Saturday, March 31, 2018

தோழர் தமிழரசன் கருத்துகள் பரவட்டும்

•தோழர் தமிழரசன் கருத்துகள் பரவட்டும்
தமிழ்நாடு விடுதலை விரைவில் நிகழட்டும் !!
திரைப்பட இயக்குநர் நிரோஜன் அவர்கள் எனது “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
நிரோஜன் அவர்கள் இயக்கி நடித்த திரைப்படம் “கூட்டாளிகள்”. இப் படம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த தமிழின உணர்வாளரான நிரோஜன் அவர்கள் எனது நூலை “நாம் தமிழர்” கட்சி தலைவர் சீமான் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதோடு அது குறித்து தனது கருத்துக்களை எனக்கு அறியத் தந்துள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள நிரோஜன் அவர்களுக்கும் அவருக்கு நூலை வழங்கிய சீமான் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
ஈழத்து படைப்புகளாக இருந்தாலும் சரி. நூல்களாக இருந்தாலும் சரி. விரும்பி படிப்பேன்.
அந்த வகையில் தோழர் பாலன் அண்ணா எழுதிய ‘ஒரு ஈழத்து போராளியின் பார்வையில்’ “தோழர் தமிழரசன்” என்ற நூலை அண்ணன் சீமானிடமிருந்து பெற்று படிக்க நேர்ந்தது.
உண்மைக்கு மிக நெருக்கமாகவும், பல வரலாற்று தகவல்களை இலகுவாக தெரிந்துகொள்ளவும், எல்லோரும் இலகுவாக நூலைப் படிக்கும் வண்ணம் எழுத்துருவாக்கம் அமைந்துள்ளது.
இந்த நூலை முடிந்தவரை வாங்கிப் படியுங்கள். நூலின் ஆசிரியர் தோழர் பாலன் அண்ணா அவர்களுக்கு தம்பியின் வாழ்த்துகளும் நன்றிகளும்..
- தமிழ் வாழ்க!

No comments:

Post a Comment