கண்டபோது அவரும் அங்கு நின்றிருந்தார். மிகவும் ஆர்வமுடன் அவற்றை பார்த்துக்கொண்டு நின்றார். இறுதியாக தனக்கும் அதில் ஒரு பிரதி தாருங்கள் என்று கேட்டார்.

தோழர் கரவைக் கந்தசாமி தனது இறுதிக்காலங்களில் புளட் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் உண்மையில் புரட்சிகர தோழர்கள் மத்தியில் அதிர்சியையும் கடும் துயரத்தையும் கொடுத்திருந்தது.

அதேவேளை மகனாக அவரது அந்த கொடிய மரணத்தை மீராபாரதி எதிர்கொண்ட அனுபவங்களை நூலாக்கியுள்ளார். அது மட்டுமல்ல மீராபாரதி புளட் இயக்கத்தில் செயற்பட்டதாலும் மேலும் யுத்த பூமியில் வாழ்ந்ததாலும் அவர் பல மரணங்களை தன் வாழ்நாளில் சந்திருக்கிறார். அத்தோடு 2009ல் தமிழ் மக்களுக்கு எற்பட்ட பாரிய இழப்புகளும் அவரை இந்த நூலை எழுத தூண்டியிருக்கிறது.

• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே?

• கலைஞர் தத்தெடுத்த அகதி சிறுவன் எங்கே?

• ஸ்டாலின் குடும்பத்தால் அந்த சிறுவன் கொல்லப்பட்டானா?

• அகதி சிறுவனுக்கு நீதி, நியாயம் கிடைக்குமா?

1983களில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு ஏழை அகதி சிறுவனை தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்தார். அவருடன் அந்த சிறுவன் நிற்கும் படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன.

ஆனால் தற்போது அந்த சிறுவன் குறித்து எந்த தகவலும் கலைஞர் குடும்பத்திலிருந்து வெளிவருவதில்லை. கலைஞருக்கு பல மனைவிகள். பல பிள்ளைகள். பல பேரப்பிள்ளைகள் என அவரின் குடும்பம் மிகப் பெரியது. இருந்தும் அவர் ஒரு ஏழை அகதி சிறுவனை தத்தெடுத்து தனது கருணை மனதை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மீது தான் கொண்டிருக்கும் அபரிதமான அன்பை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தினார் என்றே நாம் நம்பினோம்.

எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி. அதனால் அவருக்கு இலங்கை தமிழர்கள் மீது உண்மையான அன்பு,இரக்கம் இல்லை. ஆனால் கலைஞர் உலகத் தமிழின தலைவர் என்பதால் இவ்வாறு ஒரு அகதி சிறுவனை தத்தெடுத்து தனது தமிழ் உணர்வை நிரூபித்துள்ளார் என அப்போது ஒவ்வொரு தி.மு.க தொண்டனும் பெருமைப்பட்டான்.

இன்று கலைஞரின் பெரிய குடும்ப படங்கள் அடிக்கடி பத்திரிகையில் வெளிவருகின்றன. ஆனால் அதில் ஒன்றில்கூட இந்த ஏழை அகதி சிறுவனைக் காண முடியவில்லை. எதிர்காலத்தில் தங்கள் சொத்தில் பங்கிற்கு அந்த சிறுவன் வந்துவிடுவான் என்ற அச்சத்தில் கலைஞர் குடும்பத்தினர் அந்த சிறுவனை விரட்டிவிட்டார்கள் என அறியவருகிறது.

இது உண்மையாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அந்த சிறுவன் கலைஞர் குடும்பத்தால் கொல்லப்பட்டுவிட்டான் என சிலர் தெரிவிப்பது எமக்கு மிகவும் கவலைக் கொடுக்கிறது. இது உண்மைதானோ என நினைக்கும் வகையில் இவ்வளவு காலமும் கலைஞர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பரிதி இளம்பரிதியும் அந்த சிறுவன் எங்கே என்று கேட்டிருக்கிறார். இது கலைஞர் குடும்பத்தின் மீது சந்தேகத்தை அதிகரிக்கின்றது.

கலைஞர் தன் தமிழ் உணர்வைக் காட்டுவதற்காக அநியாயமாக ஒரு அகதி சிறுவனைப் பலி கொடுத்துவிட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது. எனவே கலைஞரோ அல்லது தி.மு.க வினர் யாராவது அந்த சிறுவன் உயிரோடு இருப்பதையும் அவன் குறித்த விபரத்தையும் உடன் மக்களுக்கு அறியத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் அறிய தராவிடின் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக போராடும் பலரை நாம் அறிவோம். அவர்கள் இந்த அகதி சிறுவனுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை தமிழ் மக்களுக்கு அறிய தருமாறு அனைவரையும் மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.

• முள்வேலி

• முள்வேலி

இது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல் தொகுப்பாகும். 12 வது வெளியீடாக வந்திருக்கிறது. ம.க.இ.க வின் செயலர் தோழர் மருதையன் அவர்களின் தொகுப்புரையுடன் மொத்தம் ஜந்து பாடல்கள் கொண்ட ஒலிக் குறுந்தகடாக வந்துள்ளது. ஈழ தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவல வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட பாடல்கள். கேட்பதற்கு நன்றாக மட்டுமல்ல உணர்வை ஏற்படுத்தும் வரிகளைக்கொண்டிருப்பதும் உண்மையிலே பாராட்டத்தக்கது.

ரஸ்சிய புரட்சியின் போதும் அதன் பின்னரும் அதன் தாக்கம் கலை இலக்கியங்களில் வெளிப்பட்டு உலகிற்கு சிறந்த படைப்புகள் கிடைத்தன. அதுபோல் சீனப் புரட்சியின் போதும் சிறந்த கலை இலக்கிய படைப்புகள் கிடைத்தன. ஆனால் துரதிருஸ்டவசமாக தமிழ் மக்களின் போராட்டம் 30 வருடங்களுக்கு மேலாக நடந்தும் ஒரு சிறந்த கலை இலக்கிய படைப்பு கிடைக்கவில்லை.

ஆனால் அடக்கு முறை அரசுகள் எவ்வளவு அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டாலும் அதையெல்லாம் உடைத்துகொண்டு சிறந்த கலைப்புடைப்புகள் இனி வெளிவரும் என நம்புகிறேன். அதற்கு இந்த “முள்வேலி” நம்பிக்கையைத் தருகிறது. இந்த பாடல் தொகுப்பை தந்து ஒரு சிறந்த முன்னுதாரணத்தை தந்துள்ள மகஇக அமைப்பினருக்கு இலங்கை தமிழர்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது புலிஆதரவு கட்சிகளே “இளம் தலைவரை கொன்றது தவறு” என்று அறிக்கை விட்டபோது “ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டியவரே” என தைரியமாக மக்களுக்கு அறிவித்தவர்கள் ம.க.இ.கவினரே. அது மட்டுமல்ல ஈழத் தமிழர்களை ஆதரித்தால் “தடா” கறுப்பு சட்டம் பாயும் என்ற நிலை இருந்தபோது அது கண்டு அஞ்சாது உறுதியாக தமது ஆதரவினை தெரிவித்தவர்கள் இவர்கள். சிறப்பு முகாம் கொடுமைகள் குறித்து தமது வெளியீடுகளில் தொடர்ச்;சியாக வெளியிட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தியவர்கள் இவர்கள்.

நான் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டபோது தமது “புதியஜனநாயகம்” இதழில் முன் அட்டைப்படமாக எனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பிரசுரித்து வெளிப்படுத்தியவர்கள். அன்றும் சரி இன்றும் சரி இலங்கை தமிழர்களின் போராட்டத்திற்கு புரட்சிகர கண்ணோட்டத்தில் தமது ஆதரவை வழங்கி வருபவர்கள். அவர்கள் இப்போது இந்த “முள்வேலி” பாடல் தொகுப்பை வெளியிட்டுளார்கள்.

சிறந்த படைப்புகளை ஆதரித்து ஊக்கிவிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். குறிப்பாக இது எமது வலியை சொல்லும் பாடல் தொகுப்பாக இருப்பதால் இலங்கை தமிழர்கள் அனைவரும் வாங்கி அவர்களை ஊக்கிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

லண்டனில் இந்த பாடல்தொகுப்பை பெற்றுக்கொள்ள விரும்புவோர் என்னிடமோ அல்லது “இனியொரு” ஆசிரியர் நாவலன் அவர்களையோ தொடர்பு கொள்ளவும்.
எனது மின்னஞ்சல் முகவரி
tholar2003@hotmail.com

• லண்டனில் அம்மா!

• லண்டனில் அம்மா!

லண்டனில் அம்மா என்றதும் ஜெயா அம்மையார் லண்டன் வருகிறாரா என்று நினைத்துவிடாதீர்கள். இது கேரள சாமி அம்மா பற்றியது.

எதிர்வரும் 23 திகதி (23.10.13) லண்டனில் அலெக்சான்டர் பலஸ் என்னும் புகழ் பெற்ற மண்டபத்தில் கேரளத்து சாமி “அம்மா” தனது பக்தர்களை சந்திக்க வருகிறார்.

இந்தியாவில் தனது மக்களின் குறைகளை தீர்க்க முடியாத இந்த அம்மா இங்கிலாந்து வந்து மக்களின் குறைகளை தீர்க்கவுள்ளாராம். நம்புங்கள் மக்களே!

ஒருபுறம் கலைநிகழ்ச்சி என திரைப்படத்துறையினர் வந்து பணத்தை சுருட்டி செல்கின்றனர். இன்னொரு புறம் இந்த சாமிகள் வந்து பணத்தை பிடுங்குகின்றனர். பாவம் தமிழ் மக்கள். இந்த லண்டன் குளிரில் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை இந்த பகல் கொள்ளைக்காரர்களிடம் கொடுத்து ஏமாந்து நிற்கின்றனர். இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த வழியில்லையா?

“கதவை திற காற்று வரும்” என்றார் நித்தியானந்தா சுவாமிகள். கதவைத் திறந்தால் காற்று வரவில்லை. மாறாக அவரும் ரஞ்திதாவும் கட்டிப் புரண்ட காட்சிகள் டி.வி யில் வந்தன. அடுத்து காஞ்சிப் பெரியவாள் நடிகை சுவர்ணலதாவுடன் சேர்ந்து கொலைக் கேசுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வருகிறார். இன்னொரு ஆசாரம் சாமி என்பவர் சிறுமி ஒருத்தியுடன் கொண்ட பாலியல் உறவுக்காக சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். அதேவரிசையில் இந்த அம்மாவும் இறுக்கி கட்டியணைத்து அருள் பாலிக்கின்றாராம். நிறைய ஆம்பிளைகள் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு காத்து கிடக்கின்றனர். இது என்ன வில்லங்கத்தைக் கொண்டு வரப்போகிறதோ தெரியவில்லை.

முள்ளிவாய்க்காலில் அவலம் நடந்தபோது இந்த அம்மா அருள் பாலிக்கவில்லை. இன்றும்கூட இந்த அம்மா அந்த பாதிக்கப்பட்ட மக்களை காண வன்னி செல்லவில்லை. மாறாக டாலர் பவுண்ட்ஸ் பெறுவதற்காகவே லண்டனுக்கு வருகிறார். இதை இந்த அப்பாவி தமிழ் பக்தர்கள் எப்போது உணரப் போகின்றார்கள்?

தந்தை பெரியார் ஏன் அடிக்கடி “வெங்காயம்” என்று கூறினார் என்பது இப்போது புரிகிறது. ஆனால் இந்த முட்டாள் வெங்காயங்களை எப்படி திட்டினாலும் உறைக்காது.

புளொட் தலைவர் உமா மகேஸ்வரன்.

“புலிகள் வென்றால் அது தமிழ் மக்களுக்கு வெற்றி அல்ல. ஆனால் புலிகள் தோற்றால் அது தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும்” - புளொட் தலைவர் உமா மகேஸ்வரன்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து புலிகள் இயக்கத்தினர் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஆனால் அதேவேளை இந்திய உளவுப்படையான “றோ” இரகசியமாக புளொட் இயக்கத்திற்கு ஆயுதங்களை வழங்கியது. இதை அறிந்த நாம் ஆச்சரியமடைந்தோம். எனவே இது பற்றி அறிவதற்காக புளொட் தலைவர் உமா மகேஸ்வரனையும் அதன் படைத்துறைச் செயலர் கண்ணன் அவர்களையும் சந்தித்தேன். அப்போது கண்ணன் “றோ” தந்த ஆயுதங்களைக்காட்டி புலிகளை சுட்டுக் கொல்லும்படி தந்திருக்கிறார்கள் என்றார்.

இந்திய அரசு தமிழ் மக்களுக்கு உதவி செய்ததாகவும் ஆனால் புலிகள்தான் தேவையில்லாமல் சண்டை பிடித்து தமிழ் மக்களுக்கு கெடுதல் விளைவித்துவிட்டார்கள் என்று இன்றும் நம்பும் அப்பாவிகள் நிறையப் பேர் எம் மத்தியில் இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசு புலிகளை அழிக்க நினைத்த போதே புலிகள் வேறு வழியின்றி தங்களைக் காப்பதற்காக இந்திய ராணுவத்தை எதிர்த்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.

மேலும் அப்போதுதான் முகுந்தன் என்று அழைக்கப்படும் உமா மகேஸ்வரன் “புலிகள் வென்றால் அது தமிழ் மக்களின் வெற்றி அல்ல, ஆனால் அவர்கள் தோற்றால் அது தமிழ் மக்களின் தோல்வியாக அமையும்” என்றார். அவர் மட்டுமல்ல பின்னர் 1999ம் ஆண்டு புளொட் தலைவராக இருந்த மாணிக்கதாசனும் கொழும்பில் இதே வரிகளை என்னிடம் கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நிறைய செய்ததாகவும் அவர் இருந்திருந்தால் இந் நேரம் தமிழீழம் மலர்ந்திருக்கும் என்றும் கதை சொல்ல சிலர் தற்போது ஆரம்பித்துள்ளனர். எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில புலிகளை ஆதரிக்கவில்லை. புளொட் அமைப்பபையே ஆதரித்தார். அப்போது புளொட் அமைப்பு இரகசியமாக வெளிநாட்டில் இருந்து 150 ரைபிள் துப்பாக்கிகளை இறக்குமதி செய்தது. இது AK47 போன்று நவீனரக துப்பாக்கி இல்லையென்றாலும்கூட அதையும் பெற்றுக் கொள்ள எம.ஜி.ஆர் அரசு அனுமதிக்கவில்லை. அவரின் பொலிஸ் அதிகாரி மோகன்தாஸ் அந்த ஆயுதங்கள் எல்லாவற்றையும் பிடித்து அரசிடம் ஒப்படைத்தார். புளொட் அமைப்பு தன் சொந்த செலவில் பெற்றுக்கொள்ள முனைந்த துப்பாக்கிகளைப் பறித்த அதே இந்திய அரசு பின்னர் புலிகளை அழிக்கும்படி நவீன துப்பாக்கிகளை வழங்கியது.

புளொட் அமைப்பு மாலைதீவு எதிர்க்கட்சி தலைவரின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு உதவியது. அதன் மூலம் எதிர்காலத்தில் மாலை தீவை பின் தளமாக பயன்படுத்த முடியும் என புளொட் கணித்தது. ஆனால் அப்போது மாலை தீவு அரசு இலங்கை அரசிடமே உதவி கேட்டது. இந்திய அரசிடம் உதவி கேட்கவில்லை. ஆனால் இந்திய அரசு நுழைந்து புளொட் போராளிகளை கைது செய்ததோடு மாலை தீவு அரசைக் காப்பாற்றியது. இந்திய அரசு தமிழ் போராளிகளுக்கு தானும் உதவி செய்யாது. அவர்கள் வேறு இடத்தில் உதவி பெறவும் விடாது என்பதற்கு மாலைதீவு சம்பவம் ஒரு நல்ல உதாரணமாகும்.

புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் சண்டை நடந்தபோது பாகிஸ்தான் உளவுப்படை புலிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. அது மட்டுமல்ல தேவையான உதவிகள் வழங்குவதாகவும் உறுதியளித்தது. ஆனால் பிரபாகரன் எக் காரணம் கொண்டும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உளவுப்படையுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என தனது போராளிகளுக்கு மிகவும் கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார். இவ்வாறு யுத்த களத்திலும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்த புலிகளுக்கு இந்திய அரசு வழங்கிய பரிசே முள்ளிவாய்க்கால் அழிவும் 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களின் படுகொலையும்.

பின்னர் உமா மகேஸ்வரன் கொழும்பில் வைத்து கொல்லப்பட்டார். அவர் இந்திய உளவுப்படைக்கு ஒத்துழைக்க மறுத்தமையினால் அவரது கொலையின் பின்னனியில் இந்திய உளவுப்படைகளே இருந்துள்ளன .உமா மகேஸ்வரனைக் கொன்ற நபர்களுக்கு இந்திய தூதுவராலயமே பாதுகாப்பு வழங்கியது. அந் நபரை தமிழ்நாட்டில் வைத்து பராமரித்து வந்தது றோ அமைப்பு. அவரை தமிழ்நாடு அரசு தெரியாமல் கைது செய்து மேலூர் சிறப்பு முகாமில் அடைத்தபோது அடுத்தநாளே “றோ” அவரை விடுவித்து பெங்களுர் அழைத்து சென்றுவிட்டது. இதிலிருந்தே இந்திய உளவுப்படையின் பங்களிப்பை உணரமுடியும்.

கண்ணன் படைத்துறை செயல் அதிபராக இருந்தாலும் அவர் அரசியல் விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். குறிப்பாக அவர் இந்தியாவில் பல புரட்சிகர சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் பல அமைப்புகளுக்கு எம் மூலம் நிறைய உதவிகள் செய்தார். குறிப்பாக பைப் வெடிகுண்டுகள் அவர்களது ஆதரவாளரான திருச்சி பா.ஜ.க கவுன்சிலர் ஒருவரது பட்டறையிலே செய்து கொள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து தந்தார். அவர் இலங்கைக்கு திரும்பு முன்னர் தமது தோழர்கள் வசந், விஜயன் போன்றவர்களையும் பல ஆதரவாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

புளொட் வானொலி பொறுப்பாளராக இருந்த சிவா சின்னப்பொடி மூலம் கேரள புரட்சிகர சக்திகளின் தொடர்பு கிடைக்க வழி செய்தார். கண்ணன் தமிழரசன் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அதேபோல் தோழர் தமிழரசனும் அவரை சந்தித்து பேச மிகவும் விரும்பினார். ஆனால் துரதிருஸ்டவசமாக அவர்கள் விருப்பம் நிறைவேறவில்லை. இருவரும் மிக குறுகிய கால இடைவெளியில் கொல்லப்பட்டுவிட்டனர்.

• தொடரும் பொலிஸ் கொலைகளை நிறுத்துவது யார்?

• தேவாரம் அப்பாவிகளை தர்மபுரியில் கொன்றார்.
• சைலேந்திரபாபு தோழர் நாகராசனைக் கொன்றார்.
• கியூ பிராஞ் தோழர் தமிழரசன் மற்றும் 4 தோழர்களை கொன்றனர்.
• தொடரும் பொலிஸ் கொலைகளை நிறுத்துவது யார்?

கொடைக்கானல் டி.வி டவர் வெடி குண்டு வழக்கில்(1991) நான் கைது செய்யப்பட்டதால் 14 நாட்களுக்கு ஒரு முறை கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு வந்தேன். மதுரை சிறையில் இருந்தபோதும் அதன் பின்னர் வேலூர் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த வேளையிலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இவ்வாறுதான் ஒரு ஏட்டு மற்றும் இரு காவலர்கள் காவலுடன் என்னை பேரூந்தில் அழைத்துச் சென்றனர். (அவ்வாறு அழைத்து செல்லும்போது எடுத்த படமே கீழே தரப்பட்டுள்ளது). ஆனால் திடீரென ஒருநாள் என்னை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவன் எனக் குறிப்பிட்டு ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஜீப் வண்டிகளில் சுமார் 30 பொலிசார் காவலுடன் கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நான் “பேரவை” இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது பொலிசாருக்கு நன்கு தெரியும். அதுமட்டுமல்ல அவர்கள் தந்த குற்றப்பத்திரிகையிலும் நான் “பேரவை” இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றே குறிப்பிட்டுள்ளனர். அப்படியிருக்கும்போது திடீரென என்னை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவன் எனக் குறிப்பிட்டதோடல்லாமல் அதிக காவலுடன் அழைத்து சென்றது எனக்கும் எனது தோழர்களுக்கும் சந்தேகத்தைக் கொடுத்தது.

எமது சந்தேகம் அதிகமானதற்கு முக்கிய காரணம் சம்பந்தமேயில்லாமல் எஸ்.பி சைலேந்திரபாபு எனக்கு காவலுக்கு வந்ததாகும். அதற்கு முதல் வாரம்தான் திண்டுக்கல்லில் தோழர் நாகராசன் சைலேந்திரபாபுவினால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோழர் நாகராசன் தமிழரசன் போல் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர்களில் ஒருவர். அவரை இரகசியமாக முதல் நாளே கைது செய்த இந்த சைலேந்திரபாபு அடுத்த நாள் சுட்டுக் கொன்றுவிட்டு “மோதலில் பலி” என அறிக்கை விட்டிருந்தார்.

“குட்டி தேவாரம்” என அழைக்கப்படும் இந்த எஸ்.பி சைலேந்திரபாபு தேவாரம் போல் சட்டவிரோத கொலைகள் செய்வதில் பிரபல்யம் பெற்றவர். எனவேதான் அவர் திடீரென எனக்கு காவலுக்கு வந்ததும் என்னையும் கொலை செய்யவே வந்திருப்பதாக தோழர்கள் சந்தேகம் கொண்டனர். இதனால் தோழர்களின் ஆலோசனைப்படி எனக்கு இவரால் ஆபத்து என்றும் எனக்கு பாதுகாப்பு தருமாறு கோரி கொடைக்கானல் நீதிபதியிம் மனுக் கொடுத்தேன். மனுவைப் பெற்றுக்கொண்ட நீதிபதியோ இது குறித்து விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் தான் எனது மனுவை உயர்நீதி மன்றத்திற்கு அனுப்புவதாக கூறினார். ஆனால் எனது தோழர்களோ தாங்கள் என்னை அந்த அதிகாரி அழைத்து செல்ல விடமாட்டோம் என ஒன்றாக கோசம் எழுப்பி நீதிபதியை தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்கள்.

நிலைமையை புரிந்து கொண்ட நீதிபதி என்னை திருப்பி அழைத்து செல்ல முடியாதவாறு கொடைக்கானல் கிளைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். வேலூரில் இருந்து அழைத்து வந்த காவல் துறை அதிகாரிகளுக்கோ என்னை மீண்டும் வேலூரில் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். கொடைக்கானல் கிளைச் சிறை அதிகாரிகளோ என்னை அங்கு வைப்பதற்கு பாதுகாப்பு இல்லை என்று எற்க மறுத்துவிட்டார்கள். காவல் துறை அதிகாரிகள் சென்னை மதுரை என்று எல்லா இடமும் பேசிவிட்டு இறுதியாக என்னிடமே வந்து இதை தீர்த்துவைக்கும்படி கேட்டனர்.

நான் தோழர்களிடம் கலந்துபேசிவிட்டு சைலேந்திரபாபு நீதிபதியிடம் எனது உயிருக்கு உத்திரவாதம் அளிப்பதாக வாக்குறுதியளித்தால் நான் Nவுலூருக்கு திரும்பிவர சம்மதிப்பதாக கூறினேன். நாம் கேட்டுக்கொண்டபடி வேறு வழியின்றி சைலேந்திரபாபு நீதிபதியிடம் வாக்குறுதியளித்தார். அதன்படி என்னை வேலுர் சிறப்பு முகாமில் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

இங்கு இதை நான் நினைவுகூருவது ஏனெனில் முதலாவது நாகராசன் என்ற தோழர் சைலேந்திபாபுவினால் சட்டவிரோத மாக சுட்டுக் கொல்லப்பட்டதை யாவரும் அறிய வேண்டும். அதேபோல் எனக்கும் நடக்கவிடாமல் எனது தோழர்கள் என்னைக் காப்பாற்றியதை நான் நன்றியுடன் நினைவு கூரவேண்டும்.

தேவாரம் தர்மபுரியில் பல அப்பாவிகளை நக்சலைட்டு எனக் கொன்றார். அதன் பின் குட்டி தேவாரம் சைலேந்திரபாபு தோழர் நாகராசனைக் கொன்றார். இடையில் தோழர் தமிழரசன் மற்றும் ஜந்து தோழர்கள் பொலிசாரின் சதியில் கொல்லப்பட்டனர். தொடரும் இந்த சட்ட விரோதக் கொலைகளுக்கு முற்றுப்பள்ளி வைப்பது யார்? இந்த அரச பயங்கரவாதம் எப்போது நிறுத்தப்படும்? மக்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்!

• தோழர் தியாகுவும் உண்ணாவிரத போராட்ட பாதையும்.

• தோழர் தியாகுவும் உண்ணாவிரத போராட்ட பாதையும்.

தோழர் தியாகு கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நிலையிலும் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அவர் உணர்வும் அர்ப்பணிப்பும் உண்மையில் மதிக்கத் தக்கது. பாராட்டத்தக்கது.

தோழர் தியாகு நக்சலைட்டு அமைப்பில் தனது புரட்சிகர பயணத்தை நடாத்தியவர். ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சியை மேற்கொள்ள முனைந்தவர். நீண்டகாலம் சிறைத் தண்டனை பெற்றவர். ஆசான் கால் மாக்ஸ் அவர்களின் மூலதனம் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர். அப்படிப்பட்டவர் இன்று உண்ணாவிரதம் இருந்து தனது உடலை வருத்துவது வேதனையளிக்கிறது.

நான் தமிழ்நாடு சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த வேளையில் பல முறை உண்ணாவிரதம் இருந்துள்ளேன். சிறையில் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேறு வழியின்றி இவ் வழிகளைத் தேர்ந்தெடுதோம். ஒருமுறை துறையூர் சிறப்பு முகாமில் பத்திரிகை படிக்க அனுமதி கோரி 14 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து இறுதியாக திருச்சி கலெக்டர் வந்து கோரிக்கையை நிறைவேற்றினார். எனவே உண்ணாவிரதத்தின் வலியை நன்கு உணர்ந்தவன் நான்.

சிறையில் வேறு வழியின்றி உண்ணாவிரதம் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் எனக்கு இந்த உண்ணாவிரத போராட்டங்களில் நம்பிக்கையில்லை. ஏனெனில் அரசு ஒருபோதும் எம்மீது இரங்கப் போவதுமில்லை. எமது கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதுமில்லை. கடந்த காலங்களில் பல முறை சிறப்பு முகாம்களில் உள்ளே இருப்பவர்களும் அவர்களுக்காக வெளியே இருப்பவர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தும் தமிழக அரசு இன்னும் சிறப்பு முகாம்களை மூடவுமில்லை. அங்கிருப்பவர்களை விடுதலை செய்யவுமில்லை.

எனவே உண்ணாவிரதப் போராட்டதின் மூலமோ அல்லது தீக்குளிப்பு மூலமோ எமது உயிர்கள் இனியும் வீணாகப் போகக்கூடாது. எமது மாக்சிய ஆசான்கள் கூறியது போல் ஆயுதப் போராட்டத்தின் மூலமே எமது இலட்சியங்கள் நிறைவேறும் என்பதை புரிந்து கொள்வோம்.

இதனை நன்கு புரிந்து கொண்ட தோழர் தியாகு எதற்காக தனது உடலை வருத்துகிறார்? எதற்காக வீணாக தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்? முத்துக்குமார் முதல் எத்தனை தியாகிகள் தங்கள் உடலை தீயிட்டுக் கொளுத்தினார்கள்? அவர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்தும் நாம் கண்ட பலன் என்ன? சில மாதங்களுக்கு மன்னர் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்களே! இந்திய அரசு சிறு துளிகூட மனம் இரங்க வில்லையே? அரக்க குணம் படைத்த அரசுகள் ஒருபோதும் எமது உயிரை மதிக்கப் போவதில்லை. எனவே மதிப்பு மிக்க எமது உயிர்கள் வீணாக மடியக்கூடாது.

நான் 1991ம் ஆண்டு கியூ பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு இரகசியமாக வைத்து துன்புறுத்தப்பட்டபோது தோழர் பொழிலன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தோழர் தியாகுவே உடன் விரைந்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவர் அவ்வாறு தாக்கல் செய்தமையினாலே நான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டேன். அன்று எனது ஒரு உயிரைக் காப்பாற்றிய தோழர் இன்று எமது மக்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அவரது உணர்வுகளை மதிக்கிறேன். பாராட்டுகிறேன்.

ஆனால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். அவரை நம்பும் இளைஞர்களுக்கு ஆயுதப் போராட்டத்தை போதிக்க வேண்டும். தோழர் தமிழரசன் பாதையில் அவரே அந்த வகையான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

துப்பாக்கி குழாயிலிருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார் தோழர் மாவோ அவர்கள். எனவே ஆயுதப் போராட்டமே புரட்சிக்கான பாதையாகும். அகிம்சைப் பாதையானது சரணாகதிப் பாதையாகும். அது ஆளும் வர்க்கத்திற்கு துணை போகும் பாதையாகும். எனவே தோழர் தியாகு உண்ணாவிரதம் என்னும் அகிம்சை வழியை விட்டு தோழர் தமிழரசன் காட்டிய புரட்சிப்பாதையை மக்களுக்கு காட்ட வேண்டும் என விரும்புகிறேன்.

இவள் கேட்டதெல்லாம் தமது காட்டை அந்நியருக்கு விற்க வேண்டாம் என்ற ஒன்று மட்டுமே!

 இந்த பெண் 2ஜி கோடி ஊழல் செய்யவில்லை.
• இந்த பெண் மீது சொத்து குவிப்பு வழக்கு இல்லை.
• இந்த பெண் ஆச்சிரமம் வைத்திருக்கும் சாமியாரும் இல்லை.
• இவர் சிறுவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்யவில்லை.

எனினும் இந்த பெண் படைகளால் கற்பழிக்கப்ட்டு 
சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்!

இவள் தனக்கு ரி.வி கேட்கவில்லை.
இவள் தனக்கு இலவச அரிசிகூட கேட்கவில்லை.
இவள் கேட்டதெல்லாம் தமது காட்டை
அந்நியருக்கு விற்க வேண்டாம் என்ற ஒன்று மட்டுமே!

தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இடத்தை கனிமவளம் எடுப்பதற்காக வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்கவேண்டாம் என்று கோரியதால் இந்தப் பெண் ஒரு மாவோஸ்டு என்று முத்திரை குத்தி படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்.

சிரியாவில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக கண்ணீர் சிந்தும் அமெரிக்கா மற்றும் முதலாளித்துவ நாடுகள் இந்தியாவில் இந்த பழங்குடி மக்கள் மீது நடைபெறும் கொலைகள், கற்பழிப்புகள், சொத்துகளை சூறையாடல் என்பன குறித்து ஏன் அக்கறை கொள்வதில்லை?

பாலஸ்தீனத்தில் கல்லெறியும் சிறுவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லும் இஸ்ரவேல் போல் இந்தியாவில் அப்பாவி பழங்குடி மக்களைக் கொன்றுவிட்டு அவர்களை நக்சலைட் பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு கூறுகிறது.

இந்திய அரசு காஸ்மீரில் அப்பாவி மக்களை கொல்லும்போது நாம் ஏன் என்று கேட்கவில்லை.
இந்திய அரசு பழங்குடி மக்களை கொல்லும்போது நாம் ஏன் என்று கேட்கவில்லை.
இறுதியாக இந்திய அரசு எம்மை கொன்ற போது ஏன் என்று யாருமே கேட்கவில்லை.

இந்திய அரசு பயங்கரவாதிகளை ஒழிப்பதாக கூறி முதலில் பஞ்சாப் போராட்டத்தை நசுக்கியது. பின்னர் காஸ்மீர், நாகலாந்து, மணிப்பூர் போன்ற போராட்டங்களை நசுக்கியது. இறுதியாக இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியது. தற்போது பழங்குடி மக்களின் போராட்டத்தை நசுக்க முனைகிறது.

இந்த அநீதிகளுக்கு எதிராக அனைத்து போராட்ட சக்திகளும் ஒன்றினைந்து போராடுவதன் மூலமே இந்திய அரசை தோற்கடிக்க முடியும். இதை உணர்ந்து அனைவரும் ஒன்றினைவோம்.

பெண்ணாகப் பிறந்தது இவள் குற்றமா? அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தது குற்றமா?

• இந்த பெண் பாகிஸ்தானின் கைக்கூலியா? அல்லது

• சீனா அரசின் ஏவல் நாயா? அல்லது

• அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாளா? அல்லது

• ஏழைகளை சுரண்டும் அம்பானியின் குடும்பத்து பெண்ணா?

எதற்காக இந்த பெண் இவ்வளவு ஆக்கிரோசமாக இழுத்து செல்லப்படுகிறாள்?

அப்படி என்ன தவறு செய்துவிட்டாள் இந்த பெண்?

இந்தியாவில் பிறந்தது இவள் குற்றமா?

பெண்ணாகப் பிறந்தது இவள் குற்றமா? அதுவும்

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தது குற்றமா?

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த இப் பெண் வீதியில் செருப்பு அணிந்து நடந்துவிட்டாள் என்பதற்காகவே இவ்வாறு உயர்சாதி இளைஞனால் இழுத்து செல்லப்பட்டு தண்டிக்கப்படுகிறாள்.

இந்தியா வளர்ந்து விட்டது. இந்தியா வல்லரசாகிறது என்கிறார்கள். ஆனால் இன்றும் தாழ்த்ப்பட்ட சாதியில் பிறந்தற்காக பெண்கள் தண்டிக்கப்படுவது மாகா வெட்கம் ஆகும்.

நூறு அம்பேத்கார,; நூறு பெரியார் பிறந்து வந்தாலும் இந்த ஆதிக்க சாதி திமிரை அடக்க முடியாது. தீண்டாமை கொடுமைகளை நீக்கவும் முடியாது என்பதையே இவ்வாறான சம்பவங்கள் காட்டுகின்றன.

இந்தளவுக்கு தீண்டாமைக் கொடுமைகள் இலங்கையில் இல்லையென்றாலும்கூட இன்றும்கூட அங்கும் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இந்த சாதீயம் புலம் பெயர்நாடுகளிலும் நாசூக்காக கடைப்பிடிக்கப்படுவதை நாம் காணலாம்.

லண்டனில் உள்ள கோயிலில் ஒன்றில் பிரசாதம் செய்வதற்கு உதவி செய்ய முனைந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சாதி காரணமாக அனுமதி மறுக்கப்ட்டிருக்கிறார். ஒரு வெள்ளையனையோ அல்லது வேற்று இனத்தவனையோ தம் மகள் மணமுடிக்க சம்மதிக்கும் பெற்றோர் தமிழனில் சாதி குறைந்தவனை மணப்பதற்கு சம்மதிப்பதில்லை. தமிழ்தேசியம் அந்தளவிலேயே இருக்கின்றது என்ற கசப்பான உண்மையைக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.

போராட்ட காலங்களில் துப்பாக்கியின் நிழலில் உறங்கிக் கிடந்த சாதீயம் தற்போது வீறு கொண்டு எழுந்துள்ளது. அது தன் கோர முகத்தை அனைத்து இடங்களிலும் காட்டுகிறது.

1960 களில் யாழ்ப்பாணத்தில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்டுகள் தீண்டாமைக்கு எதிராக போராடினார்கள். தற்போது மீண்டும் அத்தகைய புரட்சியாளர்களின் போராட்டங்களை எதிர் நோக்கி வரலாறு காத்திருக்கிறது.

புலவர் கலியப்பெருமாள்

1983 க்கு முன்னர் பெரும்பாலும் அனைத்து இயக்கங்களும் இந்திய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தனர். பின்னர் இந்திய அரசுக்கு அஞ்சி தொடர்புகளை துண்டித்துவிட்டனர் அல்லது வெளிப்படையாக தொடர்பு கொள்வதை தவிர்த்தனர்.

தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசனனின் தலைவர் என கருதப்பட்ட புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில் எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில் எழுதிய வரிகள் வருமாறு,

சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல் தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார். ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினேன். அடுத்து உங்கள் கட்சி ஆதரிக்கின்றதா என்று இராகவன் கேட்டார். எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்று சொன்னேன். வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் நல்ல உறவு இருக்கிறது. மாவோ எழுதிய ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்.

நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். அதன் பின் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது பற்றி பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள் அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும் மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர். பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசும்போது நான் பார்த்த தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள் தொண்டர் அவர் என வாயாரப் புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தோழர் தமிழரசன் புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து இயக்க தலைவர்களையும் சந்தித்து உதவி பெற முயன்றார். ஆனால் எந்த இயக்க தலைவர்களும் உதவி செய்ய மட்டுமல்ல அவரை சந்திப்பதற்கே மறுத்துவிட்டார்கள். புலிகள் இயக்கம் இறுதிக் காலங்களில் 303 ரைபிள, ரிப்பிட்டர் போன்ற அந்த கால ஆயுதங்களை பாவிக்காமல் புதைத்ததாக அறிகிறோம். ஆகக்குறைந்தது அந்த மண்ணில் புதைத்த ஆயுதங்களையாவது தோழர் தமிழரசனிடம் கொடுத்திருக்கலாம். அவர்கள் தாங்களும் கொடுக்கவில்லை. எங்களையும் கொடுக்கவிவில்லை. ஒரு வேளை தமிழரசன் விரும்பிவாறு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தவிர்த்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது!