Wednesday, September 30, 2015

தோழர் தமிழரசனின் அறிக்கைகள் நூலாக வெளியீடு

தோழர் தமிழரசனின் அறிக்கைகள் நூலாக வெளியீடு
எதிர்வரும் 02.10.15 யன்று காலை 11 மணியளவில் சென்னை செய்தியாளர் மன்றத்தில் தோழர் தமிழரசன் இரு அறிக்கைகள் கொண்ட நூல் தமிழ்தேசமக்கள் கட்சியினரால் வெளியிடப்படுகிறது.
சுமார் 30 அண்டுகளுக்கு முன்னர் தோழர் தமிழரசனால் தயாரிக்கப்பட்ட இரு முக்கிய ஆவணங்கள் இன்று தமிழ்தேச மக்கள் கட்சியினரால் நூலாக வெளியிடப்படுகிறது.
28 வருடங்களுக்கு முன்னர் தோழர் தமிழரசனை அடித்துக் கொன்றுவிட்டு அவரது இலட்சியங்களைக் கொன்றுவிட்டதாக கனவு கண்ட தமிழக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் இந்த நூல் வெளியீடு நிச்சயம் பேரிடியாக அமையும்.
தோழர் தமிழரசன் ஒரு கொள்ளைக்காரன், ரயிலுக்கு குண்டு வைத்த பயங்கரவாதி, மக்களைக் கொன்ற கொலைகாரன் என்றெல்லாம் விஷம பிரச்சாரம் செய்வோரின் முகத்திரையை இந் நூல் நிச்சயம் கிழித்தெறியும்.
• ஏன் தமிழ்நாடு விடுதலை அவசியம்?
• ஏன் சாதி விடுதலை அவசியம்?
• தமிழ்நாடு விடுதலைக்கும் சாதி விடுதலைக்குமிடையிலான தொடர்பு என்ன?
போன்றவை பற்றி தோழர் தமிழரசனின் கருத்துக்களை அறிந்துகொள்ள அனைவரும் இந் நூலை வாங்கிப் படிப்பது அவசியமாகும்.
தோழர் தமிழரசன் தமிழக மக்களின் விடுதலை பற்றி மட்டுமன்றி ஈழத் தமிழரின் விடுதலை குறித்தும் சிந்தித்தவர்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று எடுத்துக்கூறி தமிழக விடுதலையை முன்னெடுப்பதே ஈழ விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என காட்டியவர் தோழர் தமிழரசன்
எனவே தமிழக மக்கள் மட்டுமன்றி ஈழத் தமிழர்களும் தமது ஆதரவை இந் நூல் வெளியீட்டிற்கு வழங்குவது கடமையாகும்.

No comments:

Post a Comment